மழைவில் மனிதர்கள்

மழைவில் மனிதர்கள், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், செந்தில் பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. சின்னஞ்சிறு வயது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசாத்தியமான நினைவாற்றலுடன் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். மனிதர்களோடும், பிராணிகளோடும், பறவைகளோடும், பூச்சிகளோடும், தூக்கத்தோடும், தும்மலோடும், குறட்டையோடும், கொட்டாவியோடும், சப்தத்தோடும், நிசப்தத்தோடும், ஒட்டடையோடும் பின்னிப்பிணைந்திருக்கின்றன இந்த அனுபவ வெளிப்பாடுகள். ஆடு மேய்க்கும் பாட்டி, “பூவுதான் ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?‘’ என்பதும், “திருமணங்களைப் பற்றித் தெரியாது; ஆனால், விடுமுறைகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் அது’‘ என்று சிறுவயது […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, […]

Read more

கே.பாலசந்தர் வேலை டிராமா சினிமா

கே.பாலசந்தர் – வேலை, டிராமா, சினிமா – 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு ,சோம.வள்ளியப்பன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.152, விலை ரூ. 115. நாடகத்துறையிலிருந்து திரைத்துறையில் நுழைந்து நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்து, திரைத்துறைக்கென இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான “தாதா சாஹேப் பால்கே’ விருதினைப் பெற்று தமிழ்ப்பட உலகில் தனித்த மரியாதைக்குரிய இயக்குநராகத் திகழ்ந்தவர் மறைந்த கே.பாலசந்தர். அவரது பிறப்பு, குடும்பச் சூழல், பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, பக்கத்து கிராமத்தில் ஆசிரியர் பணி, சென்னையில் ஒரு […]

Read more

ஜெயகாந்தனும் நானும்

ஜெயகாந்தனும் நானும், தேவபாரதி, கலைஞன் பதிப்பகம். ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்! தேவாரதி எழுதிய ‘ஜெயகாந்தனும் நானும்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல்வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல்போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார். கண்ணதாசனின் ‘வனவாசம்’ மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை தேவபாரதி, ஜெயகாந்தனின் […]

Read more

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும், தருமி, எதிர்வெளியீடு, பக். 240, விலை 220ரூ. மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது. நூலாசிரியர் பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில் 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார். தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு […]

Read more

யோகியுடன் கொஞ்ச தூரம்

யோகியுடன் கொஞ்ச தூரம்,  எஸ்.பார்த்தசாரதி, நேசமுடன், சென்னை, பக். 304, விலை: ரூ.150. இந்நூல் யோகி ராம்சுரத்குமாருடன் பழகிய பக்தர்களின் அனுபவங்கள் அத்தியாய, அத்தியாயமாக அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில… “யோகியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து ஏதோ ஒன்று கனமாக, வேகமாக, வெள்ளமாகப் பரவி அனைவரையும் ஆட்கொள்ளும். அச்சமயத்தில் உடல் செத்துவிடும், மனம் நினைவை இழக்கும். உணர்வு உணர்வற்ற நிலையை அடையும்’ என்று நூலாசிரியர் பார்த்தசாரதி தமது அனுபவத்தை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். யோகி மீது ஒரு மூதாட்டி வைத்திருந்த பக்தி, 85 வயதான பக்தருக்கு அவரது […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. நினைவில் புரளும் ஜே.கே. ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது. ஜே.கே. மறைந்து […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர். ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் […]

Read more

இனியொரு கடவுள் செய்வோம்

இனியொரு கடவுள் செய்வோம், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 135ரூ. மரபின் பெருமை மாறாமல், மரபை எளிமைப்படுத்தி புதிய சந்தங்களில் எழுதப்பெற்ற மரபுக் கவிதைகளின் தொகுதி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —– கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 140ரூ. உழைக்கும் தொழிலாளர்கள், அடக்குமுறைக்கு ஆட்படும் பெண்கள், மக்கள் பற்றியும் தன் படைப்புகள் வழி பதிவு செய்த கந்தர்வன் படைப்புகள் பற்றியும் அவரது வாழ்க்கை […]

Read more
1 4 5 6