ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அ. இராகவன், அழகு பதிப்பகம், விலைரூ.220, தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது. திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்ளாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் இரா.நாராயணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.100 உயிரினங்களிடம் வள்ளுவர் கொண்டிருந்த அன்பை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். குறள்களில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம், தாவரங்கள், விலங்குகள், உயிரும் உடலும் என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. உயிரினங்கள் மீதான நெகிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. உரிய குறள்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. – ராம் நன்றி: தினமலர், 24/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000014324_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பொருநை – ஆதிச்சநல்லூர்

பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும்), முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், பக்.383, விலை ரூ.375. ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.  நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் […]

Read more

தமிழரைத் தேடி

தமிழரைத் தேடி, த.தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், பக்.326, விலை ரூ.250. ஓர் இனத்தின் பண்பாடுகளை வரையறுக்க அவ்வினத்தின் மொழியை முன்னிறுத்துவது உலக வழக்கம். அவ்வகையில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பிற இனத்தின் உடன்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழினம் உள்வாங்கியது. அதேநேரத்தில் தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்கள் பேணிக்காக்கப்பட்டன. தமிழர்களின் பண்பாட்டில் புகுந்த பிற இனங்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள் யார், அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் யாவை, அவர்களது தோற்றம், குடியேற்றங்கள் எங்கு எப்போது […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தான்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், விலை 220ரூ. தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஆதித்த நல்லூர் நாகரிக வரலாற்றை தமிழில் முதல் முறையாக விளக்கமாக ஆதித்தநல்லூரும் | எடுத்துக் கூறியவர் என்ற பெருமையைப் பெற்ற பொருநைவெளி நாகரிகமும் இந்த நூலின் ஆசிரியர், தமிழர்களின் ஆதிகால நாகரிகத் தன்மை குறித்து வியப்பான தகவல்களைத் தந்து இருக்கிறார். ஆதித்தநல்லுர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதையும், இரும்பை முதன் முதலாகக் கண் டுபிடித்தது தமிழர்களே என்பதையும் சான்றாதாரங்களுடன் தெரிவித்து இருக்கிறார். ஆதித்தநல் […]

Read more

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100 திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இறைவன் சிவபெருமானின் பெருமைகள் சுட்டப்படுகின்றன. ஆனால், உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், இந்த வரையறைக்குள் அடங்காமல், ஒழுக்க நெறியைக் காட்டுகிறது. கருப்பொருள்கள் பொதுவாக இருப்பினும் கருத்துக்கள் சற்று மாறுபட்டுள்ளன. ஒரு ஆய்வு நோக்கில் திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள பொதுவான 20 தலைப்புகளில் ஆராய்ந்து, ஒத்த கருத்துக்களையும், மாறுபட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்துள்ளார். திருக்குறள், […]

Read more

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல், கவிஞர் ஒளவை நிர்மலா, விழிச்சுடர் பதிப்பகம், விலைரூ.300. ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின் சமுதாயக் கட்டமைப்பு, அரசியல் நிர்வாகம், நீதி நெறிகள், குடும்ப உறவுகள், விளையாட்டுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், விழுமியங்கள் மேற்கோள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டு உள்ளன. குடிமக்கள் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தியதை சீவகசிந்தாமணி கூறுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது வரி வேண்டாமென, திறை விலக்கு அளித்து உள்ளான். கோவில் […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.144, விலை ரூ.150. பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சொற்கள் குறித்த விரிவான ஆய்வு நூல் இது. தொல்காப்பிய முதல் அதிகாரத்தின் முதல் இயலான நூன்மரபு என்பது சரியா? நூல் மரபு என்று அதைப் புரிந்து கொண்டால் என்ன பொருள் தரும்? என்பன போன்ற வினாக்களுக்கு ஆய்வு நோக்கில் இந்நூல் விடையளிக்கிறது, ‘தொல்காப்பிய முதல் இயல் நூன்மரபு அன்று. நூல் மரபே’ என்ற முதல் கட்டுரை. கேண்மியா, சென்மியா என்று பழந்தமிழ் இலக்கியங்களில் […]

Read more

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more
1 2 3 84