இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ். சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.175. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களின் தலைசிறந்த தமிழ்ப் படைப்புகள் எவை? அவர்களின் அரிய கருத்துகள் எவை என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது இந்த நூல். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் “சீறாப்புராணம்’ என்ற காப்பியமாகப் படைத்த உமறுப்புலவர், ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதிபதி மு.மு. இஸ்மாயில், “அக்னிச் சிறகுகள்’, “எழுச்சி தீபங்கள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு, கற்பகம் பதிப்பகம், விலை: ரூ.175. சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் […]

Read more

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும், ச.ந.பார்த்தசாரதி, மகாலட்சுமி பதிப்பகம், விலைரூ.150. கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப்படும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால். தமிழ் இலக்கியங்களில் பாவை நோன்பு குறித்தும், திருப்பாவையின் அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். சுவையாக உள்ளது. கண்ணன் குறித்து, 18 தலைப்புகளில் விளக்கியுள்ளார். திருப்பாவைப் பாடல்களின் விளக்கம், மிக எளிய முறையில், பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல் விளக்கம் முடிந்ததும் துணுக்குச் செய்தி என்ற […]

Read more

கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more

இலக்கியத் தென்றல்

இலக்கியத் தென்றல், உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், விலைரூ.100. பழந்தமிழ் இலக்கியங்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு; மொத்தம் 19 கட்டுரைகள். விவேக சிந்தாமணி, பரிபாடல், மணிமேகலை, குறுந்தொகை, ஏலாதி என பழைய இலக்கியங்கள். அருட்பா, பட்டினத்தார், இடைக்கால பாடல்கள். இணையத்தமிழ் பாரதி எனப் புதிய நோக்கில் கட்டுரைகள்.பசிப்பிணி என்னும் பாவி என, பவுத்த காப்பியமான மணிமேகலையில் உள்ள வரிகள் பசியின் கொடுமையை கூறும். இது மாதிரி கருத்தமைந்த பாடல்களை எடுத்துக் காட்டி விளக்குகிறார். பல்கலை மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன் நன்றி: […]

Read more

சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள்

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள், ம.சுஜாதா, காவ்யா, விலை 580ரூ. சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க காலப் பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இல்வாழ்க்கை, விருந்தோம்பல், உணவு முறை, வாணிபம், விளையாட்டு, சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், அழகுக் கலை ஒப்பனை ஆகியவை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது தகுந்த மேற்கோள்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் தெளிவுரை, முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.100. திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 29/12/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more
1 2 3 4 5 6 56