எப்போதும் எம்.ஜி.ஆர்.

எப்போதும் எம்.ஜி.ஆர்., எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.140. கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது, எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க, ஓர் அரசு ஊழியர் வருகிறார். ‘எனக்கு இப்போது தான் திருமணமாகி உள்ளது. மனைவியும் அரசு ஊழியர். ஆனால், அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்…’ என்கிறார். கணவனும், மனைவியுமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஒரே ஊரில் பணியாற்ற உத்தரவிடுகிறார். ‘கிராம கோவிலில் அன்றாடம் விளக்கேற்ற விரும்புகிறோம். அதற்கு எண்ணெய் வாங்க வழியில்லை…’ என்று, […]

Read more

நேருவின் வாழ்க்கை

நேருவின் வாழ்க்கை, தி.ஜ.ரங்கநாதன், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.150. மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பல்வேறு ஆங்கில புத்தகங்கள், நேரு எழுதிய புத்தகங்களின் துணை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை, 43 இயல்களாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது. எளிய மொழி, தடங்கலற்ற வாசிப்பை தருகிறது. இறுதியாக நேரு எழுதிய உயில் வாசகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அது நெகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தியா மீது நேரு கொண்டிருந்த பற்றையும், வளர்ச்சியில் செலுத்திய உழைப்பையும், அவரது வாழ்க்கை மாண்பையும் தெரிவிக்கிறது. படிக்க வேண்டிய வாழ்க்கை […]

Read more

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சு, என்.உமாதாணு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என பிரிக்கப்பட்டுள்ளது.பொது வாழ்வில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், கட்சியுடனான தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணித ஆசிரியராக பணிபுரிந்தது, ஆசிரியர் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியது மட்டுமின்றி, சுலபமாக கணித சூத்திரங்களை மாணவர்கள் மனதில் ஏற்றும் எளிய நடைமுறையை உருவாக்கியது பற்றியும் […]

Read more

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம்

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம், பசுபதி தனராஜ், கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பக்.336, விலை ரூ.300. அம்பேத்கரின் வாழ்க்கையை – சிந்தனைகளை- பணிகளை- சாதனைகளை அறிமுகப்படுத்தும் நூல். அம்பேத்கரின் இளமைப் பருவத்தில் அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்,அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கரின் சிந்தனையை பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் எழுதிய “கெளதம புத்தர்’ என்ற புத்தகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அம்பேத்கர் மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் […]

Read more

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது. காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே […]

Read more

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர்

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு, 18ம் நுாற்றாண்டில் வருகை தந்தவர். தன் பெயரைத் தைரியநாதர் என்று ஆக்கியவர். மதுரைப் புலவர் பெருமக்கள் வீரமாமுனிவர் என்றும், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர் என்றும் அழைத்து மகிழ்ந்தனர். தேம்பாவணி, அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலுார் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை, பெரியநாயகி மேல் பெண் கலிப்பா ஆகியவற்றை படிப்போர், வீரமாமுனிவரின் இலக்கிய ஆளுமையை உணர முடியும்.இந்த நுால் ஒரு இலக்கியப் […]

Read more

நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு, கொமடோர் அஜித் போயகொட, சுனிலா கலப்பதி, தமிழில்: தேவா, வடலி வெளியீடு, விலை: ரூ.220. வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் என்ற ஒன்று இல்லை; ஆனால், ஒரு அர்த்தத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியுமானால், அது தரும் அலுப்பையும் விரக்தியையும் நொறுக்க முடியும். கவிஞன் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி சொல்வதுபோல மரணத்தை ஒத்திப்போட நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடத்தில் உணரும் சவத்தன்மையை நம்மால் நிச்சயம் அகற்ற முடியும். கலை, அறம், உண்மை, நேசம் போன்ற ஏதோவொன்று அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது. இலங்கையின் கடற்படையில் […]

Read more

அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள், ராஜா வாசுதேவன், தழல் வெளியீடு, விலை: ரூ.250. அஞ்சலை அம்மாளுக்கு நம் தமிழக வரலாற்றில் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன. தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர். வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடியும், பெற்றெடுத்த பிள்ளையோடும் சிறையில் இருந்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. காந்தி, ராஜாஜி, பெரியார், ஓமந்தூர் ராமசாமி, காமராஜர் என முக்கியமான தலைவர்களோடு அரசியல் ஆலோசனை நடத்தியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்படி அஞ்சலை அம்மாளைப் […]

Read more

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் நா. மகாலிங்கம் , பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் முன்னோர்கள் குறித்தும் […]

Read more

ஜீவா

ஜீவா, தி.வெ.ரா., அருணா பதிப்பகம், விலைரூ.200. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தின் வாழ்க்கையை மேடையில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாடக நுால். அவர் மறைந்தபோது, தலைவர்கள் வழங்கிய இரங்கல் செய்தியுடன் முதல் காட்சி துவங்குகிறது. ஐம்பதாம் காட்சியில் ஜீவாவின் மகள் குமுதாவின் அரவணைப்பில் உயிர் பிரிவது போல் காட்சியாக்கப்பட்டுள்ளது. இடையில் 48 காட்சிகளிலும், அவரது வாழ்க்கை வரலாறு பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. நாடக பாத்திரங்கள், உண்மை மாந்தர்கள் என்ற காரணத்தால், உரையாடலில் அந்த காலத்தில் பேசிய மொழிநடையை அப்படியே வழங்கியுள்ளார். ஜீவா […]

Read more
1 2 3 4 5 6 46