கதை இல்லாதவனின் கதை

கதை இல்லாதவனின் கதை, முனைவர் த.விஷ்ணு குமாரன், சாகித்திய அகாடமி, பக். 544, விலை 400ரூ. மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பேராசிரியர் த.விஷ்ணு குமாரன். மலையாளம், ஜெர்மன், ஆங்கிலம் முதலான மொழிகளை நன்கு அறிந்த தமிழ்ப் பேராசிரியர் என்பதால், மொழிபெயர்ப்புஉலகில் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் பெற்று உள்ளார். மலையாளத்தில் வீட்டை, ‘மனை’ என சொல்வது வழக்கம். மனை என்றால் நாம் கட்டுவது போன்ற அடுக்குமாடி வீட்டையோ அல்லது நான்கு பக்கமும் நடமாடுவதற்கு […]

Read more

சிகரம் பேசுகிறது

சிகரம் பேசுகிறது, வி.கிருஷ்ணமூர்த்தி, தங்கத்தாமரை பதிப்பகம், பக்.424, விலை ரூ.300. கும்பகோணம் அருகிலுள்ள கருவேலி என்னும் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், தனது 11 ஆவது வயதில் தாயை இழந்தார். சென்னையில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று தந்தை சென்றுவிட, தனது மூத்த சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், பட்டப் படிப்பு படிக்க வசதியில்லாததால், எலெக்ட்ரிகல் என்ஜினிரிங் பட்டயப்படிப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவரே பின்னாளில் பிஎச்இஎல், மாருதி, ஸெயில் என்னும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆகிய நிறுவனங்களில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். “உற்பத்தித்துறையில் […]

Read more

ஐயா (எ) 95 வயது குழந்தை

ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 பிள்ளை பாடிய தந்தை தமிழ் கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, “உன் கூட்டாளியையெல்லாம் […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்,  தஞ்சை வெ.கோபாலன், அன்னம், பக்.100, விலை ரூ.80. சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் (1928), உப்பு சத்தியாக்கிரகம் (1930), கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1931), தனிநபர் சத்தியாக்கிரகம்(1941), ஆகஸ்ட் புரட்சி (1942), வடக்கெல்லை போராட்டங்கள், தெற்கெல்லைப் போராட்டங்கள் என பல மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடி எட்டுமுறை சிறை சென்றவர் ம.பொ.சிவஞானம். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதே, ஆந்திர மாநில காங்கிரஸ்காரர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டு வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தியவர்; காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் […]

Read more

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250. சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் […]

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு, மிகையீல் நைமி, தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை: ரூ.150. தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்… இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், […]

Read more

வழிகாட்டும் வாழ்வு

வழிகாட்டும் வாழ்வு, மாயில் திர்மிதீ, அரபுமூலம் – தமிழாக்கம் – அடிக்குறிப்பு, ரஹ்மத் பதிப்பகம், விலை: ரூ.300 தமிழில் ஹதீஸ் தொகுப்புகளின் மொழியாக்கங்களை வெளியிட்டுவரும் ரஹ்மத் பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு இது. இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்களின் ‘அஷ்ஷமாயிலுல் முஹம்மதியா’ ஹதீஸ் தொகுப்பின் தமிழாக்கமே ‘ஷமாயில் திர்மிதீ’. 56 பாடங்களாக 415 ஹதீஸ்கள் இத்தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இறைத்தூதர் நபிகளாரின் தோற்றத்தையும் அவரது பேரியல்புளையும் நன்னடத்தைகளையும் பற்றற்ற எளிய வாழ்வையும் குறித்து தெளிவாகப் பேசும் இத்தொகுப்பின் தமிழாக்கம் அரபு மூலத்துடனும் அடிக்குறிப்புகளுடனும் வெயிடப்பட்டுள்ளது. இப்ராஹீம் அல்பாஜூரீ அவர்களின் அரபி விரிவுரை உள்ளிட்ட […]

Read more

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.444, விலை ரூ.360. காமராசருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக கூறியுள்ளார்.விருதுபட்டி என்ற சிற்றூரில் பிறந்த, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத காமராசர், இளம் வயதிலேயே தந்தை இழந்ததும், கடைகளில் வேலை செய்ததும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்ததும், பதவியைப் பெரிதாக நினைக்காததும், ஏழை மக்களின் நலன் என்ற அடிப்படையில் முடிவுகள் எடுத்ததும், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருந்தாலும் எளிய […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம், பக். 148, காலங்கள் கடந்து போயினும் பாரதியார் பாடல்களின் வாசம் உலகெங்கும் வானளாவி நித்தியமாய்க் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டக் கொந்தளிப்புகளின்போது சற்றும் அஞ்சாமல் வீரியமாகப் பாடி, பாமரர்களைத் தட்டியெழுப்பி மக்கள் மனதில் அழியாத தடம் பதித்த மகாகவியை, உலக வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டது. விழித் தீப்பந்தங்களோடு விடுதலைக்குப்பாடிய பாரதியின் வரலாற்றை, இக்கால இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிய வேண்டும். பாரதியின் இளமைப்பருவம், தமிழ்ப்பற்று, தேசப்பற்று, […]

Read more
1 4 5 6 7 8 46