வீட்டு வைத்தியர்

வீட்டு வைத்தியர், டாக்டர் தி.சே.செள.ராஜன், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.390 ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் தி.சே.செள.ராஜன் சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றிருந்த காலகட்டத்தில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர் எழுதிய புத்தகம் இது. முதற்பதிப்பு வெளியானது 1945-ல். அவருடன் சிறையில் இருந்த ராஜாஜியே இந்தப் புத்தகத்துக்குச் சுவையான முன்னுரை எழுதியிருக்கிறார். உடல் பாகங்கள் தொடர்பான விளக்கங்கள் தொடங்கி, பல்வேறு நோய்கள் தொடர்பான அறிகுறிகள், நோய்க்கான எளிய மருத்துவ முறைகள், சுகாதார மேம்பாட்டுக்கான எளிய […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, டாக்டர் கு.கணேசன், கிழக்கு பதிப்பகம், பக். 135, விலை 140ரூ. டாக்டர் ஆன நுாலாசிரியர் தமிழ் நுாலாக இதைப் படைத்திருப்பது சிறப்பாகும், உடலில் ஒவ்வாத கிருமிகளை வெளியேற்றும் முறையை சுருக்கமாக அலர்ஜி எனலாம். இதற்கான மருத்துவ விளக்கங்களை தரும் ஆசிரியர், சாதாரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்துகளை இஷ்டப்படி வாங்கிச் சாப்பிட்டு ஒவ்வாமையை வரவேற்கக்கூடாது என்கிறார். அழகுசாதனப் பொருட்கள், அதிக வெயிலில் அலைச்சல் உட்பட பல அலர்ஜி கூறுகளை ஏற்படுத்தும் என்ற அவரது கருத்துக்கள் உட்பட பல விஷயங்கள் பலருக்கும் பயன்படும். நன்றி: […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை,  முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்,  பக்.188, விலை ரூ.130. போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது. மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே […]

Read more

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, டாக்டர் ஓ.சோமசுந்தரம், ஆசிரியா வெளியீடு, விலை 350ரூ. அடுத்த ஆண்டு, 150வது பிறந்த நாளை கொண்டாடும் சிறப்பிற்குரிய மருத்துவமனையின் சேவைகளைச் சொல்கிறது இந்நுால். கிழக்கிந்திய கம்பெனியின் துவக்க கால தொடர்புகளை கூறும் இந்நுால் வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டதன்று; தாம் கண்டதையும், கேட்டதையும், உற்றதையும் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளையும் விளக்கும் இந்நுால், இன்றைய மாணவர்களுக்கு சிறந்த வரலாற்றுப் படிப்பினையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி,  கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், பக்.133, விலை ரூ.140. அலர்ஜி குறித்து எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் விடையளிக்கும் நூல். தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த வேதிப் பொருள்கள் போன்ற ஏராளமான காரணங்களால் காய்ச்சல், தலைவலிக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்பட வைப்பது அலர்ஜிதான். இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது, அதன் வகைகள், அதற்கான சரியான மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து தெளிவாக இந்நூல் விளக்குகிறது.நாகரிகம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்களை […]

Read more

ஆறாம் திணை

ஆறாம் திணை, மருத்துவர் கு. சிவராமன், விகடன், விலை 235ரூ.   உடல்நலம், உணவு ஆகிய அம்சங்கள் சார்ந்து பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் எழுதிய பிரபல புத்தகம். நாம் வாழும் உலகம், நமது உடல்நிலை பற்றி புதிய வெளிச்சத்தைத் தருகிறது. நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000021990.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம், மோகன் சுந்தரராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மரபணு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்போது பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. பாக்டீரியாவின் மரபணுவில் வேறுபாடுகள் தோன்றி மருந்துகளைச் செயலிழக்கக் செய்துவிடுகிறது. ஆர்டெமிசினின் மருந்து, பென்சிலின் ஆகியவை ஒரு நோயாளியின் உடலில் செயல்படாமல் போவது இதனால்தான். நமது உடலில் வலி தோன்றுவதற்குக் காரணமான மரபணு எஸ்என்பி -9 ஏ. இது உடலில் சோடியம் செல்லும் பாதைகளில் ஒன்றான என்ஏவி 1.7 என்பதை ஒழுங்குபடுத்துகிறது. இந்தப் பாதையைச் செயலிழக்கச் செய்துவிட்டால், கொதிக்கும் […]

Read more

நோய் அரங்கம்

நோய் அரங்கம், கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை: ரூ.275 மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. […]

Read more

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம்

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம், எஸ்.ஜி.ஜெயராமன், பக்.196, விலை ரூ.195. படைப்பு ஆற்றல்களாக விளங்கும் குண்டலினி, ஜீவசக்தி, பிராண சக்தி ஆகிய மூன்றும் ஒன்று கூடி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதார ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்த மூன்று ஆற்றல்களும் மனித உடலில் முறையாகச் செயற்படும்போது மனிதர்களை நோய்கள் நெருங்குவதில்லை. ஆனால் இந்த ஆற்றல்கள் மனிதர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால் நோய் வாய்ப்படுவார்கள். அப்போது  பிரபஞ்சத்தில் உள்ள உயிராற்றல்களை மனித உடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டால், நோய்களிலிருந்து விடுபட முடியும். இதற்கான வழிகளை புத்தரின் கடைசிப் […]

Read more

மருந்தில்லா சிகிச்சை முறைகள்

மருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100. மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், […]

Read more
1 3 4 5 6 7 32