கொரோனா உலகம்

கொரோனா உலகம், ப.திருமலை, தமிழர் ஆய்வு மையம், விலைரூ.150. இந்த நுால் கொரோனாவை மருத்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதல்ல; மாறாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் கொரோனா காலத்தின் மீதான சமூக பார்வை. மட்டற்ற சுதந்திரத்தில் இருக்கும் உலகம், கொரோனா என்ற பேரிடரால் எப்படி முடங்கி, அடங்கிப் போனது; அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்ன; சமூக மாற்றங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அலசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருமலை. கொரோனா காலத்தின் செய்தி தொகுப்பாக அல்ல; நிகழ்காலத்தின் கண்ணாடியாக நுாலை தந்திருப்பதால், காலம் கடந்தும் […]

Read more

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும்

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும், டாக்டர் வி.நடராஜ், சாந்தா பப்ளிஷர்ஸ், விலைரூ.250. உலகளவில் கற்றல், கற்பித்தலுக்காக, குழந்தைகளின் நலன் கருதி பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கற்றல் திறன் என்பது மொழித்திறன். அதன் கல்வி வளர்ச்சியும், சமூகத்தில் உயர்வுகளும் முக்கிய காரணிகளாகும். இந்த நுால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதன் மேம்பாடு என துவங்கி, 10 தலைப்பின் கீழ் பல உட்தலைப்புகளை கொண்டு முழுமையான கற்றலுக்கான நுாலாக அமைந்துள்ளது. மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் முக்கியத்துவம் […]

Read more

பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ்,  பக்.312, விலை ரூ.350. மனித வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் பயம் ஏற்படுகிறது. ஆழ்மனம் பாதிக்கப்பட்டால் பயம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால், அது மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கிறது. பயமும் பலவிதங்களில் ஏற்படுகிறது. நிறங்களைப் பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது. நாயைப் பார்க்கும்போது, கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போது சிலருக்குப் பயம் ஏற்படுகிறது. இடி இடித்தால் பயம், ரத்தத்தைப் பார்த்தால் பயம், சாலையின் குறுக்கே கடந்து செல்ல பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் பயம் என்று பலவித பயங்கள் […]

Read more

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170 கொரோனா தொற்றின் துவக்கம் முதல், எட்டாம் கட்ட ஊரடங்கு வரை நோய் பரவலையும், பாதிப்புகளையும் விளக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைக் கால வரிசையில் விவரிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் செய்த மாற்று ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன. எல்லா ஊடகங்களிலும் கொரோனாவின் பெயர் தான் பிரதானமாகக் காணப்படுகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முக கவசம் […]

Read more

சிடுகா மருத்துவம்

சிடுகா மருத்துவம், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.250 சித்த மருத்துவத்தில் ஓரிரு மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடுகா மருத்துவமுறைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயையும் தலைப்பாகத் தந்து, நோய்களுக்கு மருந்து உருவாக்கிப் பயன் கொள்ளும் செயல்முறைகளைத் தந்து, நோய்களுக்கான காரணங்களும், பல நோய்களுக்கு மூலிகை சார்ந்த எண்ணெய்களின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ முறைகளில் அன்றாட வாழ்வில் நுகரும் அரிய கனிகள், கீரைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளின் அளப்பரிய பங்கை அறிய முடிகிறது.மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படும் […]

Read more

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், கானமஞ்சரி சம்பத்குமார், திருவரசு புத்தக நிலையம், பக். 824, விலை 450ரூ. காய்கறிகள், பழங்கள், மலர்கள், எண்ணெய் போன்றவற்றின் தனித்தனி மருத்துவ குணம் குறித்தும், பல்வேறு நோய்களுக்கு சித்தர்கள் கூறியுள்ள மருத்துவ முறைகளையும் விளக்கி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான தகவல்களோடு, மூலிகைகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன. ‘லங்கணம் பரம அவுஷதம்’ என உண்ணா விரதம் குறித்தும், நான்கு வகை மருத்துவ மூறைகளையும், காயகல்ப முறையையும் கூறியுள்ளது. பயனுள்ள தொகுப்பு. -பின்னலூரான். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031026_/ […]

Read more

லயம்

லயம்,  க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.100, விலை  ரூ.100. நேரத்துக்குப் பசிப்பது, தூக்கம் வருவது எல்லாமே உடல் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையே காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளையே லயம் என்கிறார் நூலாசிரியர். வேலை காரணமாகவோ, இதர காரணங்களினாலோ நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை; உண்ண வேண்டிய நேரத்தில் உண்பதில்லை. இது பல்வேறு உடல் நல, மன நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. உடலின் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும்? என்பதை நூல் விளக்குகிறது. நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? […]

Read more

 இப்படியும் மனிதர்கள்

 இப்படியும் மனிதர்கள்,  சீ.சந்திரசேகரன், தொகுப்பாசிரியர்: ந.க.மங்களமுருகேசன், பகவதி பதிப்பகம்,  பக்.160, விலை ரூ.100;  உளவியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பலதரப்பட்ட நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றுக்கு அவர் அளித்த சிகிச்சைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உளவியல் மருத்துவர் என்பதால், அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதைகளைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. எனினும் மருத்துவரீதியான பல அரிய தகவல்கள், உண்மைகள் நூல் முழுவதும் உள்ளன. மனித வாழ்வில் இவ்வளவு மனநலப் பிரச்னைகளா? […]

Read more

பழ மருத்துவம்

பழ மருத்துவம், வீ.செந்தில்குமார், கோரல் பதிப்பகம், விலைரூ.100 கனிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிய விபரங்கள் என்ற முகப்புடன் வெளிவந்துள்ள நுால். உணவே மருந்து என்ற தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 36 கட்டுரைகள் உள்ளன. பழங்களின் பயன்பாடு, அவற்றில் உள்ள நுண் சத்துக்கள் விபரம், உடலுக்கு அவை தரும் ஆற்றல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. உணவில் கவனம் கொள்பவர்களுக்கு உதவும். நன்றி: தினமலர், 1/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more
1 2 3 4 5 32