தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.610 தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம், பேய், ஒற்றைக்கண் மனிதன், சீன ஒற்றர்கள், மீனழகி ஆகிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். ஏற்கனவே தொடர்கதையாக வாசித்தவர்கள், இப்போது படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். எளிமையான உரைநடையைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவர் தமிழ்வாணன். அவர் எழுதிய வாக்கியங்கள் நான்கு, ஐந்து சொற்களுக்குள் இருக்கும். பல தொடர்கள் ஒரு சொல்லாகவே அமைந்திருக்கும். […]

Read more

சின்னத்தாய் காவியம்

சின்னத்தாய் காவியம், கே.எஸ்.கே.நடேசன், ஓவியா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. அருகிலுள்ள குக்கிராமத்தில் தொடங்கும் இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கிறது.அதனால் ஏற்பட்ட வடுக்களோடு பஞ்சம் பிழைக்கச் சென்று,முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தின் வெற்றியையும் சித்திரிக்கிறது. உழைப்புதான் உயர்வை தரும் என்ற நம்பிக்கையை வாசிப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது. பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சில பிரிவு மக்களை அனுமதிக்க மறுப்பதை சின்னத்தாய் கதாபாத்திரம் எதிர்க்கிறது. சாதியக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுகிறது நூல். நாவலின் […]

Read more

அல்லிக்கேணி

அல்லிக்கேணி,  ராம்ஜீ நரசிம்மன்,  எழுத்து பிரசுரம், பக். 249, விலை ரூ. 270.   திருவல்லிக்கேணியின் காட்சியமைப்பை நம் முன் நிறுத்துவதில் தொடங்கி கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் வாழ்க்கையின் பரிமாணங்களை இந்நாவல் விவரிக்கிறது. நாம் நமது பால்ய பருவத்தில் விரும்புகிற ஒவ்வொரு சாகசத்தையும் அதனைத் தொடர்ந்து அடையும் பருவ மாற்றத்தையும் தன் எழுத்தில் சலிப்பு இல்லாமல் கொண்டு வந்து தந்திருக்கிறார் எழுத்தாளர் ராம்ஜீ நரசிம்மன். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் எட்டிப்பார்க்கும் நையாண்டித் தனம் வாசகர்களைக் கட்டிப்போட்டு அழைத்துச் செல்கிறது. தேர்ந்த கதையமைப்பு, நேர்த்தியான கதாபாத்திரங்கள், […]

Read more

ராஜ வனம்

ராஜ வனம், ராம் தங்கம், வம்சி. நாஞ்சில் நாட்டின் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நாவல். காடு, ஆறு, மலை, உயிரினங்கள், மரம், செடிகொடிகள், பறவை என நம்மைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்தும் உறவுகொண்டவை என்பதைக் கதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே புதியதைத் தெரிந்துகொள்வதும் விளங்காதவற்றைப் புரிந்துகொள்வதும்தான். அந்த வகையில் ராஜ வனம் ஒரு மாறுபட்ட பயணம். நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030932_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

விண்ணோடும் முகிலோடும்

விண்ணோடும் முகிலோடும், பானுமதி கண்ணன், இருவாட்சி, விலைரூ.150 இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தாலும், பிற பாத்திரங்களையும் கவனமாகப் படைத்துள்ளார். மலையாள வாடை கலந்த ஒரு மொழிநடையைப் பேச்சு மொழியில் பயன்படுத்தியுள்ளது கனம் சேர்த்துள்ளது. சென்னைத் தமிழ் – அதிலும் கோடம்பாக்கம் தமிழும் கொலுவிருக்கிறது. எப்போதோ நடந்த அரியலுார் ரயில் விபத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் விபத்தைக் காட்டி, தன் வரலாற்று அறிவுக்கு விளக்கம் தந்துள்ளார். சினிமாவில் இரண்டாம் நிலையில் நடிப்பவர்களும், […]

Read more

தீக்கொன்றை மலரும் பருவம்

தீக்கொன்றை மலரும் பருவம்,  அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், தமிழில்: லதா அருணாச்சலம், எழுத்து வெளியீடு, விலை: ரூ.499 பழமை தொடரும் சமூகங்கள், பண்பாடுகளின் மைய அச்சாகப் பெண்ணே கருதப்படுகிறாள். பெண்ணின் இயல்பான விழைவுகளையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்திப் பண்பாட்டைக் காக்கும் சமூகத்தின் சின்ன அலகாகக் குடும்பம் திகழ்கிறது. அரசியல் ரீதியான பாதுகாப்பின்மையும் மத அடிப்படையிலான வன்முறைகளும் அன்றாடமாகவுள்ள வடக்கு நைஜீரியாவைப் பின்னணியாகக் கொண்டு அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய நாவல் இது. 55 வயது விதவையான ஹஜியா பிந்தா ஜூபைரு, சமூகமும் குடும்பமும் விதிக்கும் வரம்புகளை […]

Read more

குஞ்ஞாலி

குஞ்ஞாலி, ஜ்வாலாமுகி ராஜ், கிருஷ்ணாலயா பதிப்பகம், விலைரூ.1500 இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நாவல். ஆதிவாசி பெண் குஞ்ஞாலியின் வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவள் பல்கலையில் பட்டங்கள் பெற்றும், மலையில் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்தாள். கல்லுாரியில் படித்த காலத்தில் தடகள வீராங்கனையாக விளங்கினாள். உணர்வுகளால் கட்டப்பட்டவருக்கு தடகள பயிற்சியாளருடன் உறவு ஏற்படுகிறது. பின், மற்றொருவனை திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. தவறான பழக்க வழக்கம் உள்ள கணவனை கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்திய விடுதலைப் போராட்டக் காலம், கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், […]

Read more

ராமோஜியம்

ராமோஜியம் ( நாவல்), இரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், பக்.624, விலை ரூ.600.   பொடி என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை ‘ராமோஜியம்’என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது. ராமோஜிராவ் – ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள். ராமோஜி – ரத்னாபாய் காதல் அரும்பியது  ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) – ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது – […]

Read more

சுதந்திரத்தின் நிறம்

சுதந்திரத்தின் நிறம், லாரா கோப்பா, தமிழில்: பி.ஆர்.மகாதேவன் தன்னறம் நூல்வெளி வேங்கிக்கால், விலை: ரூ.500 ஒரு கிராமத்தில் நிலச்சுவான்தார்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மக்களோடு போய் உரையாடுவதுதான் அவர்கள் அணுகுமுறையின் முதல் படி. நிலச்சுவான்தாரை மட்டுமே நம்பி வாழும் சூழலில் மக்களால் எப்படி அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க முடியும்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அதைச் சாத்தியப்படுத்தினார்கள். மக்களோடு தங்கியிருந்து, அவர்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு, அவர்களுள் ஒருவராகத் தங்களை உணர வைத்து நம்பிக்கையைப் பெறுவார்கள். பிறகு, மக்களையும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். ஒருகட்டத்தில், இரு […]

Read more

ஆதுர சாலை

ஆதுர சாலை, அ.உமர் பாரூக், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, விலை: ரூ.400 சரித்திரக் கதை, பயண நூல், அறிவியல் புனைவு என்பனபோல ‘ஆதுர சாலை’ ஒரு மருத்துவ நாவல். மக்களுக்கான மருத்துவ சேவையைத் தொற்றிய வணிகமய நோய் பற்றிப் பேசுகிற, பாரம்பரிய மருத்துவ அறிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் அரசியலைக் காட்டுகிற, நோயும் மரணமும் சார்ந்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திப் பின்னப்பட்டிருக்கும் ஊழல் வலையமைப்புக்கு எதிராக ஒலிக்கிற இலக்கியக் குரல். ஒலிக்கச் செய்திருப்பவர் எழுத்தாளரும் அக்குபங்சர் சிகிச்சையாளருமான அ.உமர் பாரூக். மருத்துவ ஆய்வுக்கூடத் தொழில்நுட்பவியலாளரான […]

Read more
1 4 5 6 7 8 66