தலித்துகள்: நேற்று இன்று நாளை

தலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225 ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த […]

Read more

என்ட அல்லாஹ்

என்ட அல்லாஹ், தொகுப்பு: ஏபிஎம்.இத்ரீஸ், ஆதிரை வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: 180 இலங்கை உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்தப் போர், 2009-ல் அதன் உச்சம் தொட்டது. இலங்கையிலிருந்து உலகம் முழுக்க நிலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் பலரும் போரின் விளைவுகள் குறித்துக் காத்திரமாகத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். தமிழ் இலக்கியம் உலகம் முழுக்கப் பரவியதற்கு ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட போருக்குப் பிறகும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீசிவிடவில்லை. அதிலும், ஈழம் […]

Read more

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள், செ.சண்முகசுந்தரம், அன்னம் வெளியீடு, விலை: ரூ.150 சாதியாலும் வர்க்கத்தாலும் ஒருசேர வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வெண்மணி மக்களின் வரலாற்றுக் குறிப்புகள்தான் செ.சண்முகசுந்தரம் எழுதிய ‘அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ நூல். இந்த அரை நூற்றாண்டுகளில் காலம் எத்தனையோ நிகழ்வுகளைக் கடந்துபோயிருக்கிறது. கால மாயம் தன்னுள் பல காயங்களைக் கரைத்துவிட்டபோதும், இந்த வெண்மணித் தீ மட்டும் இன்னும் அணையாமல் தகிப்போடு கனன்றுகொண்டே இருக்கிறதே ஏன்? ஏனென்றால், அதன் அடியில் இருக்கும் காரணிகள்தான். அவை அரை நூற்றாண்டு கடந்த பிறகும் […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலைரூ.500. கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால். கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய […]

Read more

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, கிஷோர் பிரசாத், பாரதி புக் ஹவுஸ், பக். 108, விலை 60ரூ. மகாத்மாவின், 150ம் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நூல். காந்தியின் அரிய புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் அவை அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டி, மனதில் எழுச்சி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மகாத்மா என்பது மாபெரும் கடல். நீந்தி களிக்க நிறைய உண்டு. அந்த கடல் பற்றி எளிய அறிமுகமாக உள்ளது இந்த நூல். நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வெற்றி உன் கையில்

வெற்றி உன் கையில், டாக்டர் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலைரூ.290 சுயமுன்னேற்றத்தை துாண்டும் நுால். சாதனைகள்புரிய ஆரோக்கியம் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. தினமும் அதிகாலை உடற்பயிற்சி, தியானம் பழகினால் தன்னம்பிக்கை வளரும். கடின உழைப்பும், நாணயமும் வளரும். தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டி என்றெல்லாம் அறிவுரைத்துள்ளார்.காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்களின் வரலாற்றையும் சுருக்கமாக எழுதி இருக்கிறார்.புகழும், செல்வ வளமும் பெறும் வழிமுறையை சொல்லும் நுால். – எஸ்.குரு நன்றி:தினமலர், 16/8/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029577_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா, எஸ்.எல்.வி.மூர்த்தி,சிக்ஸ்த் சென்ஸ், விலை: ரூ.288 இரும்புப்பெண்மணி கிரேக்க, ரோமானிய வரலாறுகள் பின்னிப் பிணைந்தவை. வெவ்வேறு மொழி, மத நம்பிக்கைகள், கடவுளர்களைக் கொண்ட இந்த நாடுகளை இப்படி சம்பந்தப்பட வைத்தது எது? ரோமைச் சேர்ந்த சீஸர், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஆன்டனி இருவரும் சந்தித்த மிகப் பெரிய ஆளுமை எகிப்து நாட்டு அரசி கிளியோபாட்ரா. ‘இளம் வயதிலேயே மிகப் பெரிய அறிஞர்களிடம் கணிதம், தத்துவம், வானியல், சோதிடம், ரசவாதம் உட்பட அனைத்தையும் தீர்க்கமாகக் கற்ற அவர், குதிரைச் சவாரி, வாள் வீச்சு, ஈட்டி […]

Read more

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம்,  மூன்றெழுத்து பதிப்பகம், விலைரூ.400. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு.தி.மு.க.,விலிருந்து நீக்கம், மனதை மாற்றிய மூதாட்டிகள், இடைத் தேர்தலும் இரட்டை இலை சின்னமும் உள்ளிட்ட தலைப்புகள், அவரது அரசியல் வாழ்வை படம் பிடிக்கின்றன. அறையில் மது பாட்டில்கள், விரும்பிக் கேட்ட சுறா மீன் குழம்பு, மறக்க முடியாத நகைச்சுவை, பூரியும் பாஸந்தியும், உதவியாளராக ஆசைப்பட்ட தமிழாசிரியர் போன்ற தலைப்புகள் சுவாரசியம் மிக்கவை. அரசியல், சினிமா […]

Read more

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன், தினேஷ் நாராயணன், பெங்குயின் வெளியீடு,விலை: ரூ.699 இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டைக் காணவிருக்கிறது ‘ஆர்.எஸ்.எஸ்.’ எனும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் சங்’. கடந்த காலத்தைப் பொற்காலமாக உருவகித்து இந்தியாவை ஒற்றை இந்து தேசியமாக மாற்றும் கனவில் அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் வழித்தோன்றலான பாஜக ஆட்சியில் இருப்பதால் அதன் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான காரியங்கள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் மீதும் அரசின் மீதும் இவ்வளவு செல்வாக்கு கொண்டிருந்தாலும், அந்த அமைப்பு பெரிதும் […]

Read more

தலித்துகள்

தலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225. ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த வரிசையில், […]

Read more
1 11 12 13 14 15 104