கீழடி

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை வெளியீடு, விலை: ரூ.50 ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ நூலைத் தமிழ்நாடு பாடல்நூல் நிறுவனத்தின் நிதி பெற்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் விலை ரூ.50 மட்டுமே. எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

அழகிய மரம்

அழகிய மரம், தரம்பால், கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், விலை: ரூ.500 ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது […]

Read more

மில்டன் வாழ்க்கை

மில்டன் வாழ்க்கை, சாமுவேல் சான்சன், தமிழில்: வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், விலை: ரூ.300 சாமுவேல் ஜான்சன், ஆங்கில இலக்கியத்துக்கு அகராதியியலாளராக மட்டுமின்றி வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் பெரும் பங்களித்தவர். 52 கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜான்சனின் திட்டத்தில் 23 மட்டுமே நிறைவேறியது. ‘இழந்த சொர்க்க’த்தையும், ‘மீண்ட சொர்க்க’த்தையும் எழுதிய ஜான் மில்டனின் வாழ்க்கை வரலாறு அவற்றில் புகழ்பெற்றது. ஆங்கிலப் பேராசிரியரான வான்முகில், கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்ட தனித்தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

புகழ் பெற்ற கடற்போர்கள்

புகழ் பெற்ற கடற்போர்கள், வி.என்.சாமி, வில்லாபுரம், விலை: ரூ.600 கடற்படை எப்போது தோன்றி வளர்ச்சி பெற்றது, இந்தியாவின் கடற்படை வரலாறு எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி போர்க் கப்பல், கடற்போர் பற்றிய பின்னணி என விரிவாக எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி. வரலாற்றில் முதல் கடற்போர் பற்றியும், தமிழக வரலாற்றில் கடற்போர் பற்றியும் எழுதியிருப்பதும், உலகின் புகழ் பெற்ற கடற்போர்களைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம் கொண்டிருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள் – விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள், ராஜ்மோகன் காந்தி, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை ரூ.180. மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோரின் சிந்தனைகளின், நடவடிக்கைகளின் விளைவாக அந்நாளில் நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை – வேறு மாதிரியாக உருவாக்கியிருக்க முடியுமா? என்பதை ஆராயும் நூல். குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி சச்சிதானந்த், காந்தி மற்றும் நேருவைப் பற்றி வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெர்ரி […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 4, தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.552, விலை ரூ. 200. சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார். தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி. அதுமட்டுமல்ல, விவேகானந்தரின் சீடர்களான சுவாமி அபேதானந்தரையும் சகோதரி நிவேதிதையையும், அவரது சகோதரர் பூபேந்திரரையும் தனிப்பாடல் புனைந்து வழிபட்டவர் பாரதி. மகாத்மா காந்தி, திலகர், நேதாஜி போன்ற பிற தேசியத் தலைவர்களைப் […]

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை: ரூ.120 பழங்குடி மக்களின் சுதந்திர தாகம் இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற பெரும் விடுதலைப் போராட்டங்களில் பழங்குடி இன மக்களின் பங்கும் கணிசமானது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்து, தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் போராட்டங்களை வெள்ளையர்கள் ‘கலகம்’ என்றும், ‘வெறும் கிளர்ச்சி’ என்றும் வர்ணித்தனர். அதனால், அவர்களின் வீரச் செயல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் நூலாசிரியர். கூர்ந்து கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன பழங்குடி மக்களின் […]

Read more

நிலமடந்தைக்கு

நிலமடந்தைக்கு, நரோலா, தடாகம் வெளியீடு, விலை: ரூ.100 ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புத்தரும் அவரது தம்மமும்

புத்தரும் அவரது தம்மமும், பி.ஆர்.அம்பேத்கர், கருத்து=பட்டறை வெளியீடு, விலை: ரூ.600 அம்பேத்கர் அவரது மரணத் தறுவாயில் எழுதிய புத்தகம். பௌத்தம் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட புத்தகம். விவிலியத்தைப் போல அத்தியாயப் பிரிப்பும் வாக்கிய அமைப்பும் கொண்டு புத்தரையும் அவரது கருத்துகளையும் தொகுத்தளித்த புத்தகம். பௌத்த அமைப்புகளும், அம்பேத்கர் பவுண்டேஷனும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகின்றன. ‘கருத்து=பட்டறை’ கொண்டுவந்திருக்கும் இந்தப் பதிப்பு தரமான தாளில், ராயில் சைஸில், கெட்டி அட்டைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, விலை 210ரூ. தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 […]

Read more
1 14 15 16 17 18 104