திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன்

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன், மெய்ஞானி பிரபாகர் பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலை 295ரூ. முற்றிலும் தனது நடையில் வார்ப்புரை என்ற வகையில், ஆசிரியர் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். எளிய முறையில் மக்களுக்கு குறள் சென்றடைய விரும்பிய வேள்வி தன் மனதில் உதித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட இந்த எளிய உரை உருவாக தன் மனைவி செல்வி ஒத்துழைத்ததை குறிப்பிட்டிருப்பது சிறப்பு. பாவேந்தர் பாரதிதாசன் நடந்த பாதையில், எளிய முறையில் உரை அமைத்திருப்பதால், தமிழ் அறிந்த அனைவரும் இதைப் படிப்பது எளிது. ‘ஆற்றுவார் ஆற்றல் […]

Read more

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரை மணிகண்டன், கமலினி பதிப்பகம், விலை 230ரூ. இந்நூல் கணினி, இணையம் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து உரைக்கிறது. இதனுள், ஐந்து அலகுகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. முதல் மூன்று அலகுகளில், கணினியின் தோற்றம், வரலாறு, கணினியின் அமைப்பு-வகைகள், வன்பொருள்-மென்பொருள் விளக்கம், உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, ஒளிப்பேனா, சுட்டி, பந்துருளை, தொடுசுட்டி, வருடி முதலிய உள்ளீட்டுக் கருவிகளின் விளக்கம். மற்றும் திரை, அச்சுப்பொறி, அச்சுப்பொறி வகைகள், ஒலிபெருக்கி, ஒளிபெருக்கி ஆகிய வெளியீட்டுக் கருவிகளின் விளக்கம், […]

Read more

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன், பாலகணேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 50ரூ. ‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில் வரும் மன்னன். அவன் ஆளும் நாட்டில், அரண்மனை வேலை ஆட்களுக்கு கூட மூன்று மாத சம்பள பாக்கி வைக்கும் அளவுக்கு, பஞ்சம், ‘பாப் டான்ஸ்’ ஆடுகிறது. இப்படியான சூழலில் இந்த மன்னனுக்கு ஒரு ஆசை வருகிறது. அது, நம்ம ஊர் ஷாப்பிங் மால்கள் மாதிரியான ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் […]

Read more

அரங்கில் மலர்ந்த கம்பன்

அரங்கில் மலர்ந்த கம்பன், கவிஞர் அரு.நாகப்பன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. கம்பன் கண்ட கருணை, பக்தி, சமுதாயம், மரவுரி, அரசியல் மாண்பு, வாலி, கணையாழி, அனுமன், கைகேயி, கம்பன் ஒரு தெய்வம் போல, பல தலைப்புகளில், பல்வேறு சான்றோர் தலைமையில் அரங்கேறிய கவிதைகள் இதில் அடக்கம். ‘தன்னையே இறைவனுக்குத் தானளித்தால் தானய்யா அன்னையாய் வந்திருந்து அருட்பாலைச் சுரந்திடுவான்’ (பக். 36) என பக்தி […]

Read more

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி, பரத்வாஜ் ஸ்வாமிகள், சங்கர் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து நல்வழி காட்டுபவள். வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்பதை கூறுகிறது, இந்நூல். வேத தத்துவத்தை மிகவும் எளிமையாக்கி உலக மாந்தர்களுக்கு அளித்திருக்கிறது எனலாம். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

திருக்குறள் சிந்தனைகள்

திருக்குறள் சிந்தனைகள், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம் வெளியீடு, பக். 72, விலை 50ரூ. ‘உலக நீதி இலக்கியங்களும் தமிழ் நீதி இலக்கியங்களும், திருக்குறள் ஒரு சமூக இயல் பார்வை, திருவள்ளுவர் செய்த புதுமைகள், கன்பூசியசும் திருவள்ளுவரும், திருக்குறள் ஏன் கல்வெட்டுகள் ஆக்கப்பட வேண்டும். திருவள்ளுவர் தெய்வக் கோட்பாடு, தமிழகத்தில் திருவள்ளுவம் தோற்றதேன்?’ ஆகிய ஒரு கட்டுரைகளின் தொகுப்பு. ‘கடவுள், வழிபாடு, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தாத சீனம், கிரேக்கம், ரோம் ஆகியன மேம்பாடு அடைந்ததும், மாறாக அவற்றைப் போற்றிய தமிழகம், இஸ்ரேல் ஆகியன துன்புற்றதும் சுட்டிக்காட்டத்தக்கன […]

Read more

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 798,விலை 400ரூ. அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட […]

Read more

எங்கேயும் பெண்மை

எங்கேயும் பெண்மை, மு.வேல்முருகன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 55ரூ. ‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின் அவலம் அறிவீரோ? அழகுச் சிலையைப் பின்தொடர்ந்து காதல் மொழிகள் கூறுகிறார்; அவள் அதை ஏற்க மறுத்தாலோ அமிலத்தை முகத்தில் வீசுகிறார்’ என்ற கவிதை வரிகள், பெண்ணின் அவலத்தைக் கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர்17/9/2017.

Read more
1 109 110 111 112 113 240