சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமி எழுதிய Dance with siva, தமிழில் கே.என்.ஸ்ரீநிவாஸ், பக். 648, விலை 425ரூ. அமெரிக்க கலிபோர்னியாவில், 1927ல் பிறந்து, பாலே நடனக் கலைஞராய் பரிமளித்து, இந்து மத ஈடுபாட்டால், 1949ல் யாழ்ப்பாண ஞானியார், யோக சுவாமிகளால் சன்னியாச தீட்சை பெற்று, பிரதான பாடம் எனும் மூன்று தொகுப்புகளால் ஆங்கிலத்தில் வெளியான, நுாலின் முதல் பாகமான, ‘DANCING WITH SIVA’ தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது. ‘மனம் முழுக்க காழ்ப்பினை சுமந்து செல்லும் தியான முயற்சிகளில் […]

Read more

ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ. உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது […]

Read more

360 டிகிரி

360 டிகிரி, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக் 172, விலை 150ரூ. சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு அரசியல், சமூக பிரச்னை, இலக்கியம், இயக்கங்கள் ஆகியன பற்றிய கண்ணோட்டங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறது. நடுநிலையாகவும், துணிவு மிக்க நெஞ்சுரத்தோடும் கட்டுரைகளைத் தார்மீகமான கருத்துக்களின் பின்னணியில் தன்னிலை நோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நுால். மாநில அரசியல் முதல், மத்திய அரசியல் வரையிலான அலசல் பார்வைகளைச் சித்திரித்து காட்டும்படியான இந்நுால், அண்மைக் காலத்திய நிகழ்வுகளின் […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், இரா. காமராசு, சாகித்திய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்!, மஹீப் சிங் (மூல ஆசிரியர்), தமிழாக்கம் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாடமி, பக். 126, விலை 50ரூ. சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல் வலிமையின் உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் தன் தந்தையை கைதாக்கி, சகோதரர்களை கொன்று தானே, ‘ஆலம்கீர்’ – உலகை வென்றவன் என்ற பட்டத்தை ஒட்டிக் கொண்டு, முகலாய இந்தியாவின் பேரரசனாக, எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவுரங்கசீப் பின்பற்றிய […]

Read more

தேவதையின் பிள்ளைகள்

தேவதையின் பிள்ளைகள், அல்லிநகரம் தாமோதரன், மேன்மை வெளியீடு, விலை 120ரூ. உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து பார்த்த பிறகு தான் முழுக் கதையும் மனதுக்குள் வந்து தவழும். அதுவரை அந்தக் கதையின் கண்ணி அகப்படாமலே இருக்கும். தேவதையின் பிள்ளைகள் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பும் உணர்வுகளை உரசியே எழுதப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் துயரங்களை வைத்தே மனிதர்களின் உயர்ந்த பண்புகளையும், அவர்களது உள்ளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் தொகுப்பு முழுக்க பணக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியரின் சொந்த […]

Read more

மாயவனம்

மாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலை 120ரூ. மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று […]

Read more

காப்பியங்கள் அணிந்த காலணிகள்

காப்பியங்கள் அணிந்த காலணிகள், தாமல் கோ.சரவணன், கோமல் பதிப்பகம், விலை 50ரூ. கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர். பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது. […]

Read more

மனம் மயக்கும் கலை

மனம் மயக்கும் கலை, ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், விலை 380ரூ. ஹிப்னாடிசம் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்கு, ‘தூக்கம்’ என்று பொருள். ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவரைத் தூங்க வைப்பது. ஒருவரை தூங்க வைத்து அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்த் தன்மையைப் போக்கிக் குணமாக்குவது. ஹிப்னாடிசம், அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி செய்யக் கூடிய மனம் சார்ந்த மருத்துவக் கலை. இதை மனோவசியம் அல்லது யோக […]

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா, விலை 400ரூ. இந்த நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகளை எளிய தமிழில் தெளிவாக விளக்கும் நூல். சாதாரண மக்களின் மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் எளிய தமிழில் எழுதி, எண்ணற்ற வாசகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன். தினமலர், ‘என் பார்வை’ பகுதியில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இதுவரை, 38 மருத்துவ புத்தகங்கள் எழுதி உள்ளார். அவற்றில் இருந்து […]

Read more
1 107 108 109 110 111 240