ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம், சி.எஸ்.தேவ்நாத், புதிய புத்தக உலகம், பக். 256, விலை 120ரூ. மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று […]

Read more

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் […]

Read more

கூரேசை விஜயம்

கூரேசை விஜயம், ஆசிரியர் ஆங்கிலத்தில் டாக்டர் கே.பி. வாசுதேவன், தமிழில் பி.வி. ஓம் பிரகாஷ் நாராயணன், கலைஞன் பதிப்பகம், பக். 500, விலை 500ரூ. குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது. கூரேசர் என்று அழைக்கப்படும், ஸ்ரீ கூரத்தாழ்வாரின் வாழ்க்கையும், அவருடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்த, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையும், இந்நுாலில் இரண்டறக் கலந்து விவரிக்கப்பட்டுள்ள அழகு பெரிதும் பாராட்டுதற்குரியது. டாக்டர் பி.கே.வாசுதேவன் எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கமாக இந்நுால் வெளிவந்துள்ள போதிலும், […]

Read more

திருமுறைத் திருத்தலங்கள்

திருமுறைத் திருத்தலங்கள், சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. பதினெட்டாயிரத்து இருநுாற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்ட திருமுறைகளில் இருந்து, சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள ஈசனின் கருணாகடாட்சங்களைப் பற்றியும் ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 5/11/201

Read more

எண்ணங்கள்

எண்ணங்கள், வத்ஸலா சங்கர், ஹை லைப் என்டர்பிரைசஸ், இதிகாசங்களும் காப்பியங்களும், ஆன்ம நேயமும் மனித நேயமும், மேன்மை தரும் ஒழுக்கம், அன்பினால் இந்த உலகை ஆளலாம், பெண்கள் நாட்டின் கண்கள், தீதும் நன்றும், காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை, நேப்பாள், துவாரகா, திருக்கேதார் – பத்ரிநாத், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more

கன்னடியர் மகள்

கன்னடியர் மகள், சுந்தரபாண்டியன், காவ்யா, பக். 160, விலை 100ரூ. கன்னடியர் மகள் என்னும் இந்நுாலில், கர்நாடக மாநில வரலாற்றுச் செய்தியையும், விஜய நகர வரலாற்றையும் நன்றாக அறிந்து, அந்த மக்களின் பண்பாடு, கலாசாரம், வீரம், மொழி உணர்வு, படைப்பிலக்கியம் போன்றவற்றை இந்நாவலில் ஆங்காங்கே இடம் பெறச் செய்திருக்கின்றனர். கதாபாத்திரத்தில் வருகிற ஒவ்வொரு செய்திகளும் வாசகர்களை மேலும் வாசிக்கத் துாண்டுகின்றன. இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், கம்ப ராமாயணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், திருக்குறள் போன்ற எடுத்துக்காட்டுகளுடன் நாடோடிப் பாடல்களை அமைத்திருப்பது, ஆசிரியரின் […]

Read more

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, மா (டி.எஸ்.பத்மாவதி), மாயா பதிப்பகம், குழந்தைகள் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர். பெற்றோர் பணிக்கு செல்வதால், அவர்களால், குழந்தைகளிடம் முழுமையாக நேரத்தை செலவு செய்ய முடியவில்லை. தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், இன்று பெரும்பாலான வீடுகளில் இல்லை. அவர்களிடம் வாழ்க்கை நெறி தொடர்பான கதைகள், சம்பவங்களை கேட்கும் பாக்கியமும், குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு, வாழ்க்கை நெறி கல்வியைப் போதிப்பது என்பது காணாமல் போய்விட்டது. இந்த குறையை போக்கும் வகையில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் வழியிலேயே […]

Read more

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2, மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், தாமரை பிரதர்ஸ், பக். 72, விலை 70ரூ. தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம், வாஸ்து, பரிகாரம் என, பல வகையில் வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், அவர்களின் பிறவகையான கேள்விகளுக்கும் வேத வித்தகர், ‘மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்’ தந்த பதில்களே, ‘அறிந்ததும் அறியாததும் – 2’ என்னும் இந்த நுால். ஏற்கனவே பகுதி – 1 வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. […]

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், தொகுப்பு சுப்ரபாரதி மணியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 350, விலை 330ரூ. அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிதாயினி. இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. 1.சுகந்தியின் கவிதைகள். 2.சுகந்தியின் சிறுகதைகள். 3.சுகந்தியின் டயரிக் குறிப்புகள்… ஆனால், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களைச் சுகந்தியின் கவிதைகளே ஆக்கிரமித்து இருக்கின்றன… ‘காதல்’ என்றொரு கவிதை! சாக்கடை அரசியலும் பெண்ணை உடலோடு தோலுரிக்கவே பிறந்த சினிமாவும்  – அதன் […]

Read more

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே, வே.குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகளை நுாலின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நுால், அரசியல் சிந்தனைகளை அலசும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ‘மக்கள் எவ்வழி மன்னன் (தலைவர்கள்) அவ்வழி’ என்ற சிந்தனையே இன்று எண்ணத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், அரசியலில் எத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதை இந்நுாலில் வலியுறுத்துகிறார். கடந்த தேர்தலில் […]

Read more
1 106 107 108 109 110 240