கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

வன்காரி மாத்தாய்

வன்காரி மாத்தாய், பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.318, விலை 275ரூ. ஸ்டீபன் ஹாக்கிங், ப்ராய்ட் வரிசையில் கென்ய  நாட்டு சுற்றுச்சூழல் போராளி வான்காரி மாத்தாய் குறித்து தன் அடுத்த மொழி பெயர்ப்பு நுாலை தந்துள்ளார் பேராசிரியர் ச.வின்சென்ட். ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என இப்போது குரல் எழும் நிலையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன், ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என குரல் கொடுத்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கென்யாவை சேர்ந்த வான்காரி மாத்தாய். அதுமட்டுமின்றி பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர். பசுமை பகுதி இயக்கத்தை […]

Read more

ஜான்சிராணியின் குதிரை

ஜான்சிராணியின் குதிரை, தேவராஜ் விட்டலன், வாசகன் பதிப்பகம், பக்.64, விலை 50ரூ. கைப்பேசிகளின் அலறல்களும், கணினிகளின் இரைச்சல்களும் பல்கியிருக்கும் அலுவலகப் பரபரப்புக்கு மத்தியில் கொஞ்சமாவது ரசிக்கத்தான் முடிகிறது வாழ்க்கையை… அந்தக் குதிரையின் காலடி சப்தத்தில் ஒளிந்திருந்தது பல நுாற்றாண்டுகளின் சோகம்… எப்போதோ தொலைத்த பொழுதுகளும், உறவுகளின் நினைவுகளும் மழையின் வழியாய் மனதில் உயிர்த்தெழுகிறது…!’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

நல்ல நட்பு

நல்ல நட்பு, இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக்.160, விலை 145ரூ. ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

காவிரி மகாத்மியம்

காவிரி மகாத்மியம், வே.மகாதேவன், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வுமையம், பக்.208, விலை 100ரூ. அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண, வரலாற்றுச் சான்றுகளோடு மேற்கோள் பாடல்களுடன் விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. குரு பகவான், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நதியில் புஷ்கர மேளா தீர்த்தவாரி நிகழ்வது பற்றி குறிப்பிடுகையில், 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியில் புஷ்கரம் உருவாக ஏற்பாடாகி, அதன்படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கைக்கு விசேஷம். ரிஷபத்தில் நர்மதை, […]

Read more

ஆடிப்பாவை போல

ஆடிப்பாவை போல, தமிழவன், எதிர் வெளியீடு, பக். 404, விலை 350ரூ. தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற அவர், தாம் படைக்கும் படைப்புகளில், அத்தகைய உத்திகளை அறிமுகப்படுத்துவதில், ஆர்வம் கொண்டிருப்பவர். பின் நவீனத்துவ வாசிப்பினுாடே, புதிய பரிமாணங்களில் நவீனத்தை மையப்படுத்தி, எழுதி வரும் அவர், பரிசோதனை முயற்சியாகப் படைப்பிலக்கியம் அமைய வேண்டும் என்ற, எதிர்பார்ப்பைத் தம் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்து வருபவர். அந்த வகையில், ‘ஆடிப்பாவை  போல’ என்ற நாவலும் அமைந்திருக்கிறது. குறுந்தொகையில்  […]

Read more

அற்புத மனிதர் அப்துல்கலாம்

அற்புத மனிதர் அப்துல்கலாம், நெல்லை சு.முத்து, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன. போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு. ஆபுல் – காபுல் ஒலியுல்லா தர்க்கா என்னும் தொழுகை இடம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அவர்கள் ஆதாமின் மக்கள் என்று திருமறை உரைக்கிறது. […]

Read more

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள்

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள், சிவரஞ்சனா, அருணா பதிப்பகம். கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது; மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை கதைகளை விரும்பிப் படிப்பர். நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், நல்ல அறிவுரையையும் கூறுகிறது. அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக்கதைகள் என்ற இந்த நூல். 21- தலைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சிந்தனை ஆற்றலை வளர்க்கிறது. கதையில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னர், அப்பாஜி என்ற அமைச்சர், ராணி, கிருஷ்ணதேவராயரின் மைத்துனர் முதலியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிபாரிசு இருக்கிறது என்பதாலேயே தகுதி […]

Read more

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள், லியோ ஜோசப், எதிர் வெளியீடு, விலை 190ரூ. மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எதை உணர்த்துகின்றன? பிற இனத்தவரின், பிற நாட்டவரின் பண்பாட்டுக் கலாசாரங்களை வெளிப்படுத்துவதோடு, புதுப் புதுப்பாடு பொருள்களில் சிறுகதைகள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. அந்த வகையில் சாந்தால் இன மக்களின் பல்வேறு உணர்வுகளை, இதில் உள்ள எட்டுக் கதைகளும் காட்டுகின்றன. ஜார்க்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை முறைகள், அவர் தம் அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை இந்நூலில் காண முடிகிறது. மொழிபெயர்ப்பு என்று தோன்றா வகையில் இந்நூல் அமைந்துள்ளது. அசைவம் சாப்பிடக் […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்

ஸ்ரீ ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர், கே.எஸ்.எல். மீடியா லிமிடெட், விலை 300ரூ. ஹிந்து மதத்தில், தீண்டாமை கொடுமைகள் அதிகம் இருந்த காலத்திலேயே, அதை மறுத்து, புரட்சி செய்து வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமானுஜர். அவரின் ஆயிரமாண்டு விழாவில், ராமானுஜர் பற்றிய தொகுப்பை, இந்த நூல் காட்டுகிறது. ராமானுஜர் பற்றி, உபன்யாசகர்கள், தமிழறிஞர்கள் கூறியுள்ளது, மிக சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. திருமலையில் ஜீயர் மடத்தை ராமானுஜர் ஸ்தாபித்தது பற்றி விளக்குகையில், திருப்பதி கோவில் அதிகாலை திறப்பு நடைமுறையை ஏற்படுத்தி, அது இன்றளவும் பின்பற்றப்படுவதை அந்த அந்த […]

Read more
1 105 106 107 108 109 240