வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை190ரூ. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மானசீகத் தலைவராக வரித்துக் கொண்டுள்ள நுாலாசிரியர், ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை திரட்டி, 44 தலைப்புகளில் எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை அவரது வரலாற்றை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின், 23 பக்க உயிலை கூட தேடிப்பிடித்து, ஒரு அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு ஒரு நல்விருந்து இந்நுால்! – கே.சி நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 145ரூ. தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், திருமந்திரப் பாடல்கள், 3,000 இயற்றினார் என்றும் கூறுவர். திருமந்திரப் பாடல்களில் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவன. முயலும் செயல்களில் வெற்றி பெற திருமந்திரம் துணை செய்யும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் திருமந்திரத்தில் உள்ளன என்பதை நுாலாசிரியர் எளிய முறையில் விளக்கியுள்ளார். ‘அன்பும் சிவமும் இரண்டல்ல. […]

Read more

குக்கூ குக்கூ ஹைக்கூ

குக்கூ குக்கூ ஹைக்கூ, டி.வி.எஸ்.மணியன், மணிமேகலைப் பிரசுரம், பக். 88, விலை50ரூ. ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக எழுதும்போது, பின்பற்ற முடியாமல் போனது போலவே, நுாலாசிரியர், ஹைக்கூ வடிவத்தை தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ப, சொல்லாட்சியுடன் திறம்பட எழுதியுள்ளார். ‘பாகன் வீட்டு அடுப்பெரிய/ தெருவில் யாசகம்/ யானை’ (பக்., 30’ என, யானையை வைத்து பிழைப்பு நடத்துவதையும், ‘மகன் கானகம்/ கணவன் வானகம்/ கைகேயி வரம்’ (பக்., 33) என ராமாயணச் சுருக்கத்தையும், ‘நுாறை விட/ […]

Read more

அருணகிரி நாதர் பாடிய அருட்தலங்கள்

அருணகிரி நாதர் பாடிய அருட்தலங்கள், ஆர்.சி.சம்பத், சாமி வெளியீடு, பக். 308, விலை 190ரூ. முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்கள் மட்டுமல்லாது, பிற தெய்வங்கள் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்களைப் பற்றியுமான இந்நுால் ஒரு முழுமையான வரலாற்று நுாலாகத் திகழ்கிறது. 49 திருத்தலங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார் நுாலாசிரியர். ஒவ்வொரு திருத்தலத்தின் பெயர்க் காரணம், அங்கு நிகழ்வுற்ற புராண நிகழ்வு, அத்திருத்தலத்தில் குடி கொண்டுள்ள இறைவன், இறைவி, ஏனைய தெய்வங்கள் என அத்தனையும் மொத்தமாக நுாலுள் தொகுத்து வழங்கியுள்ளார். பழநி – திருஆவினன்குடி […]

Read more

மோர் + ரசம் = முன்னேற்றம்

மோர் + ரசம் = முன்னேற்றம், கவி.முருகபாரதி, யோசி பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. மோர் + ரசம் = முன்னேற்றம்’ என்ற வித்தியாசமான தலைப்பை தந்துள்ள நுாலாசிரியரின் சிந்தனையே, இந்நுாலின் முதல் சிறப்பு. எந்த செயலையும், ஆர்வத்துடனும், சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை, அறிஞர்கள் பலரின், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்துள்ளது மேலும் சிறப்பு. டீ குடிப்பது குறித்து, ஆசிரியர் எழுதியிருக்கும் விஷயம், ‘இதில் கூட இவ்வளவு ரசனை மிக்க அம்சங்கள் உள்ளனவா?’ என, […]

Read more

திராவிடமா? தீராவிடமா?

திராவிடமா? தீராவிடமா?, இரண்டாம் பாகம், ஓவியப்பாவலர் மு.வலவன், ஊர்ச்செய்தி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. திராவிடமா? தீராவிடமா? என்ற நாலின் ஆசிரியர், சில ஆண்டுகள் திராவிடக் கட்சியில் இருந்தமையால் அக்கட்சியின் நெளிவு சுளிவுகளை நயம்பட எழுதியுள்ளார். முதல் கட்டுரை, ஈ.வெ.ரா.,வின் தனித்துவ போக்கினால் இயக்கத்தை விட்டு வெளியேறிய லட்சியத் தீபங்கள் எனத் துவங்கி, கடைசி கட்டுரையாக அருட்செல்வரின் எழுத்துக்கள் என, 15 கட்டுரைகளும், ஆறு பிற்சேர்க்கைகளும் உள்ளன. 49 நுால்களின் துணை கொண்டு, கருத்துக் களஞ்சியமாக, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்த பிராமணத் […]

Read more

குறுந்தொகை

குறுந்தொகை, இரா.பிரபாகரன், காவ்யா, பக். 667, விலை 700ரூ. தமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால். மேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது. இறையனார் பாடிய, ‘கொங்கு தேர் […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், ஈரோடு தங்க விசுவநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 284, விலை 200ரூ. கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில் இந்நுாலாசிரியர் தொகுத்துள்ளார். உணவகத்தில் சென்று அமர்ந்ததும் உள்ளே இருக்கும் உணவு வகைகளைக் காட்டும் விலைப் பட்டியல் (மெனு) கையில் தந்து விடுவர். ஆனால், அண்மையில், வரும் பல நுால்களின் முதல் இடத்தில், ‘பொருளடக்கம்’ இருப்பதில்லை. இந்த நுாலிலும் ‘கந்த புராணம்’ தலைப்பைப் பார்த்து, வெகு ஆர்வமுடன் தேடினேன். கடைசி, 84வது […]

Read more

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்), ஜி.ராஜசேகரன், ரிதா பிரின்ட்ஸ், பக். 128. தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன் எழுதிய இலவச புத்தகம் இது. மாணவர்களிடையே 2010ம் ஆண்டு முதல், போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் முயற்சியால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வடைந்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையே விபத்துக்கு காரணம். இதனாலேயே விலை மதிப்பில்லா உயிர்களை […]

Read more

இரு துருவங்கள்

இரு துருவங்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 192, விலை 190ரூ. நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களால் தான் லஞ்சமும், ஊழலும் நாடெங்கும் நிறைஞ்சிருக்குது. இதைத் தடுப்பது என் லட்சியம் என்று, சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தில் முதல் நாளே உறுதி கூறும், செல்வின் கலெக்டராக, நேர்மைக்குப் பரிசாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு மாவட்டமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் யதார்த்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்வினை மணந்து கொள்ள விரும்பும் தொழில் அதிபரின் […]

Read more
1 103 104 105 106 107 240