தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

மழைக்குருவி

மழைக்குருவி, கயல், வாசன் பதிப்பகம், பக்.96, விலை 85ரூ. ‘விளைநிலங்களில் வீட்டு மனைகள் பணப்பயிராய்க் கல்வி! கள்ளின்றி எல்லைச்சாமிகள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கும்… எட்டு மாதப் பெண் சிசுவையும் விட்டு வைக்காத கயமை அட! யாராவது செத்துப் போனால் இன்னமும் நாம் அழுகிறோம்… ‘வனமிழந்து, உறவிழந்து கூட்டங் கூட்டமாய் வழியறியாது அலையும்’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலில் விவசாய நிலங்கள் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறிக் கொண்டு இருப்பதையும், ‘டாஸ்மாக்’கில் குடிக்காக காத்திருக்கும் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

நாட்டை உலுக்கிய ஊழல்கள்

நாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]

Read more

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்,

பாலர்களுக்கான பாகவதக் கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்பிளகேஷன்ஸ், விலை 35ரூ. மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது. படிக்க படிக்க சுவை கூட்டக் கூடிய பாகவதத்தை, குழந்தைகளுக்கு புரியும் வகையில், சிறு சிறு கதைகளாக ஆசிரியர் தந்துள்ளார். இதை, குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனால், அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்; நம் கலாசாரம், புராணங்கள் மீதும் பற்று ஏற்படும். இதனால், அவர்கள் மனதில் ஒழுக்க நெறி மேம்படும். ஆண்டவன் மீது […]

Read more

எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனித அறிவால் அறிந்த கோள்கள் சில; அறியாத கோள்கள் பல. அனைத்து கோள்களையும், பால்வெளிகளையும் உள்ளடக்கிய கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தின் விந்தை அளப்பரியது. பயிலப்பயில வியப்பைத் தருவது. எண்ணிக்கையில் அடங்கா கோள்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் செறிந்த அறிவியல், பொருளியல் உண்மைகளைத் தமிழில் விளக்க முற்படும் நுால் இது. அகன்று விரிந்த இந்த அண்டத்தின் தோற்றம், அதன் வயது, அளவு, வடிவம், ஆய்வுகள் ஆகியவை உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு தான் […]

Read more

சூபி கதைகள்

சூபி கதைகள், யூமா வாசுகி, என்.சி.பி.எச்., பக்.101, விலை 90ரூ. சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய கருத்துக்களை எளிமையாகச் சொல்வதன் வழியேயும் பலவற்றைச் சொல்லி இருக்கின்றனர். சின்னஞ் சிறுகதைகளாக, ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே உள்ள பல சிறுகதைகள் இதில் உள்ளன. பல கதைகள் வேடிக்கையான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன. ஆட்டுக்கு ஆளைத் தெரியும். அடிமை, மூவர், மரணம் முதலிய கதைகள் இத்தகையன. அறவுரையும், அறிவார்ந்த எண்ணங்களை வெளிக் கொணரும்படியான கருத்துக்களும் அடங்கிய கதைகளும் இதில் […]

Read more

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள்

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள், சி.இரத்தினசாமி, வசந்தா பிரசுரம், பக். 136, விலை 100ரூ. ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதை கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வாழ்வியல் தத்துவங்கள், வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை தமிழ் மணத்துடன், அழகுற, எளிய நடையில், சிறு சிறு கதைகளாக தொகுத்து, ஆசிரியர் தந்துள்ளார். இந்த கதைகளை படித்த போது, அந்த கதாபாத்திரங்கள், நம் மனதில் […]

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், பக்.48, விலை 100ரூ. இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன் கவிதை யில் ஓட விட்டுள்ளார் நுால் ஆசிரியர். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி, கவிமணம் வீசுகிறது. உலகைப் படைத்தவரே உவந்து மனித உருவில் வந்தார். தன் மானுடவதாரத்தின் முக்கிய மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்; தீமையை விட்டு விலக வேண்டும். அதுவே, இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்கிறது இந்நுால். நன்றி: […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more

மதுரை நகரக் கோவில்கள்

மதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது. இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை. மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 […]

Read more
1 102 103 104 105 106 240