பழமொழி நானூறு

பழமொழி நானூறு, புலியூர்க்கேசிகன், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்டு, பக். 200, விலை 160ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால் இயற்றப்பட்டது. வாழ்வியல் நெறியை, ‘நறுக்’கென்று சுருக்கமாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பதியும்படி கூறப்பட்டு வருவதே பழமொழி. பட்டறிவைச் சாரமாக்கி ஐயத்திற்கு அப்பாற்பட்ட குறைந்த சொற்களால் பசுமரத்தில் அம்பைச் செலுத்துவதுபோல் கூர்மையாக வெளிப்படுத்தினர். பாடல்களின் பொது இயல்பு, பாட்டின் இறுதியில் வைக்கப்பட்டிருப்பதோடு, முன் இரண்டு அடிகளில் பொருள் உணர்த்தப்படுவது சிறப்பு. பாடல்கள் பழமொழிகளின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும்

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், பாரதி புத்தகாலயம், பக். 84, விலை 70ரூ. சாலை விபத்து ஏற்பட்டால் சட்ட வழியில் நிவாரணம் பெறுவதற்கு உதவும் வகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். சட்ட சேவை மைய வழக்கறிஞர்கள் எளிமையாக படைத்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபத்து எனும் ஆபத்தில் துவங்கி, கவனக்குறைவு மற்றும் உரிமைகள் என்பது உட்பட, 10 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு பின் சுலபமாக நிவாரணம் பெறுவது, விபத்தை தடுக்கும் வழிமுறை என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடுகளவும் நீதி, நியாயம் […]

Read more

முருகா ஆறு படையின் புராணக்கதை

முருகா ஆறு படையின் புராணக்கதை, பிரபுசங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், பக். 118, விலை 120ரூ. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நுாலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் […]

Read more

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள்

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள், எஸ்.எஸ்.ராகவாச்சார்யர், நர்மதா பதிப்பகம், பக். 136, விலை 80ரூ. கோவில் வழிபாட்டின்போது அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாலய பூஜகர்கள் காட்டும் முத்திரைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் விளக்கத் தொகுப்புதான் இப்புத்தகம். தேவதை மற்றும் கோவில் வழிபாட்டின்போது முக்கிய முத்திரைகளையும், உபசார வகைகளின் மூத்திரைகளையும் தேவையான, தெளிவான முறையில் கற்றுக்கொள்ள உகந்தது. உத்தியான கருத்துகளை சொல்கிறது. முத்திரைகளின் பயன்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. -த.பாலாஜி. நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும், நா.பார்த்தசாரதி, அர்ஜித் பதிப்பகம், பக். 192, விலை 105ரூ. சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை என்பார் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய, 33 கட்டுரைகள் நுாலை அலங்கரிக்கின்றன. சமூகப் பொறுப்பு இல்லாத ஆட்சியாளர், சுயநலம் மிக்க அரசியல்வாதி, பொது நன்மை நோக்காத மக்களின் செயல்கள், நாட்டை எவ்வாறு கேட்டில் நிறுத்துகின்றன என்பதை முத்தாய்ப்பாக எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சீனாவின் கொரோனா அரசியல்

சீனாவின் கொரோனா அரசியல், கோலாகல ஸ்ரீநிவாஸ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 68, விலை 70ரூ. மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.வைரஸால், 184 […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ், காவ்யா, விலைரூ.220 கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் […]

Read more

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. ‘வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், பக். 122, விலை 80ரூ. புன்னகை துவங்கி, கடவுள் முடிய அறிஞர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ள நுால். ‘உயர்ந்ததோர் லட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம், வாழ்கிறோம் என்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது…’ என்கிறார் அரிஸ்டாட்டில். ‘நம்பிக்கை குறையும் போது, ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்…’ என கணித்துள்ளார் ஜான் மில்டன். இப்படி எளிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. – பின்னலுாரான் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 39 40 41 42 43 240