ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு, முனைவர் அ.காமாட்சி, முனைவர் செ.கல்பனா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 428, விலை 325ரூ. ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் ஐங்குறுநூற்றுச் சொற்களுக்கு […]

Read more

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்,  செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.244, விவை ரூ.200. தமிழறிஞர்கள் சிலரின் தமிழ்ப் பணியைப் பற்றிய ஆய்வு இந்நூல். அவர்களின் ஒட்டுமொத்த தமிழ்ப் பணியின் மையப் புள்ளியைக் கண்டறியும் முயற்சி. உதாரணமாக, "கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம், மொழியியலில் வரலாற்று ஒப்பிலக்கணம் என்ற துறையைச் சேர்ந்தது' என்ற நூலாசிரியரின் வரையறுப்பு, ‘தமிழ் உலகில் மொழியுணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில், அறிவு வழிப்பட்ட விஞ்ஞானரீதியான கருத்துகள் பரவுவதற்கு பாடுபட்டவர் 39’ என்ற அடிப்படையில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரை […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு), ர. பூங்குன்றன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.252, விலை ரூ.200. ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை39‘ என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நூலாசிரியர், தம் மனக்குமுறல்களை இந்நூலின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் – வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். அந்த வகையில், […]

Read more

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்க

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 94, விலை 70ரூ. கடந்த, 47 ஆண்டுகளுக்கு முன், மனோன்மணியம் நாடக நூலில் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய, ‘நீராடும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., அறிவித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் மோகன ராகத்தில் திஸ்ரம் தாளத்தில் இசையமைத்திருந்தார். இந்த செய்தியுடன், இந்நூல் துவங்குகிறது. சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் சேர நாட்டுக்கு உரியதாக இந்நூல் ஆய்கிறது. கேரளத்தில் ஆலப்புழை, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் தமிழறிஞர் சுந்தரம் பிள்ளை. […]

Read more

மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170. சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன? சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. […]

Read more

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும், ச.சு. இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 418, விலை 315ரூ. மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், பாரதிதாசன் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள் அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை ஆராய்கிறது. பாரதிதாசனின் கருத்துகள் உருவாக எம்மாதிரியான சூழ்நிலைகள் காரணமாக இருந்தன என்பதை ஆராயும் இந்நூல், அவர் காலத்தின் சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பிற மொழிகளின் ஆதிக்கம், தொழிலாளர் இயக்கங்கள், பொதுவுடமைக் கருத்துகள், பெண்ணுரிமை கருத்துகள், இன உணர்வு ஆகியவை பற்றிய […]

Read more

திணைக் கோட்பாடு

திணைக் கோட்பாடு, முனைவர் துரை. சீனிச்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 164, விலை 125ரூ. திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க வழக்கங்கள் என்று அறியப்படுகிறது. திணை என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு நெறி எனலாம். திணை கோட்பாடு என்ற நூலில் தொல்காப்பியம் – இலக்கியத் திறனாய்வுத் தொடங்கி, இலக்கியக் கோட்பாடுகள் வரை ஏழு தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. […]

Read more

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!, மு. இராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 82, விலை 70ரூ. நவீன நாடக இயக்கங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஆசிரியர் பேசுகிறார். ஜாம்பவான்கள் குறித்தும் அலசுகிறார். இப்பொழுது, 80 வயதில் பயணிக்கிற ந.முத்துசாமியின் முதல் நாடகம் அவரின், 33வது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந.முத்துசாமி என்ற ஆளுமையை எந்த வகையிலும் கடக்காமல், எவரொருவரும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றி பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். ‘என் […]

Read more
1 6 7 8 9 10 26