என் கதை

என் கதை, சார்லி சாப்ளின், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 190ரூ. ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். மறைந்த பிரதமர் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் ஆகியோர் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், “உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர்” என்று தீர்மானிக்கப்பட்டது. “திரைப்படத் துறையில் தோன்றிய உண்மையான மாமேதை சாப்ளின்” என்று பேரறிஞர் […]

Read more

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ. குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல். பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது […]

Read more

மந்திரக் கைக்குட்டை

மந்திரக் கைக்குட்டை, கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.   —- மின்மினி, மொழிபெயர்ப்பு என். மாதவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாவனின் […]

Read more

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?, அனதோலி தொமீலின், தமிழில் நா. முகம்மது செரீபு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பூமியின் வடிவம் தட்டையா, வட்டமா?, உருண்டையா? உருண்டை வடிவம்தான். ஆனால் இந்த உருண்டை வடிவமும், மிகச் சரியான உருண்டையா, இல்லையா? இது பற்றிய கேள்விகள் பண்டைக் காலம் முதலே பலருக்கும், குறிப்பாக விஞ்ஞானிகளிடையே தோன்றின. அந்தக் கேள்விகளிலிருந்து பூமியின் வடிவத்தைக் கண்டடைந்த விதத்தை அழகாகப் படங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலை எழுதியவர் அனதோலி தொமீலின். இதை சுவாரஸ்யம் குறையாமல் […]

Read more

கம்பரின் மறுபக்கம்

கம்பரின் மறுபக்கம், புலவர் ஆ. பழனி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. ராவணன் சிவபக்தன் அல்ல, சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல. வஞ்சி என்படுவது கரூர் அல்ல என்பன போன்ற பல புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர் புலவர் ஆ. பழனி. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   ஒரு வரிச் செய்திகள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீஅலமு புத்தகநிலையம், விலை 70ரூ. போட்டித் தேர்வுக்கு பயன்படும் செய்திகளை ஒரு வரிச் செய்திகளாக தொகுத்தளித்துள்ளார் கள்ளிப்பட்டி சு. […]

Read more

நாராய் நாராய்

நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 148, விலை 115ரூ. கடந்த 2015-லிருந்து தற்போது வரை விஜயபாரதம், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, ஓம்சக்தி முதலிய இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது. வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஆட்டனத்தி, தனது பணி அனுபவங்களை அருமையான நடையில் சிறுகதைகளாக வடித்துத் தந்திருக்கிறார். நூலின் தலைப்பான “நாராய்… நாராய்…‘’ என்பது 13 கதைகளுள் ஒன்று. நூலைப் படித்தால், காடு, மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். காடுகளில் […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ. ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது. இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. பதினென் சித்தர்கள் யாவரும் ஆதிசித்தனாகிய சிவனிடம் நேரடியாக தீட்சை பெற்றவர்கள். இந்த சித்தர்களை பற்றிய தெளிவான விரிவான தகவல்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 115ரூ. தனித்துவமான கதைக் களங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

கணித வரலாறு

கணித வரலாறு, பி. முத்துக்குமரன், எம். சாலமன் பெர்னாட்ஷா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 413, விலை 325ரூ. எகிப்திய, மெசபடோமியக் கணிதம், கிரேக்கக் கணிதம், ரோமானியக் கணிதம், சீனக் கணிதம், இந்தியக் கணிதம் என தொன்மைக் காலம் தொடங்கி, இடைக்காலத்தில் தோன்றிய இஸ்லாமியக் கணிதம், ஐரோப்பியக் கணிதம் மற்றும் நவீன காலத்தில் மறுமலர்ச்சி கால இத்தாலிய தீபகற்பக் கணிதம், நவீன ஐரோப்பாவின் கணிதத்தின் துவக்கம் எனப் பல்வேறு தலைப்புகளில் கணித வரலாற்றை நூலின் ஆசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர். எண்களின் குணாதிசயங்களை எடுத்துரைக்கும் […]

Read more
1 7 8 9 10 11 26