தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800- 1500), நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக்.84, விலை ரூ.70. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நொபொரு கராஷிமா ஒரு கல்வெட்டியியலாளர்; சமூக வரலாற்று ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். எ.சுப்பராயலு சமூக வரலாற்று ஆய்வாளர். இவர்களிருவரும் தமிழகத்தில் சோழர் காலத்தில் (பொ.ஆ. 800 -1500) நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.‘ ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்‘, ‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்‘ என்ற நொபொரு கராஷிமாவின் […]

Read more

ஊர்சுற்றிப் புராணம்

ஊர்சுற்றிப் புராணம்,  ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான். இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் […]

Read more

வனநாயகம்

வனநாயகம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வனம் மிகுந்து ஊர் சிறுத்து இந்த காலத்தில் நம் மனத்து இருந்த நிம்மதியும், இயற்கை அளித்த கொடையும் நிறைந்து இருந்தது. வனம் அழிந்து ஊர்களானதில் வெளிச்சம் வெளியே வந்து மனதின் உள்ளே இருட்டு பரவி விட்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இறையன்பு. தினம் தினம் வனம் அழிகிறது. அதனால்தான் மனிதனின் வாழ்நாளும் வேகமாக கழிகிறது என்ற உண்மை, கனக்கிறது. கூடவே, வனம் வளர்த்து வருங்காலத் தலைமுறைக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் படமாகத் […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்,  தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.140. கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ்வாறு பெற்றார்? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. கார்ல்மார்க்ஸ் அவருடைய இளமைப் பருவத்திலேயே பைபிளின் ஆதியாகமத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது, […]

Read more

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள்

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், வே.குமரவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.508, விலை 415ரூ. சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை அவர் எழுதியிருப்பதால், பெரும்பாலான நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் […]

Read more

நதி வெள்ளத்தின் துளி

நதி வெள்ளத்தின் துளி, குழல்வேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ. ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை நேரில் சந்திக்க வாசகன் ஆவல். படைப்புப் பாலம் இணைத்த இருவருக்குமான உறவுப் பாலம், கவிஞரின் மரணத்தால் தகர்ந்து போதலை, ‘தொலை குரல் தோழமை’ கதையால் உணர முடிகிறது. நன்றி: தினமலர்..

Read more

பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ. மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது! இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ‘பொதுவுடைமை’ என்ற […]

Read more

ஜிப்ஸியின் துயர நடனம்

ஜிப்ஸியின் துயர நடனம், யமுனா ராஜேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 325ரூ. சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது. ஆளுமைகள், பண்பாட்டு வரலாறு, அரசியல், பயணக் கட்டுரைகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பகுதி யில் ரோஸா லக்ஸம் பர்க் பற்றிய கட்டுரை சிறப்பானது. போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள். ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடி ய வீரப் […]

Read more

மக்கள் தொடர்புக் கலை

மக்கள் தொடர்புக் கலை, எஸ்.பி. எழிலழகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 160ரூ. மக்களின் எண்ணங்களை அரசுக்கும், அரசின் எண்ணங்களை மக்களுக்கும் தெரிவிப்பது ஊடகம் என்று என்.டபிள்யூ. பி. கிரேவ் தெரிவித்துள்ள கருத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது மக்கள் தொடர்புக் கலை என்னும் இந்நூல். மக்கள் தொடர்பு பற்றிய அறிமுகத்தை விரிவாக விளக்கும் வகையில் இந்த நூலை எளிய மொழிநடையில் படைத்துத் தந்துள்ளார் எஸ்.பி. எழிலழகன். மொத்தம், 22 தலைப்புகளில் அமைந்துள்ள இந்த நூலில், மக்கள் தொடர்புக் […]

Read more
1 5 6 7 8 9 26