நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230 கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200 மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு […]

Read more

தெய்வம் நின்று கொல்லும்!

தெய்வம் நின்று கொல்லும்!, கவிமாமணி அழகு சக்தி குமரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய் பேசி நடிக்கும் காட்சியை காட்டும் சிறுகதை, நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற திருக்குறள் கருத்தோடு கதை முடிகிறது. ஊரார் பணத்தைக் கொள்ளையடித்தவன் விபத்தில் மாட்டி மாய்கிறான் என்ற கருத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பாதை தவறிய சிறுவனை நல்வழிப்படுத்திய பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற சிறுகதை, […]

Read more

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.90 சொற்களை அடிப்படையாக கொண்ட புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஒளிந்துள்ள ஐந்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும் என புதிர் போடப்பட்டுள்ளது. இது, மொழி வளர்ச்சிக்கு உதவும். புதிய சொற்களை அறிந்து, அன்றாடம் பயன்படுத்த ஏதுவாகும். வித்தியாசமான மொழி கல்வியை துாண்டும் நுால். – ராம் நன்றி: தினமலர், 16/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருக்குறள் திருமலை அழகன் உரை

திருக்குறள் திருமலை அழகன் உரை, திருமலை அழகன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.125 பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான் நிலைத்து நிற்கின்றன இரண்டு வரி குறளுக்கு மூன்று வரியில் எளிய உரையாக வந்து உள்ளது இந்த நுால். அதிகார வரிசைக்கு பொருள் கூறுதல், பொருட்பாலில் 71 குறிப்பறிதல் அதிகாரம் அதற்குப் பொருள், காமத்துப்பாலில் 110ம் அதிகாரம் குறிப்பறிதல், அதற்குப் பொருள் தலைவன் தலைவியின் மன குறிப்புகள் புரிந்துகொள்ளுதல் என குறிப்பிடுகிறது. அதிகார வரிசையில் பொதுக் […]

Read more

பூனையும் யானையும்

பூனையும் யானையும், இரத்தின பாலச்சந்தர், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. விலங்குகள் பாசம், உழைப்பு, உதவி, நடிப்பு, நட்பு போன்றவை பற்றி அறியலாம். மனிதர்களை விட விலங்கு வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது. சிறியவர்களின் மனதை மகிழ்வித்து, உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது முதல் நுால். – வி.விஷ்வா நன்றி: தினமலர், 9/1/22. இந்தப் புத்தகத்தை […]

Read more

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும்

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும், மேஜர் மொ.முத்துசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180. செய்திக்கு அப்பாற்பட்ட நிலையில் வழக்கு, குறுக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதையும் விளக்கும் நுால். குறுக்கு விசாரணை கேள்விகளை வரிசையாகத் தந்துள்ளார். வழக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, அது எந்தத் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்ற வழக்கு, வாகன விபத்துகளில் எத்தகைய குறுக்கு விசாரணை நடக்கும் என எடுத்துரைக்கிறது. சாலையில் நடந்து செல்லும்போதே திடீரென ஒரு விபத்தையோ குற்றச்செயலையோ பார்க்க நேரிட்டு, அதன் காரணமாக நீதிமன்றித்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் […]

Read more

மனம் செய்யும் மாயவித்தை

மனம் செய்யும் மாயவித்தை, ரவி வல்லூரி, மணிமேகலை பிரசுரம், விலை- ரூ.260. இந்த நூலின் ஆசிரியரான ரவி வல்லூரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் பெற்றோர் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்திருக்கிறார். கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளும் துரதிர்ஷ்டங்களும் நிறைந்த இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வையும் பக்குவப்பட்ட மனநிலையையும் அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் வழிகாட்டும் […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155. விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு […]

Read more

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு, எம்.குமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.140. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து வரை, மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரலாற்று காலம் தொட்டு மிகத் தெளிவான வரலாறு சுருக்கமாக உள்ளது. ஒன்பது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய தமிழில் புரியும் வண்ணம் படைக்கப்பட்டு உள்ளது. இறுதியில் தொகுத்தாய்வோம் என்ற தலைப்பில், மாநிலம் பற்றிய கருத்தை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். கடுமையாக முயன்று, தகவல்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள […]

Read more
1 2 3 4 9