திருக்கேதீச்சரம் சிவபூமி

திருக்கேதீச்சரம் சிவபூமி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தகளம், பக்.72, விலை 80ரூ. தல வரலாற்றில் பண்டைய தமிழ்ச் சொற்களின் மூலம் ஆசிரியர் வாசகர்களை வியக்கச் செய்கிறார். கேது முனிவர் வழிபட்ட சிவன் பற்றிய சிறப்பைச் சொல்கிறது இந்நுால். காலக் கணக்கை திருவள்ளுவர் ஆண்டு, தி.பி., – தி.மு., என புதியதாய் விளக்கம் தருகிறார். மகா துவட்டாபுரம் முதல் கத்தோலிக்கர் காலம் வரை வாழ்ந்த மன்னர்கள் மற்றும் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறது இந்நுால். எளிய விலையில் புராதன சொற்கள் அடங்கிய குறுநுால் எனலாம். நன்றி: தினமலர், […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தகளம், விலை 400ரூ. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி ஒலிபரப்பு துறையில் உள்ள சவால்கள், சுவாரசியங்கள், இத்துறையை சார்ந்தவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், இதில் நுழைய துடிப்பவர்களும் இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நிகழ்வுகள் நினைவாக

நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.   —- […]

Read more

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் […]

Read more