இணைந்த மனம்

இணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி,சாகித்திய அகாதெ மி,  பக்.512, விலை ரூ.395 .  சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், அது  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கதாநாயகி குல்மோஹர், அவளுடைய தங்கை மோகரா, இந்த இருவரின் தோழி ஆகியோருக்கிடையிலான உரையாடல்களின் மூலம் நாவல் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,  சிறுவயதில் உள்ள மனிதர்கள் காலப்போக்கில் மாறிவிடுவது, அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து போவது இந்நாவலில் மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு- இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்- தமிழில்: எஸ்.டி.ஜெயபாண்டியன், அடையாளம்,  பக்.512. விலை ரூ.480. அமெரிக்காவைச் சேர்ந்த நூலாசிரியர் தனது ஆய்வுப் படிப்புக்காக 1960 இல் தமிழகம் வந்து பலரைச் சந்தித்து, மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு THE NADARS OF TAMILNADU என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமே இந்நூல். ஒரு காலத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தினர், தங்களுடைய உழைப்பாலும், முயற்சியாலும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான செயல்களாலும் எவ்வாறு முன்னேற்றம் […]

Read more

தொல்காப்பியம் சங்க இலக்கியம்

தொல்காப்பியம் சங்க இலக்கியம், உரைமேற்கோள் உரைகள், சோ.ராஜலட்சுமி; காவ்யா, பக்.280. விலை ரூ.280. பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்டன. அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்களை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுபவர்கள் உரையாசிரியர்கள். அவ்வாறு உரை எழுதுபவர்கள், உரையை விளக்கத்துக்காக பிற நூல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார்கள். அவ்வாறு எடுத்துக்காட்டும் நூல்களில் உள்ள சில பகுதிகளுக்கு உரையும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆராய்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கியம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு மாறுபட்டு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூல் தமிழ்ப் புலமை […]

Read more

பரிசுக் கதைகள் பதினெட்டு

பரிசுக் கதைகள் பதினெட்டு,  சோ.சுப்புராஜ், சக்தி வேலம்மாள் பதிப்பகம், பக்.230, விலை ரூ.150. வார,மாத இதழ்களும், இணைய இதழ்களும், தமிழ் அமைப்புகளும் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 18 சிறுகதைகளின் தொகுப்பு. எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. குடிக்க ஒரு வாய் கூட தண்ணீர் கூட தர யோசிக்கும் வறண்ட கிணறுகளைக் கொண்டது அந்த கிராமம். வயதான கணவர் தொலைதூரம் சைக்கிளில் சென்று கொண்டு வந்த தண்ணீரை, பஞ்சம் பிழைக்க வந்த கிணறு வெட்டும் சங்கையாவின் […]

Read more

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்),  கருவூர் கன்னல், குறள்வீடு, பக்.200, விலை ரூ.150. ஒட்டக்கூத்தன் தான் படித்த கல்லூரியில் துணைமுதல்வராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் இருந்த கிருட்டிணன் நம்பூதிரியுடன் நட்பு கொள்கிறான். அது கடைசி வரை நீடிக்கிறது. கரூவூர் கன்னல் எழுதிய "முள்ளிவாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய' புதினம் கிருட்டிணன் நம்பூதிரியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோரை விமான விபத்தொன்றில் கிருட்டிணன் நம்பூதிரி இழந்துவிடுகிறார். நண்பரின் சிபாரிசின் பேரில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறார். கூடவே ஒட்டக்கூத்தனும் செல்கிறான். கிருட்டிணன்நம்பூதிரி இலாசு […]

Read more

அறிவியல் தத்துவம் சமுதாயம்

அறிவியல் தத்துவம் சமுதாயம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா; தமிழில்: அ.குமரேசன், அலைகள் வெளியீட்டகம், பக்.64, விலை ரூ.50. பண்டைய இந்தியாவில் சமயச்சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் மிக விரிவாக விளக்குகிறார். மாயாவாத – மதச்சடங்கு சார்ந்த சிகிச்சை என்பதிலிருந்து பகுத்தறிவு சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறை முன்னேறுகிறது என்றும், யுக்தி-வ்யாபஸ்ரேய பேஸாஜா'வாக மருத்துவம் மாறுகிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். புத்தரின் கொள்கைகளை விளக்கும் நூலான வினய பீடகத்தில் துறவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து புத்தர் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். அது […]

Read more

பள்ளி தோற்றுவிட்டதா?

பள்ளி தோற்றுவிட்டதா?,  சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம்,  பக்.96, விலை ரூ.200. பள்ளிகள் தொழிற்கூடங்களுக்கு ஆட்களைத் தயார்ப்படுத்தும் இடம் அல்ல. பள்ளிப் படிப்பு என்பது வாழ்வியல் சிந்தனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. உயர் கல்வியையும், தொழிற்சாலைகளையும் கவனத்தில் வைத்து புத்தகங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். குழந்தைகளின் தேவை, ஆர்வத்திற்கு ஏற்ற கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிப்படை அறிவை வளர்க்கும் படித்தல், கவனித்தல், திருத்துதல், […]

Read more

கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல், ஆ.எஸ்தர் பிரதீபா, பக்.172, விலை ரூ.175. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நூலாசிரியரின் சங்க இலக்கியம் சார்ந்த நூலறிவு நம்மை வியக்க வைக்கிறது. கி.மு.300 – கி.பி.300 வரையிலான காலத்தில் நான்மாடக் கூடல் நகரில் கடைச்சங்கம் செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநூனூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றில் காணப்படும் இசை, […]

Read more

காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.188, விலை ரூ.175. இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்,எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.448; ரூ.420; வைணவ தத்துவம், வைணவத் திருத்தலங்கள் பற்றிய இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதற்பகுதியில் வைணவ தத்துவம் பற்றிய விளக்கம், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் சடங்குகளும் மந்திரங்களும், வைண விழாக்கள், ஆலய வழிபாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் திருவரங்கம்,திருக்குடந்தை, திருநந்திபுர விண்ணகரம், திருவெள்ளியங்குடி, திருக்கச்சி, திருநின்றவூர், காஞ்சிபுரம், திருநீர்மலை, திருப்பதி, திருப்புலியூர் உள்ளிட்ட 108 வைணவத் திருப்பதிகளைப் பற்றி விரிவான தகவல்களைக் கூறுகின்றன. ஒவ்வொரு திருப்பதியின் முக்கியத்துவம், மூலவர், உற்சவர், தாயார், […]

Read more
1 50 51 52 53 54 180