தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்,  ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக்.200, விலை ரூ.190. தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலின் முதல் கட்டுரையான தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது, நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன. கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் […]

Read more

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை,  ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.190, விலை ரூ.199. குண்டலினி தியானம் செய்வதைப் பற்றிய விரிவான நூல். குண்டலினி அறிவியல் ஒரு பண்டைய கல்வியாகும். தகுதியானவர்களுக்கு குரு – சீடர் வழிமுறை மூலம் வாய்வழிப் பாரம்பரியத்தின் ஊடாக அது தலைமுறை தலைமுறையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. குண்டலினியை எழச் செய்வது என்பது மனிதன் தன் உள்ளார்ந்த ஆனந்த நிலையை அடைவதுதான். இந்த ஆனந்த நிலையை கோபம், பேராசை, பயம், அகங்காரம் உள்ளிட்ட படலங்கள் மூடியுள்ளன. குண்டலினிப் பயிற்சியால் இந்த […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்),  ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய தாவரத் தரகன். கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ்,  மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம்; வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம்; தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், மூன்று பெண்களின் கதையைச் […]

Read more

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் […]

Read more

உழைப்பவனுக்கும் உற்சாகம்

உழைப்பவனுக்கும் உற்சாகம் – ஜான் ரஸ்கின்; தமிழில்: செல்லூர் கண்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.120 . மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last) என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களின் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் […]

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ், மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மை இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம் வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம் தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் மூன்று பெண்களின் […]

Read more

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை,  தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் 28 […]

Read more

நீங்களும் எடை குறைக்கலாம்!

நீங்களும் எடை குறைக்கலாம்! டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை,  பக்.180, விலை ரூ.150. தொப்பை, அதிக எடை, உடல் பருமன் எல்லாமே ஆரோக்கியத்துக்கு ஆபத்தான அறிகுறிகள். ஆனால், இதைப் பலரும் நம்புவதில்லை. உடல் எடை தானாக அதிகரித்தது போன்று, தானாகவே ஒரு கட்டத்தில் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். உடல் எடை தானாக அதிகரிக்காது. தானாக குறையவும் செய்யாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. மேலும், அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாகவே இல்லைஎன வருத்தப்படுகிறார் […]

Read more

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன? நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு […]

Read more
1 51 52 53 54 55 180