உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

குறுந்தொகைப் பாடல்கள் (1-25)

குறுந்தொகைப் பாடல்கள் (1-25), குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், பக்.136, விலை 80ரூ. குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் நல்ல குறுந்தொகை எனப் போற்றப்படும் குறுந்தொகை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் முதல் இருபத்தைந்து பாடல்களுக்கான எளிய விளக்கத்துடன், அப்பாடல்களில் இடம்பெறும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், முதல், கரு, உரிப்பொருள்களுக்கான விளக்கங்களையும் மாணவர்கள்புரிந்து கொள்ளும் வகையில் தந்திருப்பது சிறப்பு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மூல […]

Read more

இன்பியல் துன்பியல் இதழியல்

இன்பியல் துன்பியல் இதழியல், கோ.சீனிவாசன், அகரம், பக்.158, விலை ரூ.125. முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றிய நூலாசிரியர், செய்தி சேகரிப்பு சார்ந்த நிகழ்வுகளில் தனக்கு நேர்ந்த இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். கூடவே இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அது குறித்த தனது அனுபவம் சார்ந்த கருத்துகளையும் கூறியிருக்கிறார். 1990 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது நேரில் பார்க்க நேர்கிறது. அந்த காட்சிகள் அவரை நினைவிலும் கனவிலும் […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, சுப்பிரமணிய பாரதி – பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், பக்.174, விலை ரூ.140. நூலின் தலைப்பு  ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். என்றாலும் நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், நூலாசிரியர் சொல்லும் விஷயங்களில் அமிழ்ந்து பாரதியாரைப் பற்றி நம் மனதில் ஏற்கெனவே இருந்த சிறப்பான மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக வலுப்பெற்றுவிடுகின்றன. இப்படி ஒரு மகாகவியா?என்று யோசிக்க வைத்துவிடுகிறது. தமிழ்க் கவிதையை மக்கள் மொழியில் மாற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே நம் எல்லாருடைய மனதிலும் நிற்கிறார். ஆனால் பாரதியார் […]

Read more

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC)

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC), அரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், பக்.272, விலை ரூ. 250. விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். அரவிந்தர் எழுதிய எரிக் என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் […]

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

ஒரு துணைவேந்தரின் கதை, தன் வரலாறு – பாகம் -3, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,பக்.512, விலை ரூ.400. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராக இருந்த நூலாசிரியரின் தன் வரலாற்று நூலின் மூன்றாம் பாகம் இந்நூல். அவருடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா சென்றது, ஆராய்ச்சிப் படிப்பு முடித்து சென்னைக்குத் திரும்பி வந்து கிண்டி பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியர் பதவி, முதுநிலைப் பேராசிரியர் பதவி வகித்தது, இயக்குநரானது வரையிலான நூலாசிரியரின் அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த பின்பு வேலை கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்போது […]

Read more

விடைதேடும் வினாக்கள்

விடைதேடும் வினாக்கள், வாழ்வியல் – ஆன்மிகம் – தத்துவம் குறித்த தேடல்களுக்கான விடைகள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்.216, விலை ரூ.160. விடைதெரியாத கேள்வி களுக்கு இடையில்தான் வாழ்க்கை நதி ஓடிக் கொண்டிருக்கிறது என இந்நூல் உருவாகியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்கிறார் நூலாசிரியர். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அறிஞர் பெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் ஆகியோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே பெரும்பாலும் தனது பதிலாகத் தந்திருக்கிறார். என்னைச் சுற்றியிருப்பவர்கள் தீமையின் வடிவங்களாக வலம் வரும்போது, அவர்களிடமிருந்து எப்படி என்னை […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தே நூல் தொடங்குகிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை,பாலியல் தொழிலில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவது, பாலியல் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலை என நூல் விரிகிறது. குடும்பத்தில் பெண்ணின் நிலை, இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து தருதல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை அடித்தல், கட்டாயத் திருமணம் உட்பட பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும் நூல் விவரிக்கிறது. வேலை […]

Read more

விடிவதற்கு சற்று முன்னே…

விடிவதற்கு சற்று முன்னே…, ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ், தமிழில் ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.200. பொதுவாக ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தனிமனித உணர்வுகளை தேசத்தின் நலனோடு இணைப்பதாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளி உருவாக்கிய பாத்திரங்களின் உணர்வுகளோடு அதை படிக்கும் வாசகன் ஒன்றிவிடும் வகையில் ரஷ்ய படைப்புகள் இருப்பதே அவற்றின் வெற்றிக்கான காரணமாகக் கூட கூறலாம். அந்தவகையில் விடிவதற்கு சற்று முன்னே என்ற இந்த நாவல் ரஷ்ய புரட்சியை மையமாக வைத்து காதல் உணர்வோடு பின்னப்பட்ட படைப்பாகும். தேச நலன் கொண்ட தலைமறைவு வாழ்க்கை வாழும் […]

Read more

மெய்ப்பொருள் கண்டேன்

மெய்ப்பொருள் கண்டேன், எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்தஸ், பக்.348, விலை ரூ.320. சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக எளிமையாக, சுவையாகச் சொல்லும் நூல். கி.மு.325 இல் மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் சிந்துசமவெளியைத் தாண்டி படையெடுத்து வந்து இந்திய மன்னர்களைத் தோற்கடித்தது, கி.பி.1175 இல் முகமது கோரி படையெடுத்து, அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆக்கிரமித்தது என அடிமையான வரலாற்றை ஒருபுறம் இந்நூல் சொல்கிறது. இன்னொருபுறத்தில் அடிமைத் தளையை எதிர்த்து வேலூர் கலகம், 1857 சிப்பாய் கலகம், திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தது. தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், வீரபாண்டிய […]

Read more
1 49 50 51 52 53 180