புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக்.120. விலை ரூ.300. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் வரம் வெகு சிலருக்கே வசப்படும். அதில் எம்ஜிஆருக்கு தனியிடம் உண்டு. எம்ஜிஆர் உடல் நலிவுற்று அதிலிருந்து மீண்டதில் தொடங்கி, சில காலத்துக்குப் பிறகு அவர் மரணம் அடைந்தது வரைக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கிப் பழகியவரும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவர் எச்.வி.ஹண்டேவால் எழுதப்பட்டது இப்புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. எனவே, அதில் […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள்

உபநிஷதச் சிந்தனைகள் – (ஐதரேயம், ப்ரச்னம், ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம்) -சங்கரரின் சிந்தனைகளைத் தழுவியது- பகுதி-3; தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ், நூற்று எட்டில் தசோபநிஷத் என்று பத்து உபநிஷத்துகள்தாம் ஆசார்யர்களால் பாஷ்யம் எழுதப்பட்டிருக்கின்றன. உபநிஷதச் சிந்தனைகள் மூன்றாம் பாகமான இந்நூலில் ரிக் வேதத்திலிருந்து ஐதரேயமும், அதர்வணத்திலிருந்து ப்ரச்னமும், சுக்ல யஜுரிலிருந்து ப்ரஹதாரண்யகமும், சாம வேதத்திலிருந்து சாந்தோக்கியமும் இடம்பெற்றுள்ளன. இந்த உபநிஷதங்களில் உள்ள மந்திரங்களின் விளக்கத்தை சிந்தனைகள் என்று நூலாசிரியர்கள் தொகுத்து வழங்கியிருப்பது தனிச்சிறப்பு. முதலிரண்டு நூல்களில் ஏனைய ஆறு உபநிஷதச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

சொல்லாய்வுகள்

சொல்லாய்வுகள்,  வய் .மு. கும்பலிங்கன்,  மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு. அத்தகைய சொற்களின் பொருளை அறியாமலேயே அவற்றை நாம் அன்றாடம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பது இந்நூலைப் படிக்கும்போது நன்கு விளங்குகிறது. அத்தகைய சொற்களை […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் – நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.248, விலை ரூ.225; உலகம் முழுவதும் 8.5 கோடி பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த தி ஆல்கெமிஸ்ட் நூலின் தமிழாக்கம் இது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், யாருமே கண்டடைய முடியாத பொக்கிஷத்தைத் தேடி அலைகிறான். காடு, மலை, பாலைவனம் என பயணிக்கும் அவன், அவனுடைய வழியில் கண்ட காட்சிகளையும், அனுபவங்களையும் […]

Read more

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்

இருதய நோய்களும், இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்,  பக்.272. விலை ரூ.180. வெறும் உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இதயம், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத உறுப்பாக எப்படி விளங்குகிறது? என்பதை எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. பெரிய அளவிலான மருத்துவக் கலைச் சொற்களையோ, புரியாத நோய்களின் பெயர்களையோ எடுத்துரைக்காமல், சாமானிய வாசகர்களை கவனத்தில் கொண்டு நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன இதய மாற்று அறுவைச் சிகிச்சை […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102,  விலைரூ.120. நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர். காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது […]

Read more

மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக்.240, விலை ரூ.200. தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் வீர […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்,  தமிழில்: கோபால் மாரிமுத்து, மணிமேகலைப் பிரசுரம், பக்.520, விலை ரூ.350. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது  தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். ஆலிவர் க்ராம்வெல், நெப்போலியன் போனபர்ட் , டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 8 அயல்நாட்டவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்று உள்ளன. குறிப்பிட்ட கால வரலாற்று நிகழ்வையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள சொற்பொழிவுகள் உதவுகின்றன. தாதாபாய் நெரோஜி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசியது, சுவாமி விவேகானந்தர் 1893 – இல் […]

Read more

உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு

உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு, சீனி.வரதராஜன், சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.140. முதுமையை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த செல்வத்தை அடுத்த தலைமுறை எவ்வித இடர்ப்பாடும் இன்றி அனுபவிக்க வேண்டும்; குடும்பத் தலைவனாக பொறுப்பேற்கும் எந்த வயதினரும் சொத்துக்களின் எதிர்கால அனுபவ உரிமையை முறைப்படி உயில் எழுதி வைப்பது நல்லது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதற்கு ஒரு சில உதாரணங்களையும் எடுத்துரைக்கிறார். உயிர் எழுதுதல், செட்டில்மெண்ட் […]

Read more
1 47 48 49 50 51 180