கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை – சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை,  முகில், விகடன் பிரசுரம்,  பக்.264, விலை ரூ.190 எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகளான ஹிட்லர், முசோலினியை விட மிகக் கொடூரமானவர்களாக உலகில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் 21 சர்வாதிகாரிகளின் கதை இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 3800 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபியின் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை உண்டு. இல்லையென்றால் குற்றம் சுமத்தியவனுக்கு மரணதண்டனை இருந்திருக்கிறது. கி.பி.1547 இல் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகைக்கு மேற்கே அர்பாட் […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம் (பயண அனுபவங்கள்), டி.கே.எஸ்.கலைவாணன்,  வானதி பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்&amp என்ற திருமூலரின் வாக்கின்படி நூலாசிரியர் தாம் 2010-ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையை இந்நூலில் பயணக் கட்டுரையாகப் படைத்துள்ளார். திருக்கயிலாயத்துக்குச் சென்று வர மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். அத்துடன் இறை அருளும் தேவை என்பதை அவர் நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு நடத்தும் கயிலாய யாத்திரை குழுவில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்தும், தனியார் அழைத்துச் செல்லும் யாத்திரை குழுவில் […]

Read more

மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே, க.ஜெயச்சந்திரன், காவ்யா, பக்.88, விலை ரூ.90. மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் ஜோதிராவ் புலே. 1827 இல் பிறந்த அவர், அனைத்துச் சாதியிலும் உள்ள ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 170 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளைத் திறந்து நடத்தியவர். அதற்காக அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என்றபோதிலும் மனம் கலங்காமல் தொடர்ந்து தனது பாதையில் நடைபோட்டவர். விதவைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Read more

நீரிழிவு நோய் இருந்தாலும்…

நீரிழிவு நோய் இருந்தாலும்… இயல்பான வாழ்க்கை வாழலாம், லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.120. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் தலைமையகம் என்ற நிலையை இந்தியா எட்டிவிடும் என மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும் எனும் நூலாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூல், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய விழிப்புணர்வு வழிகாட்டி எனலாம். குறிப்பாக, சில கற்பனை கருத்துகளும், உண்மையும் என்ற பகுதி புதுமையானது. சர்க்கரை நோய் வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய […]

Read more

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள், ஏற்காடு இளங்கோ, யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.388, விலை ரூ.300. உலகமயமாகி வரும் இந்நாளில் உலக அளவிலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சில உள்ளூர் அளவில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் அதேசமயம், அவற்றுக்கு எதிர்ப்பும் கூட எழுகிறது. உதாரணம், உலக காதலர் தினம். இந்நூல் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான உலக தொழிலாளர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், முட்டாள்கள் தினம், உலக புத்தக தினம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை பலரும் கேள்விப்படாத உலக ஈரநிலங்கள் தினம், […]

Read more

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை,  இரா.அறவேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.36, விலை  ரூ.30. சமகால உலகின் நிகழ்வுகளை, அவற்றிற்கு அடிப்படையாக அமைந்தவற்றைப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் பலவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கின்றன. கோவை ஞானியின் பார்வையை விளக்கும் சமதர்மப் படைப்பாளுமை, பெரியாரியம், சமதர்மப் பேருணர்வு எனும் இறையுணர்வு ஆகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஞானியின் பல நூல்களிலிருந்து பல கருத்துகளை நூலாசிரியர் ஆராய்ந்து ஞானியின் மெய்யியல் சிந்தனை பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார். மார்க்சியம், […]

Read more

ஹைக்கூ புதிது

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு),  நெல்லை சு.முத்து, பக்.240, விலை ரூ.220. ன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. ஹைக்கூ பற்றித் தெரிந்து கொள்ள பயன்படும் நூல். நூலாசிரியர் புகழ்பெற்ற அறிவியலாளர். ஹைக்கூ பற்றிய நூலிலும் அவருடைய அறிவியல்சார்ந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. விவரங்களைப் பரிசீலனை செய்து முடிவுக்கு வருதல் அறிவியல் அணுகுமுறை. ஹைக்கூ பற்றிய இந்நூலிலும் ஹைக்கூ சார்ந்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன. சுமார் 274 ஹைக்கூ கவிஞர்கள் உள்ளனர்; 26 ஹைக்கூ இதழ்கள் உள்ளன; ஹைக்கூ எழுதுபவர்களைக் […]

Read more

ஸ்ரீ ருத்ரம் விரிவுரை

ஸ்ரீ ருத்ரம் விரிவுரை, ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, தமிழில்: க.மணி; , அபயம் பப்ளிஷர்ஸ், பக்.256, ரூ.250 வைதிகர்கள் ஓதும் வேத மந்திரமான ஸ்ரீருத்ரம் என அழைக்கப்படும் சத ருத்ரீயத்திற்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஆங்கில விரிவுரை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு பதம் பிரித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் வெறும் அர்த்தம் சொல்வது என்றில்லாமல், ஒவ்வொரு மந்திரத்தின் பலனும் அதன் அர்த்தமும் அதோடு சேர்ந்த குட்டிக் கதைகளும் வேதாந்த விஷயங்களும் புத்தகத்தை வெகு சுவாரஸ்யமாக்குகிறது. காயிகம், வாசிகம், மானசம் என்ற […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு – இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.480, விலை ரூ.250. வரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார். காந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை,  ஸ்வாமி,  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக்.752, விலை ரூ.600. பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர். ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை ஸ்ரீபாஷ்யம் என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு ஸ்ரீபாஷ்யம் […]

Read more
1 46 47 48 49 50 180