ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ், தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384. ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க வேண்டுமென்ற […]

Read more

அகநானூறு

அகநானூறு, ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், பக்.374, விலைரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன.‘கம்பர் விலாசம் 39‘; ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், 91 முதல் 400 […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன்,  கிழக்கு பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. ஆங்கிலவழியில் பயில்வது இன்று அதிகமாகிவிட்டதால், தமிழில் எழுதும்போது பல ஐயங்கள் தோன்றுவது இயல்பானதே. அதிலும் இன்று நாம் பயன்படுத்துகிற பல சொற்களைத் தவறாகவே எழுதிக் கொண்டிருக்கிறோம். அவற்றைச் சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நூல் அப்படிப்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது. தேநீர், தேனீர் இவற்றில் எது சரி? எண்ணெய் சரியா? எண்ணை சரியா? ஐம்பத்து ஏழு என்று குறிப்பிடுவது சரியா? ஐம்பத்தி ஏழு என்பது சரியா? சென்னை பட்டணம், நாகப்பட்டினம் என்று சொல்கிறார்களே… பட்டணத்துக்கும் பட்டினத்துக்கும் […]

Read more

கர்ப்ப வித்யா

கர்ப்ப வித்யா, ஆண்டாள் பாஸ்கர், ஆண்டாள்ஸ் லக்ஷ்மி ஃபெர்டிலிட்டி ரிசர்ச், பக்.192, விலை ரூ.250. குழந்தைகள் பிறந்தவுடன்தான் அவர்களுக்கு அறிவு, மனவளர்ச்சி ஏற்படும் என்பதில்லை, அவர்கள் கருவிலிருக்கும்போதே அவற்றைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வயிற்றில் உள்ள குழந்தையுடன் தாய் பேசுவதால், அது குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, கர்ப்பிணி பெண்ணின் உடல், மனம், புலன்கள், உணர்வுகள் ஆகிய நான்கையும் சமநிலையில் வைக்க முடியும் என்று கூறும் நூலாசிரியர், கருவிலிருக்கும் குழந்தையுடன் தாய் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். கருவிலிருக்கும் […]

Read more

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி,  சமர் யாஸ்பெக், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக்.344, விலை ரூ.320 சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நூலாசிரியர் தற்போது வசிப்பது பாரிஸ் நகரில். எனினும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் தாய்நாடான சிரியாவுக்கு யாருக்கும் தெரியாமல் துணிச்சலுடன் நான்கு முறை எல்லைத் தாண்டிச் சென்று, சிரியா மக்களின் இன்றைய அவல வாழ்க்கையை இந்நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த மக்களின் மீதே வெடிகுண்டுகளை வீசுகிற அரசுக்கும், மரண வெறி கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லல்படும் […]

Read more

நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம்,  யுகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 167, விலை ரூ. 300. திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?) தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய ‘மண்டேலா – லாங் […]

Read more

யாதும் ஊரே

யாதும் ஊரே – 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், பக்.800. விலை ரூ.1000. தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் […]

Read more

அரியணையில் ஏறிய பொய்கள்,

அரியணையில் ஏறிய பொய்கள், எஸ்.ஆரோக்கியசாமி,  பக்.296, விலை ரூ.220. தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நூலாசிரியர், அதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டிருக்கிறார். மின்வாரியத்தில் வேலை செய்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நூலாசிரியருக்குக் கிடைத்த அரிய அனுபவங்கள் இந்நூலில் சுவையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியலில் மிக உயர்வானவர்களாகக் கருதப்பட்டவர்கள், கருதப்படுகிறவர்களுடன் கிடைத்த அனுபவங்களை எந்தவிதத் தயக்கமும், அச்சமும் இல்லாமல் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். சில அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் கூறும் செய்திகள், ‘இவரா? இப்படி?’ 39, என்று நினைக்கும் […]

Read more

பெண்ணாகப் பிறந்தாலே

பெண்ணாகப் பிறந்தாலே, ச.அமுதா, இராசகுணா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாழ முடியாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி , இந்நிலையை எவ்வாறு மாற்றுவது என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிறப்பதற்கு உரிமை வேண்டும்#39; என்ற முதல் கட்டுரை ‘பெண் சிசுக்கொலை‘39; நீண்டகாலமாக இருப்பதையும், இன்றும் அது தொடர்வதையும் விவரிக்கிறது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பிரச்னைகள், அவர்கள் மீதான வன்கொடுமைகள், சமுதாயத்தில் பெண்களைக் கீழாக நினைக்கும் மதிப்பீடுகள், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெண்கள் […]

Read more

பத்துப்பாட்டு யாப்பியல்

பத்துப்பாட்டு யாப்பியல், மு.கஸ்தூரி, சந்தியா பதிப்பகம், பக்.584, ரூ.500. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய இலக்கண வகைகளுள் யாப்பிலக்கணமும் ஒன்று. செய்யுள் இயற்ற இன்றியமையாதது யாப்பிலக்கணம். தொல்காப்பிய செய்யுளியலில் தொடங்கி, காலந்தோறும் பா வடிவங்களிலும், உறுப்புகளிலும் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது யாப்பிலக்கணம். பாக்களின் வடிவ அமைப்பு, ஒலிநலக் கூறுகள் முதலியவற்றை ஆராயும் இலக்கணத் துறை இது. யாப்பியல் குறித்து ஆய்வு செய்வோர் அருகி வரும் இந்நாளில், முனைவர் பட்ட ஆய்வுக்கு யாப்பியலைத் துணிச்சலும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர். மேலும், குமரகுருபரரின் […]

Read more
1 86 87 88 89 90 180