கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும், ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.220, விலை ரூ.222. முழுநேரமும் கணினி முன் அமர்ந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வீடுகளிலும் கூட கணினிகள் நிறைய வந்துவிட்டன. போதாதற்கு மடிக் கணினிகளைச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த முடிகிறது. கணினி நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்புகள், உடல் வலி, மன இறுக்கம், உடல் களைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது. கணினியால் ஏற்படும் […]

Read more

திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200. காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. 1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு. தமிழ் நூல் […]

Read more

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்)

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி, பாவை பப்ளிகேஷன்ஸ்,  பக்.1208, விலைரூ.900. மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர். கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் ‘வரலாற்றுச் சிறப்பில் மதுரை39‘ […]

Read more

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்), கு.கணேசன், காவ்யா, பக்.403, விலை ரூ.400. இன்றைய நவீன உலகில் நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்தும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும், கருவிகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நூல் நாம் அறியாத பல புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், கருவிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மாரடைப்பு நோயைக் குணப்படுத்த ஸ்டென்ட் பொருத்துவார்கள். இந்த ஸ்டென்ட்டைச் சரியாகப் பொருத்துவதற்கு ரத்தக்குழாயின் உட்பகுதியைத் தெரிந்து கொள்ள பயன்படும் ‘ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி தொழில்நுட்பம் 39‘ பற்றி இந்நூல் விளக்குகிறது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் […]

Read more

ஜோதிடவியல்- முதற்பாகம்

ஜோதிடவியல்- முதற்பாகம், கே.கே.பாலேந்தர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஜோதிஷ குருகுலம், பக்.304,  விலைரூ.400. ஜோதிடத்தை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்ட நூல் இது. இந்நூலில் முதலில் பஞ்சாங்கம் பாலபாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளின் பிரிவுகள், அயனங்கள், ருதுக்கள், மாதங்கள், திதி, நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தன்மைகள் மற்றும் பாதங்கள், ராசி மண்டலம், கரணங்கள், யோகங்கள், ஹோரை, நவக்கிரகங்கள், ராசிகளின் தன்மைகள், தொழில்கள், கிரங்களின் தன்மைகள், காரகத்துவங்கள் அனைத்தையும் சிறப்பாக எளிதாகப் புரியும்படி விளக்கியுள்ளார் ஆசிரியர். இவற்றை பாலபாடமாகக் கற்பித்த பின்னர், லக்னத்தை பற்றியும் லக்னத்தை கணிக்கும் […]

Read more

மகரந்த சுவடுகள்

மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70. தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த […]

Read more

இக்கால இந்தியா மற்றும் கல்வி

இக்கால இந்தியா மற்றும் கல்வி,  வி.நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.190, விலைரூ.120. பி.எட். பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இந்திய கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள நூல். பல்வேறு இனம், மொழி, நிலப்பரப்பு, பொருளாதார, கலாசார வாழ்க்கைகள் கொண்ட பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை நூல் ஆராய்கிறது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அல்லது அடுத்த வகுப்புக்குப் போக முடியாமல் தேர்வில் தோல்வியடைந்து தேங்கிவிடுவது, பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள […]

Read more

புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம்,

புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம், செ. நடேசன், விஜய்ஆனந்த் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100. உலக மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகப் புற்றுநோய் மாறிவிட்டது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ஒரு சிகிச்சை ஹீமோ தெரபி. ஹீமோ தெரபி பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் தருகிறது. ஹீமோ தெரபி மருந்துகளை உடலில் செலுத்தும் பலவிதமான முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் உடலுக்குள் சென்று உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை அழித்துவிடுகின்றன. எனினும் இந்த மருந்துகளினால் முடிகொட்டுதல், எலும்பு […]

Read more

யானைச் சொப்பனம்

யானைச் சொப்பனம், இரா.நாறும்பூநாதன் நூல் வனம், பக்.176, விலை ரூ.120. நூலாசிரியர் முகநூலில் எழுதிய 59 பதிவுகளின் தொகுப்பு.நூலாசிரியரோடு தொடர்புடைய ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய/ தொடர்பில்லாத மனிதர்கள், இடங்கள், அவர் சந்திக்க நேர்ந்த உலக நடப்புகள் என பலவும் இந்தப் பதிவுகளின் பேசுபொருள்களாகியுள்ளன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாச பண்டிதர், குன்றக்குடி அடிகளார் ரசிகமணி டி.கே.சி, போன்றோருடன் அவருடைய ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் இப்பதிவுகளில் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனர். பாளையங்கோட்டையில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனிப் பள்ளியைத் தொடங்கிய அனி ஜேன், திருநெல்வேலியில் இரயில்வே […]

Read more

திருக்கோயில்கள் திருவிழாக்கள்

திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்), கைலாசம் சுப்ரமணியம், வானதி பதிப்பகம், பக்.480, விலை ரூ.300. ஆலயங்கள் அனைத்தும் கலை, கலாசாரம் இவற்றின் உறைவிடமாகத் திகழ்வதை இந்நூல் எடுத்தியம்புகிறது. ஆலயங்களில் கலைகள், நூல்களின் அரங்கேற்றம் நடைபெறுதல், கோயில்கள் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தெய்வங்கள் மூலவர், உற்சவர் திருமேனிகள் செய்தல், தெய்வத்திற்கு ஆபரணங்கள் செய்தல், வாகனங்கள், தேர், சிற்பங்கள் செய்தல் என எல்லாக் கலைகளுமே ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்து வருவதை விளக்குகிறது. சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் கொடியேற்றம் (துவஜாரோஹணம்), கொடியிறக்கம் (துவஜஅவரோஹணம்), துவஜஸ்தம்பத்தின் […]

Read more
1 88 89 90 91 92 180