தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. 1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை. இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்,  க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம்,  பக். 461, விலைரூ.290. தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது. இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு […]

Read more

பிரபலங்களின் குழந்தைப் பருவம்

பிரபலங்களின் குழந்தைப் பருவம், ப்ரியன், கலைஞன் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160. இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில், கவிஞர் வைரமுத்து, சுகிசிவம், டாக்டர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுகிறார்கள். இரண்டாம் பிரிவில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், சார்லி சாப்ளின், தமிழ்வாணன், வால்ட் எலியாஸ் டிஸ்னி போன்ற பிரபலங்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் பதிவாகியுள்ளன. நான்காம் பிரிவில் இயக்குநர் […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. காமராஜரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. காமராஜர் என்கிற சாதாரண மனிதர் பெரிய தலைவராக எப்படி பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடங்கி வைத்த கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்கென அவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சிக் கழகம், வேளாண்மை வளர்ச்சிக்காக அவர் உருவாக்கிய அணைகள், அவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் […]

Read more

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர், தமிழில்; செ. நடேசன், எதிர் வெளியீடு, பக். 452, விலை ரூ. 380. காஷ்மீர் பிரச்னை பற்றி பொதுத் தளத்தில் கூறப்படும் காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில், இந்த நூல் வித்தியாசமான அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்ட நூல் என்று சொல்லும் அளவுக்கு மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்கள், வெறுமனே இஸ்லாமியர்களின் வெறித்தனம் என கட்டமைக்கப்பட்டுள்ள பொது வெளிக்கு, அது காஷ்மீரி தேசிய இனத்தின் விடுதலைக் […]

Read more

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பரமாச்சாரியாரைப் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்கள்), தொகுப்பு: கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், 10 தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியும், பக்.144, விலை ரூ.60. ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, நடமாடும் தெய்வமாக, பேசும் தெய்வமாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர். கடவுள் பக்தியை மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாற்றிய கருணா சாகரம். தமது அருளாசியினாலும், அன்பாலும், தாய் போன்ற கருணை உள்ளத்தாலும் தம்மை நாடி வந்தவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். மக்களின் ஒவ்வொரு பிரச்னைகளையும் […]

Read more

திருவாசகம்

திருவாசகம் – மூலமும் உரையும், உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.552, விலை ரூ.200. திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, ‘பா39’ வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல். சிவபுராணத்தில்,‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 39’ என்பது திருத்தமான […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை, பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம்,  பக்.136, விலை ரூ.80. அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்! நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் […]

Read more

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்,  ப. முருகன், கங்காராணி பதிப்பகம்,   பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாப்ஃட் நிறுவனம் தயாரித்துள்ள ‘சொல்39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஒüவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை […]

Read more
1 85 86 87 88 89 180