ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக்.288, விலை ரூ.225. உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு ஆதாரமாக இருப்பது ஹைட்ரோ கார்பன். அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா பொருளைச் சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவற்றை நாம் பெறுகிறோம். அப்படிப்பட்ட ஹைட்ரோ கார்பனை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியாததால், அதற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் […]

Read more

சொல்லில் நிரம்பும் குளம்

சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130. நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை […]

Read more

சைவ சித்தாந்த நன்னெறி

சைவ சித்தாந்த நன்னெறி, ச.சௌரிராசன், மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, பக்.528, விலை ரூ. 350. ‘சைவ சமயமே சமயம்39’ என்று கூறிய தாயுமானவர் பாடலில் தொடங்கி, சைவ சமயத்தின் அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், மும்மல இயல்பு, பாச நீக்கம், சிவப்பேறு உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் பதினைந்து பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் ஆசிரியர். சைவ சித்தாந்தம் குறித்து ஏற்கெனவே அதிகம் சொல்லப்பட்ட செய்திகளை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டிவிட்டு தாதான்மிய சம்பந்தம், பஞ்ச சக்திகள், அருவ, உருவ, அருவுருவ வடிவங்கள், சுத்தாத்துவிதம், […]

Read more

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும், ஆங்கில மூலம் ச.இராஜரத்தினம், தமிழில் ப.காளிமுத்து, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பக்.560, விலை ரூ.600. விருதுநகரில் சாதாரண பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நூலாசிரியர், தனது கடின உழைப்பால் இந்திய வருவாய்த்துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தவர். எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையாகப் பணிபுரிந்தவர். பல பணியிட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டவர். வரி ஏய்ப்புச் செய்பவர்களின் பல தந்திரங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களை வரி செலுத்தச் செய்ய நூலாசிரியர் செய்த பல முயற்சிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

ஆடிப்பாவை

ஆடிப்பாவை, ப. தமிழவன், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.350. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்களின் மனங்களில் மின்னிக் கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் காலம் இது. அப்போதைய சமூகப் பிரச்னைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இப்போதும் தொடர்கின்றன. இப்போது பேசப்படும் மாநில உரிமைப் பிரச்னை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, இப்போதும் நடைபெறும் சாதி வெறிக் கொலைகள்… என தீர்க்கப்படாத பிரச்னைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அவற்றை நடத்திய அரசியல் கட்சியினரின் செயல்கள், […]

Read more

அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ. 50. தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் […]

Read more

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும்

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும், தமிழ்மணவாளன்,  அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.400, விலை ரூ390. ஓர் ஆய்வேடு நூலாகியுள்ளது. தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைகளில் நாடக ஆக்கக் கூறுகள், நவீன தமிழ்க் கவிதைகளில் பாத்திரப் படைப்பும் உரையாடலும், நவீன தமிழ்க் கவிதைகளில் காலமும் வெளியும் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு திகழும் இந்நூல், எடுத்துக் கொண்ட தலைப்புக்குத் தகுந்தாற்போல இந்நான்கு இயல்களிலும் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. நூல் முழுவதும் நவீன தமிழ்க் […]

Read more

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம், கா.சு.வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், பக்.206, விலை ரூ.140. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தோன்றி வரும் ஆறுதான் நொய்யல் ஆறு. நீலியாறு, கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி ஆகியவைதான் நொய்யல் ஆறாக மாறுகின்றன. இன்று காய்ந்து கிடக்கும் இந்த ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவரே நேரடியாக வெள்ளநீரில் இறங்கி நடந்து மக்களைச் சந்தித்திருக்கிறார். இப்போது நொய்யல் ஆற்றின் பல பகுதிகள் […]

Read more

பெரியார் 95

பெரியார் 95. ஞான வள்ளுவன், இனியன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.300. ஈ.வெ.ரா.பெரியாரின் வாழ்க்கை வரலாறு, இந்நூல். அவர் சிறுவயதில் அவர் செய்த குறும்புகள், வாலிப வயதில் அவருக்கிருந்த தீய பழக்கங்கள், அவற்றை அவர் கைவிட்டது, பொறுப்பான வணிகராக, நகராட்சி தலைவராக அவர் செயலாற்றியது, காங்கிரஸில் சேர்ந்தது, மதுவிலக்கை ஆதரித்துப் போராடியது, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுயமரியாதை இயக்கம் கண்டது, மணியம்மையைத் திருமணம் செய்தது, தி.மு.க. உதயமானது, காமராசரை பெரியார் ஆதரித்தது என அவருடைய 95 ஆண்டுகால வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து சென்றதை […]

Read more

பெரியபுராணக் கதைகள்

பெரியபுராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.150. சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று. சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் […]

Read more
1 83 84 85 86 87 180