108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்,  இரா.இளையபெருமாள்,  சகுந்தலை நிலையம், பக்.440. விலை ரூ.300. மானிட சரீரத்தோடு போக முடியாத திருப்பாற் கடல், இப்பூவுலகில் இல்லாத திருப்பரமபாதம் ஆகிய இரு திவ்ய தேசங்கள் உட்பட, 108 திவ்யதேசங்களைப் பற்றிய விரிவான நூல் இது. சோழநாட்டுத் திருப்பதிகள், நடுநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள், மலைநாட்டுத் திருப்பதிகள், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், திருநாட்டுத் திருப்பதிகள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டு, இந்த திருப்பதிகள் – திவ்ய தேசங்கள்- அமைந்திருக்கும் இடம், அதற்குச் செல்லும் வழிகள், போக்குவரத்து வசதிகள், […]

Read more

துருக்கித் தொப்பி

துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர்ராஜா, விஜயா பதிப்பகம், பக்.224, விலை ரூ.170. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பம், காலப்போக்கில் வறுமையின் பிடியில் சிக்கி எவ்விதம் நலிவடைந்தது என்பதை இந்நாவல் சித்திரிக்கிறது. நலிவு என்பது வெறும் செல்வக் குறைவாக மட்டுமல்லாமல், அக்குடும்பத்தை மதிக்கத் தகுந்ததாக வைத்திருந்த அனைத்தும் நலிந்து போனதை நாவல் சித்திரிக்கிறது. இஸ்லாமிய சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள், பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் மனரீதியான சிக்கல்கள், குடும்ப வன்முறை என அனைத்தையும் மிக நுட்பமாக, மிக இயல்பாகப் […]

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து), தமிழில்: போதிபால மகாதேரோ, திரிபிடக தமிழ் நிறுவனம், பக்.456, விலை ரூ.500. புத்தர் ஞானம் பெற்ற பின்பு 45 ஆண்டுகள் போதனைகள் செய்துள்ளார். அவை அவருடைய தாய்மொழியான பாலி மொழியில் பல நூறு ஆண்டுகளாகச் செவி வழியாக வழங்கப்பட்டன. போதனைகள் ‘திரிபிடகம்’ என அழைக்கப்பட்டன. கி.மு.77 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட வட்டகாமினி அபயன் என்ற மன்னன், நான்காவது பெளத்த சங்கத்தைக் கூட்டி, பாலி மொழியின் முழு திரிபிடகத்தை சிங்கள […]

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், பக்.116, விலை 100ரூ. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்ததற்குப் பின்பு அறிவியல் உலகில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களை மிக எளியமுறையில் இந்நூல் விவரிக்கிறது. ஆகாயத்துக்கும் வடிவக் கட்டமைப்பு உண்டு; ஒருவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பொறுத்து காலம் மெதுவாகவும், வேகமாகவும் நகரும்; ஒளி துகள்களால் ஆனது; ஆற்றலும் பொருளும் வேறு வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றே. பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றல் பொருளாக மாறும்; இவைதான் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக் கண்டுபிடிப்பை […]

Read more

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள், சுதா மூர்த்தி, தமிழில் உமா மோகன், சப்னா புக் ஹவுஸ், பக். 204, விலை 130ரூ. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய தொகுப்பு இந்தப் புத்தகம். நூலாசிரியர் சுதாமூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர். நூலாசிரியரின் உதவியால் இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவி பெற்று பொறியியல் படித்த தபால்காரரின் மகன், பின்னாளில் உயர்ந்த நிலைக்கு வருகிறார். தனது தோழியின் மகளைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞனின் குடும்பம். எதேச்சையாக சுதா மூர்த்தியை அந்த வீட்டில் […]

Read more

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்), மறைமலையடிகள், சிவாலயம் வெளியீடு, பக். 432, விலை 280ரூ. திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். ;சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது […]

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை ரூ.160. புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன. புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் […]

Read more

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு,  மருத்துவர் ச.இராமதாசு, வழுதி வெளியீட்டகம், பக்.240, விலை ரூ.200. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ‘கல்கி’வார இதழில் தொடராக எழுதியவற்றின் நூல் வடிவம் இது. திண்டிவனத்துக்கு அருகில் உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆதி திராவிடர் காலனியில் இருந்த பள்ளியில் படித்தது, ஆறாம் வகுப்பில் இருந்து சென்னையில் உள்ள அக்கா வீட்டில் தங்கிப் படித்தது, ஒரு செட் உடையைத் தினமும் துவைத்துப் போட்டு அணிந்தது, தினமும் 6 கி.மீ. நடந்து […]

Read more

இந்திய சீனப் போர்

இந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம்,  பக்.416, விலை ரூ.350. 1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர். போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் […]

Read more

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள்

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், வே.குமரவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.508, விலை 415ரூ. சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை அவர் எழுதியிருப்பதால், பெரும்பாலான நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் […]

Read more
1 81 82 83 84 85 180