கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், சி.பிரதாபசிங், காவ்யா, பக்.432, விலை 430ரூ. கன்னியாகுமரிக் கோயில் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் இந்நூல். கன்னியாகுமரிக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி தெய்வத்தின் கோயிலின் வரலாற்றை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே கன்னியாகுமரிக் கோயில் இருந்திருக்கலாம் என்று கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கோயிலைப் பற்றி ஆய்வு செய்கிறார். கோயில் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் கோயில்களில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளை […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தமிழில் தொ.மு.சி. ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. 1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய தாய்க்கு தொடக்கத்தில் இது உடன்பாடில்லை என்றாலும், சிறிதுநாளில் மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். […]

Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வித்வான் வே.லட்சுமணன், வானதி பதிப்பகம், பக்.288, விலை 150ரூ. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது 1985-ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 5-ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது. புகழுக்கு ஒருவர்  எடுத்ததை முடிப்பவர் எதிர்ப்பினை வெல்பவர் ஆகிய தலைப்புகளில் முதல் மூன்று பாகங்களில் எம்.ஜி.ஆர். நாடக அனுபவங்கள், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அடைந்த ஏமாற்றங்கள், திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் பெற்ற வெற்றிகள் தொடர்பான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் நல்ல தங்காள் நாடகத்தில் ஏழாவது பையன் வேடத்தில் […]

Read more

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும், நீதிநாயகம் து.அரிபரந்தாமன், நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, பக். 88, விலைரூ.75. ‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் 39’ – இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, ‘பொதுபள்ளிக்கான மாநில மேடை 39’ அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.104, விலை ரூ.100. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிகவும் எளியமுறையில் விளக்கும் நூல். இடம், வலம், மேலே, கீழே, சிறியது, பெரியது, அதிக தூரம், குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம், இடம்சார்புடையவை. திசை சார்புடையது. பேரண்டப் பிறப்பு, முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு போன்றவற்றை சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் […]

Read more

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500. கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் […]

Read more

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு, சுசிலா ரவீந்திரநாத், தமிழில்: எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. தமிழகத் தொழில்துறை வளர்ச்சியை விவரிக்கும் ஆவணமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழில்நிறுவனங்களான முருகப்பா குழுமம், டிவிஎஸ் குழுமம், அமால்கமேஷன்ஸ் குழுமம், எம்ஆர்ஃஎப், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொடக்கம், வளர்ச்சி, அவற்றின் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது. தொழிலைத் தொடங்கியவர்களின் பின்புலம், அதற்காக தொழில்முனைவோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பு ஸ்ரீராம் குழுமம், அப்பல்லோ மருத்துவமனை, […]

Read more

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்), உரையாசிரியர்: முனைவர் பழ.முத்தப்பன, சகுந்தலை நிலையம், பக்.688, விலை ரூ.1200. வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லாக் கோயில்களுக்குமே அந்தக் கோயில்களைப் பற்றிய தலபுராணம் எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு தலபுராணம் பாடியவர்களுள் பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை மாநகரில் சிவபெருமான் தம் பக்தர்களின் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைச் செய்யுள் வடிவில் பரஞ்சோதியார் தொகுத்தளித்ததே திருவிளையாடற் புராணமாயிற்று. இப்பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று பரஞ்சோதியார் பாடியது, மற்றொன்று பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியது. பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய […]

Read more

இராமாயண ரகசியம்

இராமாயண ரகசியம், தமிழருவி மணியன்,கற்பகம் புத்தகாலயம், பக்.208, விலை ரூ.140. வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன. பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் […]

Read more

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்.356, விலை ரூ.225. வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்றை தனது அற்புத நடையில் பதிவு செய்திருக்கும் நூல். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக சொற்பொழிவின் சிகரமாகத் திகழ்ந்த வாரியாரின் இளமைப் பருவ நிகழ்வுகள் வியக்க வைக்கின்றன. 52 கி.மீ. தூரம் நடந்து வந்து, பொய் சொல்ல மறுத்து, உண்மையைச் சொன்னதால் சாமியைத் தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்பிய வாரியாரின் பாட்டனார் சாமியண்ணா, இந்த வரலாற்று […]

Read more
1 82 83 84 85 86 180