பூனைக்கதை

பூனைக்கதை, பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், பக். 382, விலை 350ரூ. கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள நாவல். ஒரு பூனை எனும் பாத்திரம், இரண்டு உலகங்களை நம் முன் விரிக்கிறது. அந்த உலகத்தின் அரிதார முகங்களை, அந்த பூனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்குள் கதையாய் விரியும் இந்நாவல், நவீன தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும். நன்றி: தினமலர், 11/1/2018.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. ஸ்ரீராமானுஜரின் சரிதம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை “பொலிக பொலிக” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் பா. ராகவன். ஒரு நாவல் போல விறுவிறுப்புடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. நெகிழ்க, நெகிழ்க! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு இது என்பதை ஒட்டி தினமலரில் 108 நாட்கள் தொடர்ந்து எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகி உள்ளது. எந்த விஷயமாக இருந்தாலும் அதைத் தேனில் குழைத்து தருவதில் வல்லவர் பா.ராகவன். ராமானுஜர் குறித்த இந்த நூலும் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் படுசுவாரசியமாக அமைந்துள்ளது. ராமானுஜர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுக்கிறார் நாதமுனி. அவரது கரங்களில் ராமானுஜரின் சிலை அதிசயமான முறையில் […]

Read more

பொலிக பொலிக!

பொலிக பொலிக!, பா.ராகவன்,கிழக்கு பதிப்பகம்,  பக்.464, விலை ரூ.325. ‘பொலிக பொலிக பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம் 39’ என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. அதினின்றும் கிடைத்தது இந்தப் புத்தகத்தின் பெயர். ஸ்ரீவைஷ்ணவத்தை ஆயிரமாண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக நிறுவிய ராமானுஜரின் ஜீவசரிதத்தை விவரிக்கிறது நூல். பாரத ஆன்மிக மரபின் ஜெயக்கொடியை நாட்டிய மனித நேய வள்ளலின் வாழ்க்கைக் கதை, சம்பவ வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. எனினும் கற்பனை கட்டற்றுப் போகவிடாமல், வரலாற்று விவரங்களின் அடிப்படையில் இதனைப் படைத்திருக்கிறார் பா.ராகவன். காட்சி வர்ணனைகள் நம்மை அந்தக் […]

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more