தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ். ஏ.ஆர்.சீனிவாசன் வெளியீடு, பக். 296, விலை 200ரூ. இந்நூலாசிரியர் நாடகம், சினிமா, சின்னத்திரை போன்றவற்றில் பிரபலமானவர். வக்கீலுக்குப் படித்தவரும் கூட. இவர் தனது 50 வருட கலைத்துறை அனுபவத்தை அமுதசுரபி இதழில் தொடராக எழுதியபோது அது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நூலில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவத்திலிருந்து தொடங்கும் ஆசிரியர், அடுத்து சிவாஜி, ஜெயலலிதா, சோ, நாகேஷ், மனோரமா, இயக்குனர் ஸ்ரீதர், எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், வாலி, கே.பி. சுந்தராம்பாள், சின்னப்பதேவர், சந்திரபாபு, சிவக்குமார் என்று […]

Read more

பாரதியார் பதில்கள்

பாரதியார் பதில்கள், ஔவை அருள், ஸ்ரீராம் பதிப்பகம், பக். 148. மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் (2.2.2019) வெளியான இந்நூலை, தமிழறிஞர் ஔவை நடராஜனின் புதல்வரும், தமிழறிஞருமான இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இது ஸ்ரீராம் நிறுவனங்களின் ஆதரவில் உருவாகி, படிக்க விரும்புபவர்களுக்கு விலையில்லாத அன்பளிப்பாக வழங்கும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பாரதியாரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றைவிட இந்நூல் மிக வித்தியாசமானது என்பதோடு, இக்காலச் சிறுவர் சிறுமியருக்கும், இளைஞர்களுக்கும் மிக எளிய முறையில் பாரதியின் பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கேள்வி […]

Read more

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், உரையாசிரியர் துரை.ராஜாராம், நர்மதா, பக். 272, விலை 160ரூ. பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், கடைச்சங்கப் புலவர்களில் மிகச் சிறந்தவர். சேரமன்னன் செங்குட்டுவனின் இளைய சகோதரரான இவர், கற்புக்கரசி கண்ணகியின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காப்பியம் கண்ணகியின் கால் சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றை கூறுவதால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரப்பில் தோன்றிய கண்ணகி கோவலனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இக்காவியத்தில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் கிடக்கின்றன. தவிர, […]

Read more

வாழ்க நலமுடன்

வாழ்க நலமுடன், செ.சரவணன், ஜெயலஷ்மி எண்டர்பிரைஸஸ், பக். 160, விலை 130ரூ. இந்நூலாசிரியர் மருத்துவரோ, மருத்துவ ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், உடல் நலம், மனநலம் காக்கும் வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும், உணவு முறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். அதற்காக, பல கருத்தரங்குகள், நூல்கள், பத்திரிகைகள், இயற்கை மருத்துவர்கள், இணைய தளங்கள் என்று பலவற்றிலும் தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார். தவிர, படிப்பவர்களுக்கு எளிதில் புரியவும், மனதில் பதியவும் தன் நண்பர்களோடு கலந்துரையாடல் செய்வது போன்று, இந்நூலை இயற்றியுள்ளது புதுமையானது. ஆரோக்கியம் என்றால் என்ன என்பதற்கு முதல் […]

Read more

அபாகஸ்

அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம், வசந்தி ரங்கராஜன், நர்மதா வெளியீடு, விலை 170ரூ. ‘ஜெல்ஸ்’ அபாகஸ் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான இந்நூலாசிரியர், அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய சிறந்த கல்வியாளர். தவிர, பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் 1997-ஆம் ஆண்டு முதன் முதலாக அபாகஸ் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இன்று அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களில் பரவி, இக்கல்வி முறையைப் பற்றிப் பலரும் அறிந்துள்ளனர். அபாகஸ் என்பது நான்கு சட்டங்கள் பொருத்தப்பட்ட […]

Read more

இந்தியாவின் இருண்டகாலம்

இந்தியாவின் இருண்டகாலம், சிசி தரூர், கிழக்குப் பதிப்பகம், பக். 384, விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வி.ன துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு,, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்குப் பதிப்பகம், விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An Era […]

Read more

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]

Read more

காக்க காக்க உடல் நலம் காக்க

காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ. கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார். பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 330ரூ. முக்கடவுள்களில் சிவனையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு, சிவனை நேரில் கண்டும், அசரீரி வாக்கைக் கேட்டும் வாழ்ந்த 63 நாயன்மார்களைப் பற்றி, முதலில் சுந்தரரால் பாடப்பெற்றது ‘திருத்தொண்டர் தொகை’. அதன் பிறகு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலவர் சேக்கிழார், இந்த நாயன்மார்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்கள் வாழ்ந்த தலங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைச் சேகரித்து, நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களடன் ‘பெரிய புராணம்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார். இதில் உயர் […]

Read more
1 2 3 4 21