சமூக நீதிக்கான அறப்போர்

சமூக நீதிக்கான அறப்போர், பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:வே.வசந்தி தேவி, சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.350. தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. […]

Read more

கீழடி

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை வெளியீடு, விலை: ரூ.50 எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]

Read more

திருவாசகப் பயணம்

திருவாசகப் பயணம்: முதல் சுற்று (சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல் விளக்கவுரை)- அ.நாகலிங்கம், திரு.வி.க. பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திருவாசக விளக்கவுரை வகுப்புகள் நடத்தியதன் தொடர்ச்சியாக நூலாசிரியர், திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் ஆகிய இரு அகவல்களுக்கு மட்டுமான விளக்கவுரையை முதல் சுற்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சிவபுராணம் 62-ஆவது வரியில் இடம்பெறும் “மாசு அற்ற சோதி” என்பதற்கு, “பெளதிக ஒளிகள் மலர்வதற்கு விறகு, எண்ணெய், திரி, கம்பிகள், கண்ணாடிக் குமிழ் (பல்ப்) முதலிய ஏதேனும் ஒரு மாசு பற்றுக்கோடாக […]

Read more

அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும்

அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும், அரங்க பரமேஸ்வரி, மங்கை வெளியீடு, பக்.320, விலை ரூ.240. அக்காலத்தில் வாழ்ந்த கல்வியிற் சிறந்த புலவர்கள் மட்டுமல்லாமல், அரசரர்கள், சிற்றரசர்கள், பல்வேறு நிலையில் வாழ்ந்த குடிமக்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலரும் தமிழில் புலமைப் பெற்றிருந்ததுடன், பாடல்கள் புனையும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் மிக சிறந்ததாகக் கூறப்படும் கொடைப் பண்பு உடையவர்களையே அக்காலச் சமுதாயம் புரவலர்கள் என்று போற்றியுள்ளது. தமது ‘பா’த் திறத்தால், புலவர்கள் பலர் அறப்பாடல்களைப் பாடியதுடன், […]

Read more

பூக்கூடை

பூக்கூடை,   படம் ஒன்று, கதைகள் முப்பத்தெட்டு, தொகுப்பாசிரியர்: பாலகணேஷ் , வாதினி, பக். 160, விலை: 160. ஓர் ஓவியத்துக்குப் பொருத்தமான சிறுகதை எழுதும் போட்டியில் பரிசு பெற்ற 38 கதைகளின் தொகுப்பு. 38 எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை வளத்தால் இந்நூலை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். நகரின் பரபரப்பான சாலையில் காரை ஓட்டும் இளம்பெண், காரின் மேற்கூரையில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இளைஞன், இந்த விசித்திரக் காட்சியை வேடிக்கை பார்க்கும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் பார்வையிடும் தம்பதி ஆகியோர் மட்டுமே அடங்கிய ஓர் ஓவியம். […]

Read more

குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, ஓ.சோமசுந்தரம், இணையாசிரியர் டி.ஆர்.சுரேஷ், விலை 350ரூ. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநோய் மருத்துவமனை 1794ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தொடர்பான வரலாற்றுச் செய்திகளை இந்த நூல் தாங்கி வெளியாகி இருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவ நிலையத்தின் நிலைமை, மனி நேயபாவத்துடன் நோயாளிகளுக்கு அங்கு அளிப்படும் சிகிச்சை பற்றிய தகவல்கள், இதை நிர்வகித்த முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொருவரின் சிறப்பான செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் மருத்துவ மேல் படிப்பு பயிற்சித் திட்டங்களுக்கு இந்த மருத்துவமனையின் பங்களிப்பு போன்ற […]

Read more
1 3 4 5 6