தேனீர் குவளையில் சூறாவளி

தேனீர் குவளையில் சூறாவளி, ஜோஸ்னா ஜோன்ஸ், கைத்தடி பதிப்பகம், விலைரூ.225. ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் பெயர்த்துள்ளார் பிலிப் சுதாகர். வள வள தாளில், பொருத்தமான ஓவியங்களுடன் இணைத்து, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘வலிகளற்ற மகிழ்ச்சிக்கு மதிப்பு ஏதும் இல்லை…’ என, முதல் கவிதை சொட்டுகிறது. வாழ்வின் தகிப்பை கேள்விகளாக்கி, சொல்லில் சிற்பம் செதுக்கும் முயற்சியாக, மன உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு பலவீனமான கவசம் அணிந்தவரின் மனநிலையை வெளிப்படுத்தும் […]

Read more

புதுச்சேரித் தெய்வங்கள்

புதுச்சேரித் தெய்வங்கள், பேரா.இளமதி ஜானகிராமன், காவ்யா, பக். 259, விலை 260ரூ. உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது.இந்திய நாட்டிலும், வாழ்வியல் சூழலுக்கேற்ப வழிபாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழினம் சார்ந்த வழிபாட்டு நெறிகளின் மீதான ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் வழக்காற்றுக் கதைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சங்க காலத்தில் மலைமகள், கொற்றவை, பழையோள் எனப் பெண் தெய்வங்களை வழிபடப்பட்டனர். கொற்றவை வழிபாட்டிலிருந்து கிளைத்தவையே பிற்பாடு வந்த பெண் தெய்வ வழிபாடுகள் என்றும், கொற்றவையே இந்நாளில் துர்க்கையாக […]

Read more

முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ. வசந்தகுமரன், தமிழ் அலை, பக். 144, விலை 100ரூ. வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நூல். அழகியலை, மிக எளிய நடையில் சின்ன சின்ன கவிதைகளாகப் படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், ‘நச்’ என்று பதிய வைக்கின்றன சில. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள். ‘ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை ஓய்வதில்லை நதி…’ என்கிறது ஒரு கவிதை. இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர், ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு பகுதியாகவும் […]

Read more

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்,  எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450.  குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் எதிர்மறையாக […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்), ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய “தாவரத் தரகன்” கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், விலைரூ.300 வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை […]

Read more

தற்கால சிறார் எழுத்தாளர்கள்

தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதா பதிப்பகம், விலைரூ.250 சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது. இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால். – ராம.குருநாதன் நன்றி: […]

Read more

தற்கால சிறார் எழுத்தாளர்கள்

தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதா பதிப்பகம், விலைரூ.250 சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது. இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால். – ராம.குருநாதன் நன்றி: […]

Read more

சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு

சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு, டாக்டர் கு.தங்கமுத்து, ஐ.ஆர்.ஐ.எஸ்.பப்ளிகேசன்ஸ், பக். 328, விலை 300ரூ. உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு ஏற்படும் இன்னல், வழக்குகளை எதிர் கொள்ளும் வழி முறையை விளக்கும் நுால். வழக்குகளில் தீர்வு காணும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மருத்துவருக்கு பயன் தரும் நுாலாகும். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி : தினமலர், 16/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 4 5 6 7 8