ஜெய் அனுமன்

ஜெய் அனுமன், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ், பக். 168, விலை 170ரூ. ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும் போற்றுதலுக்குரியவர். வன வாசத்திற்கு பின் அனுமன் வந்தாலும், அடுத்தடுத்த அவதாரங்களிலும் ராம பக்தனாகவே அனுமன் தொடர்கிறார்; கிருஷ்ணரை புறக்கணிக்கிறார் எப்படி என்பதை கதையோட்டத்துடன் விவரிக்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர். வீரம், ஆற்றல், மேன்மை, விசுவாசம், நல்லொழுக்கம், மனதாலும் தவறு நினையாத நல்ல குணம் இவையெல்லாம் நினைவு வரும். அது மட்டுமல்ல… சொல்லும் வார்த்தைகளின் இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை […]

Read more

நான் தான் கொவிட் 19

நான் தான் கொவிட் 19, பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 64, விலை 70ரூ. இது நடந்தது, 1960களில். சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவை ஒளிரும் வைர கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை சூட்டினர். அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை நம் முன் வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. இது முழுக்க அறிவியல் விளையாட்டு… மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி, பக். 356, விலை 300ரூ பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும், 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நுால். பல கால கட்டங்களில், நுால், இதழ்களில் வெளியானவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வெளிப்படுத்தும் மதிப்பீடாக அமைந்துள்ளது நுாலின் முன்னுரை. […]

Read more

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, இந்து தமிழ் திசை, விலை 90ரூ. புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும் புதிய கல்விக் கொள்கை இன்றைய நாளின் மிக முக்கியமான விவாதமாகியிருக்கிறது. இது எதிர்காலச் சமூகத்தை நிர்ணயிக்கக் கூடியது என்ற வகையில் ஆழஅகலத் தெரிந்துகொள்வதும் ஆக்கபூர்வமாக உரையாடுவதும் அவசியமானது. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் புத்தகம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோது எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதனால்தான் […]

Read more

வால்வெள்ளி

வால்வெள்ளி, எம்.கோபாலகிருஷ்ணன், தமிழினி வெளியீடு, விலை 130ரூ. மனநெருக்கடிகளின் கதைகள் உளவியல் சிக்கல்களை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகளுள் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய குறுநாவல் தொகுப்பு இது. நான்கு குறுநாவல்கள். பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவனுக்கு மனைவியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் தருணங்களைப் பேசுகிறது ‘வால்வெள்ளி’; ஏற்கெனவே இந்தக் களம் பலமுறை கையாளப்பட்டிருந்தாலும் கவித்துவமான வரிகளும் நுட்பமான தருணங்களும் புதுமையான வாசிப்பைத் தருகின்றன. செய்யாத குற்றத்துக்காகக் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படியான மனநெருக்கடிக்கு உள்ளாகிறார் என்பதைச் சொல்கிறது ‘ஊதாநிற விரல்கள்’. […]

Read more

அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ. இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது. தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து […]

Read more

கழிசடை

கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.160 உண்மையில் யார் கழிசடைகள்? தூய்மைப் பணியாளர்கள் ‘கடவுளாகக் கருதப்படும்’ இந்த கரோனா காலத்தில், ‘கழிசடை’ (2003) நாவல் மறுவாசிக்கப்பட வேண்டியதாகிறது. மலத்தோடும் சாக்கடைகளோடும் குப்பைகளோடும் குடும்பம் குடும்பமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது ஓர் இனம். இவர்களைப் பற்றி, அனுமந்தய்யா எனும் துப்புரவுத் தொழிலாளர் பார்வையில் ‘கழிசடை’ நாவலைப் படைத்தார் அறிவழகன். கழிசடைகளாகவும் ஈனப் பிறவிகளாகவும் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி இந்த நாவல் அழுத்தமாகப் பேசுகிறது. “தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றம்; […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா, எஸ்.எல்.வி.மூர்த்தி,சிக்ஸ்த் சென்ஸ், விலை: ரூ.288 இரும்புப்பெண்மணி கிரேக்க, ரோமானிய வரலாறுகள் பின்னிப் பிணைந்தவை. வெவ்வேறு மொழி, மத நம்பிக்கைகள், கடவுளர்களைக் கொண்ட இந்த நாடுகளை இப்படி சம்பந்தப்பட வைத்தது எது? ரோமைச் சேர்ந்த சீஸர், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஆன்டனி இருவரும் சந்தித்த மிகப் பெரிய ஆளுமை எகிப்து நாட்டு அரசி கிளியோபாட்ரா. ‘இளம் வயதிலேயே மிகப் பெரிய அறிஞர்களிடம் கணிதம், தத்துவம், வானியல், சோதிடம், ரசவாதம் உட்பட அனைத்தையும் தீர்க்கமாகக் கற்ற அவர், குதிரைச் சவாரி, வாள் வீச்சு, ஈட்டி […]

Read more

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை, சுரேஜமீ, மணிமேகலைப் பிரசுரம், பக். 94, விலை 100ரூ. உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன. செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழக்கப்படுவது உரை. குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more
1 5 6 7 8