தை முதல் மார்கழி வரை பண்டிகை சமையல்

தை முதல் மார்கழி வரை பண்டிகை சமையல், ஏ.சாந்தா ராமானுஜம், கிரியேட்டிவ் வொர்க் ஷாப், விலைரூ.200. பண்டிகை கால சிறப்பு உணவு செய்முறையை விளக்கும் நுால். தமிழ், ஆங்கிலத்தில் உள்ளது. புத்தகத்தின் முதல் பகுதியில், பண்டிகை மற்றும் விரத நாட்களின் முக்கியத்துவம், அனுசரிக்க வேண்டிய முறைகளை தெளிவாக்குகிறது. மறு பகுதியில், பண்டிகை கால சிறப்பு உணவும், செய்முறையும் விளக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்க வேண்டிய நுால். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம், ச.சுப்புரெத்தினம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 தற்கால உரைகளின் வரிசையில் வெளிவந்துள்ளது. தொல்காப்பிய சொல்லதிகாரத்தில் அனைத்துக் கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் எனப் பகுத்து, ஒவ்வொரு இயலுக்கும் எளிய முகப்புரை வழங்கி, நுாற்பாக்களுக்குத் துணைத் தலைப்புகளோடு உரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. திணை, பால், இடம், எண், புறநடை சார்ந்த தமிழ்ச் சொல்லாக்கம், வேற்றுமை வகைகள், பொருள் மற்றும் உருபு மயக்கங்களை உணர்த்தும் வேற்றுமை மயக்கங்கள், விளிமரபு, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் […]

Read more

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180 நிம்மதியான வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! மனிதன், ‘தன்னை உணர’ சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை அழகாக விளக்குகிறார் விஜயகுமார். தேவையே இல்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவை கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுக்கிடையே மனப் பிரச்னை இருக்கிறது. ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ’மன அழுத்தம்’ என்று […]

Read more

பாரதி என் காதலன்

பாரதி என் காதலன், நெல்லை கணேஷ், தடம் பதிப்பகம், விலைரூ.100. மகாகவி பாரதி குறித்து தொகுக்கப்பட்டுள்ள நுால். பறவைகளை மென்மையாக கையாண்டார் பாரதி. ஒரு கணத்தில் மனைவி குறித்து, ‘நான் கொஞ்சம் கடிந்து பேசி விட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது; அவள் என்ன சொல்ல வந்தாள் என யோசித்திருக்கலாம்’ என்கிறார். ‘வெள்ளை முண்டாசு வாங்கி அணிவதற்கே காசு இல்லை. காசியில் பல வண்ணங்களில் துண்டு அணிவதை பார்த்தேன். எனக்கும் அது போல் அணிய ஆசை…’ என நண்பரிடம் குறிப்பிட்டுள்ள விபரமும் பதிவாகியுள்ளது. பாரதி குறித்த […]

Read more

100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம்

100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம், செவ்விளங்கலைமணி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. உலக அளவில் புகழ்பெற்ற, 100 பெண்களில், 96 பேர் இந்திய பெண்கள். அரசியல், இலக்கியம், கல்வி, கலை, தொழில், காவல், பாட்டு, விளையாட்டு, சமூக சீர்திருத்தம் என, பல்வேறு துறைகளில் உச்சம் தொட்டவர்களுக்கு பாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளை முதல், கஸ்துாரிபாய் காந்தி வரை கவி மகுடம் சூட்டப்பட்டுள்ளது. – சீத்தலைச் சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030823_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நல்லன எல்லாம் தரும்

நல்லன எல்லாம் தரும், டாக்டர் சுதா சேஷையன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஏராளமான ஆன்மீக கட்டுரைகளை எழுதி, தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்து இருக்கும் மருத்துவர் சுதா சேஷையன் இந்த நூலில் 23 கட்டுரைகளைத் தந்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளும் கடவுள் என்ற ஒன்றை மையமாக வைத்து சிந்தனை கருவூலமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது, அவரது சமஸ்கிருத புலமையையும், அந்தக் கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்து இருப்பது அவரது தமிழ்ப் […]

Read more

நலம் தரும் நாராயணா

நலம் தரும் நாராயணா, டாக்டர் ச.தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், விலை 80ரூ. ஆழ்வார்கள் பலரது வரலாறு, தமிழகத்தில் ஆழ்வார்களால் சாசனம் செய்யப்பட்ட கிருஷ்ணரின் 5 கோயில்கள், தாமிரபரணி நதி அருகே அமைந்து இருக்கும் நவ திருப்பதிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தும், அவை தொடர்பாகக் கேட்டவை, அறிந்தவை, உணர்ந்தவை ஆகியவற்றையும் இக்கால சூழலுக்கு ஏற்ப ரசித்துப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அரியும் அரனும் ஒன்று என்பதற்கு அவர் அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தரும் விளக்கம் வியப்பை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 […]

Read more

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?, காந்திஸ் பொலிட்டிக்கல் ஃபிலாஸஃபி: எ க்ரிட்டிக்கல் எக்ஸாமினேஷன், பிக்கு பாரேக், பால்கிரேவ் மேக்மில்லன் – 1989, விலை: ரூ.1,895 காந்திய ஆய்வுகளில் பிக்கு பாரேக் எழுதிய ‘காந்தியின் அரசியல் தத்துவம்: ஒரு நுண்ணாய்வு’ (Gandhi’s Political Philosophy: A Critical Examination) என்ற ஆங்கில நூல் குறிப்பிடத் தக்க ஒன்று. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் முன்வைத்த சில வாதங்கள் இன்றைய காலத்தில் கேள்விகளாக மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் அரசியல் தத்துவ நிலைப்பாடுகள் […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

கர்ணன்: காலத்தை வென்றவன்

கர்ணன்: காலத்தை வென்றவன், சிவாஜி சாவந்த், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் வெளியீடு, விலை: ரூ.899. இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’. இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் […]

Read more
1 2 3 4 5 6 8