இளசையாரின் இலக்கிய பயணம்

இளசையாரின் இலக்கிய பயணம், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, புகழ் பதிப்பகம், பக். 136. படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள், ஏகவன், அமானி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 40ரூ. உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும் இறைவனுக்கே, கொழுக்கட்டை, இறை இல்லம், இறைவனிடம் கையேந்துங்கள்’ ஆகிய சிறுகதைகள், நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிலும், பொருளாதார நிலையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற, கல்வி ஒன்று தான் கருவியாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் சிறுகதைகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம், என்.ஸ்ரீநிவாசன், கண்ணப்பன் பதிப்பகம், பக்.496, விலை 300ரூ. நம் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், உணரும் செயலாற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்நுால் என விளக்கம் தருகிறது. தண்ணீர் புவியின் உயிரோட்டம் இது. புவியின் பரப்பளவில் பூமிக்கு நீர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு உயிர்ப்போராட்டம் கொடுக்கும் இயற்கை அமுதம் என்ற விளக்கமும் அதில் உள்ள தகவல்கள் உள்ளன. ‘ஆல்கே’ எனும் கடற்பாசியினம் தோன்றி, 310 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்ற கேள்வி இப்போது எழுவது […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், ஆங்கில மூலம் உம்பர்ட்டோ ஈகோ, தமிழில் க.பஞ்சாங்கம், அருட்செல்வம் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 128, விலை 125ரூ. இன்று உலகில் புகழ் பெற்ற முதல் இருபது அறிவு ஜீவிகளில் ஒருவர் உம்பர்ட்டோ ஈகோ. நாவலாசிரியர், கட்டுரையாளர், பண்பாட்டாய்வாளர் என, பன்முகத்தன்மை கொண்ட இவர், 30க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். அவரது நுாலிலிருந்து, நான் எப்படி எழுதுகிறேன், நடை, இலக்கியத்தின் சில செயல்பாடுகள், அரிஸ்டாட்டிலின் கவிதையிலும் நாமும், கம்போரேசி ரத்தம், உடல், வாழ்வு, பொதுவுடைமை அறிக்கையின் நடையை […]

Read more

ஸ்ரீராஜ மாதங்கி

ஸ்ரீராஜ மாதங்கி, டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத் சங்கம், பக். 320. தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், அவை வைர மாலையாக, வரலாற்றுப் பெட்டகமாக, ‘ஸ்ரீ ராஜ மாதங்கி’ அமைந்திருக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் கட்டமைப்பு உணர்த்தும் தத்துவங்கள், இசை பாடும் துாண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, திருவிழாக்கள், தமிழ் சங்க வேந்தர்கள் பற்றி ஒவ்வொரு அடியாக நமக்கு விளக்கும் […]

Read more

கம்பன் கண்ட இராமன்

கம்பன் கண்ட இராமன், கீரனூர் ராமமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி, பக். 271. சொற்பொழிவுகள் மூலம், கம்பனின் கவிநயத்தையும், ராமனின் புகழையும் பரப்பி வந்த நுாலாசிரியர், கவிதையின் உச்சத்தைத் தொட்ட கம்பனின் கவிதைகளை இடையிடையே இணைத்து, எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் நுாலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். கம்ப ராமாயணக் கடலில் மூழ்கி, கம்ப ராமாயணத்தையே கதையாகவும், கம்பன் கவிதைகளோடும் ‘கம்பன் கண்ட ராமன்’ என்னும் பெயரில் நுாலை வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயண கதையை தெரிந்து கொள்ள விரும்புவோர், இதைப் படித்தால் […]

Read more

பல்லவப் பேரழகி

பல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை, வ.உ.சி நூலகம், பக்.1328, விலை ரூ.1500. ‘வெற்றிக்கு விளக்கம் சொல்லக் கூடாது; தோல்வி என்றால் ஏன் தோற்றோம் என சொல்ல ஆளே இருக்கக் கூடாது‘ என்ற பிரபல வாசகத்துக்கு சொந்தக்காரர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இன்று அவர் குறித்து பல விமரிசனங்கள், விவாதங்கள் – பதிலளிக்க அவர் இல்லை. அப்படிப்பட்ட பிரபாகரனின் வரலாற்று நூலினை இரு பிரிவாக படைத்திருக்கிறார்கள். முற்பகுதி பிரபாகரன் வரலாறு – பிற்பகுதி ஆவணங்கள். […]

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள்,  வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், பக்.576, விலை ரூ.450. தமிழகத்தில் விவசாயத்துக்கு போதுமான நீரின்றி, குறைந்த நீரைப் பயன்படுத்தி இப்போது விவசாயம் செய்து வருகின்றனர். இந்நூல் 1956-க்கு முன்பு வரை தென்னிந்தியாவில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தந்த மண்ணுக்குரிய விவசாய முறைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் நூலாசிரியர் கோவை விவசாய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னிந்திய அளவிலான பயிர்கள் குறித்த நீண்ட ஆய்வை மேற்கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி முறைகள், நெல், கரும்பு, […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும்,  ஓல்கா பெரோவ்ஸ்கயா, தமிழில் – ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 260, விலை ரூ.180. வீடுகளில் ஓநாய், புலி, கழுதை, குதிரை, நரி, மான் ஆகியவற்றை சிறு குட்டிகளில் இருந்து வளர்ந்து வருவதைப் பற்றிய வித்தியாமான, சுவாரசியமான அனுபவங்களை இப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகளும் இந்த விலங்குகளைக் குட்டியில் இருந்தே வளர்ப்பதும், அவற்றுடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் வீட்டுச் சூழ்நிலையில் வளரும்போது […]

Read more
1 291 292 293 294 295 505