வருங்கால தமிழகம் யாருக்கு?

வருங்கால தமிழகம் யாருக்கு?, முனைவர் சீமான் இளையராஜா, டி.ஐ.எஸ்.எஸ்.எல்.பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அயோத்திதாச பண்டிதர் சிறந்த தமிழ் அறிஞர். பகுத்தறிவுவாதி. சாதி சமயங்களை நீக்கி செயல்பட்டவர். அவருடைய வாழ்க்கையையும், தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து இந்தப் பெருநூலை எழுதியுள்ளார் முனைவர் சீமான் இளையராஜா. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. மக்கள் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னும் இருபெரும் மேதைகளின் இனிய உறவையும் அவர்களுடைய நட்பின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நூல். அதோடு இருவர் வாழ்விலும் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இருவருக்கமான நல்லியல்புகள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் படைத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் கமலா கந்தசாமி. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026854.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், ம.தொல்காப்பியன், கைத்தடி பதிப்பகம், விலை 120ரூ. பஸ் கண்டக்டர் வேலை பார்த்த ஒருவர் கடும் உழைப்பாலும், அசாத்திய திறமையினாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சம்பவம் நமது தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது மட்டுமல்ல, நீண்ட காலமாக அந்தப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை வரலாறுடன், அவரது திறமைகளை அலசி ஆராய்கிறது இந்த நூல். ரஜினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026858.html இந்தப் புத்தகத்தை […]

Read more

மிஸா கொடுமை

மிஸா கொடுமை, விசிட்டர் அனந்த், நக்கீரன், விலை 200ரூ. ‘எமர்ஜென்ஸி‘ என அறியப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த ஜனநாயக படுகொலைகள், நெஞ்சை பதறவைக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்ச்சூழலில் முதன் முதலில் புத்தக வடிவில் பதிவு செய்தவர் நூலாசிரியர் ‘விசிட்டர்’ அனந்த். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 தலைப்புகளில் கொண்டு வந்த இந்த நூல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதைய தலைமுறையினரும் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நக்கீரன் பதிப்பகம் மீண்டும் இந்த புத்தகத்தை ஒரே தலைப்பில் […]

Read more

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்,  (திருக்குறள்-பிரித்தாளுதல்-நுண்ணுரை- தடை விடையுடன்), இரா.பஞ்சவர்ணம்,பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருக்குறளில் இடம்பெறும் தாவரங்களான எள், அமை, தாமரை, அனிச்சம், உள்ளி, குன்றிமணி, தினை, நெருஞ்சில், கரும்பு, நச்சுமரம் முதலிய தாவரங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழியில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும், அந்தந்த தாவரத்தின் வகைப்பாடுகளையும், அவற்றின் பண்புகளையும், அவற்றிற்குத் ‘தாவரத் தகவல் மையம்‘ தரும் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு. எடுத்துக்காட்டுக்கு ஒன்று: பொருட்பாலில் ‘;சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி‘ என வரும் […]

Read more

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்,  க.பழனித்துரை, தமிழ்நாடு சர்வோதய மண்டல்,  பக்.112, விலை ரூ.50. மக்களாட்சியில் மன்னராகக் கருதப்பட வேண்டிய மக்கள், வாக்குக்குப் பணம் பெறுபவராகவும், குறைகளைத் தீர்க்க மனு போடுபவராகவும் ஆகிவிட்டனர். அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. இந்தச் சூழலில் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், மக்கள் நலன் இவை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் அவ்வாறு சிந்தித்து எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் கட்சிகளின் செயல்பாடு, ஆளுமைப் பண்பு, நிர்வாகத் திறன் […]

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா,  மஹதி, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக்.216, விலை ரூ.170. முஸ்லிம்களின் ஆட்சி பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் பற்றியும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக நூலாசிரியர் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாயிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் முதல் பாகத்தில் கான்சாகிப், திப்புசுல்தான், கேரளாவில் நடந்த மாப்பிள்ளைமார் புரட்சி பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவானவிதம், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பாண்டிய மன்னர் ஆட்சிக்குப் பிறகு, பல […]

Read more

கல்வெட்டில் தேவார மூவர்

கல்வெட்டில் தேவார மூவர், கா.ம.வேங்கடராமையா, சேகர் பதிப்பகம் சைவ மரபில் தேவார மூவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அன்றாட வழிபாட்டில் மூவர் தேவாரப் பாடல்களைப் பாடுகிறவர்கள் ஏராளம். அநேகமாக எல்லா சிவ ஆலயங்களிலும் நாவல்வர் திருவுருவச்சிலைகளை அமைத்து வழிபடுகிறார்கள். ‘கல்வெட்டில் தேவார மூவர்’ என்ற பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவின் நூலைப் படிக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய மரபு இது என்று புரிகிறது. தமிழகமெங்கும் பக்தர்களும் மன்னர்களும் தேவார மூவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல். குறிப்பாக, இந்நூலில் வரும் பெயர்கள் அனைத்தும் நம்மை […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, டாக்டர் சே. சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பாகம் 1, விலை 400ரூ, பாகம் 2, விலை 350ரூ. நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு. வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் […]

Read more

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more
1 289 290 291 292 293 505