வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120. கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி. கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

இடம், பொருள், மனிதர்கள்

இடம், பொருள், மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் வெளியீடு, பக்.156, விலை ரூ.130. சிந்தனை வெளிப்பாட்டின் சிறு குறிப்புகளாகத் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இன்று நீண்ட பதிவுகளுக்கு இடம் கொடுக்கிறது. இந்த மின்னூடகப் பதிவுகள் மீண்டும் அச்சு உருப்பெற்று, புதிய வாசக வட்டத்தைக் கவர்வதும் இப்போது இயல்பாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இது. இருபத்தாறு தலைப்புகளில் மாதவ பூவராக மூர்த்தியின் பேஸ்புக் பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிந்தனை வெளிப்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி, ஏறத்தாழ சிறுகதைகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு சில […]

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன், சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310, பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் […]

Read more

இவனன்றோ என் நண்பன்

இவனன்றோ என் நண்பன், சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், பக்.72, விலை ரூ.20. காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் ஒன்றுக்கும் உதவாதவராக இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், ப. திருஞானசம்பந்தம், நெய்தல்பதிப்பகம், பக்.228, விலை ரூ.200. யாப்பிலக்கணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் யாப்பியல் குறித்த அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில், பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியல் ஆய்வு வரலாறு, திருக்குறளில் யாப்பியல் குறித்து அயலக, தமிழக அறிஞர்களின் ஆய்வுகள், கீழ்க்கணக்கு இலக்கியங்களில் உள்ள புதுவகையான இன்னிசை வெண்பாக்கள், தொடை நலன்கள், தமிழில் உள்ள ஓரெதுகையின் வரலாறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பழந்தமிழ் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் முதலியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. களவழி நாற்பதில் இடம்பெறுகின்ற […]

Read more

சிவமகுடம்

சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018.   […]

Read more

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருவள்ளுவரின் திருக்குறளில் பல தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தாவரங்களின் இயல்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வரும் தாவரங்கள் பற்றி பேராசிரியர் இரா.பஞ்சவவர்ணம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏராளமான தகவல்களை இந்த நூலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி 6/6/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026859.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி! உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]

Read more

அழகர் அணை

அழகர் அணை, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைஞன் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக எந்தவித புதிய அணைகளும் கட்டப்படவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். அங்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்கு சரியான திட்டங்கள் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவாகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்காக குடிநீர் வசதிக்கும், நீர்பாசன வசதிக்கும் அழகர் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 90 ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளது. பெரியாறு, வைகை […]

Read more
1 288 289 290 291 292 505