மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்,  ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160. “பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் […]

Read more

போகரின் சப்தகாண்டம் 7000

போகரின் சப்தகாண்டம் 7000, பதிப்பாசிரியர் சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், முதல்பாகம் விலை 500ரூ, இரண்டாம் பாகம் விலை 400ரூ. அமானுஷ்மான சக்திகள் கொண்டவர்கள் என்று பலராலும் நம்பப்படும் சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே வியப்பானவை என்றாலும், சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படும் இந்த நூலில் உள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன. சிவபெருமாள் உமைக்கு அருளிய 7 லட்சம் பாடல்களான ஞானவிளக்கத்தை உமையிடம் இருந்து நந்தியும், நந்தியிடம் இருந்து திருமூலரும், திருமூலரிடம் இருந்து காலாங்கி சித்தரும் அவரிடம் இருந்து போகர் […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், பக். 1648, விலை 1500ரூ. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்ததில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் படைத்த நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களில், 135 படலங்களை அமைத்து, 10 ஆயிரத்து, 345 பாடல்களை பாடியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார். […]

Read more

மாலை பூண்ட மலர்

மாலை பூண்ட மலர், கி.வா.ஜகந்நாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், பக். 184, விலை 115ரூ. அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக வெளியிட்ட நுாலாசிரியர், ‘சங்கரகிருபா’ என்ற மாத இதழில், 26 முதல், 50 வரையிலான பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகளை எழுதி, ‘மாலை பூண்ட மலர்’ என்ற பெயரில் இரண்டாம் தொகுதியை, 1970களில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பே தற்போது மறு அச்சு வடிவம் பெற்றுள்ளது. ‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ இவ்வாறு மும்மூர்த்திகளும் […]

Read more

இஸ்லாமின் தொழுகை முறை

இஸ்லாமின் தொழுகை முறை, அறிவு நாற்றங்கால் பதிப்பகம், விலை 100ரூ. இறை நம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் மீது எழுப்பப்பட்ட மாளிகை இஸ்லாம். தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். அது முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகம். ஐவேளை தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த படி தொழுவதுதான் சரியான முறையாகும். அதை இந்த நூலில் நாகூர் சா.அப்தூர்ரஹீம், அழகிய முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் […]

Read more

உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி

உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி,  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இன்டகரல் யோகா இன்ஸ்டியூட், பக்.360, நன்கொடை ரூ.100. தமிழகம் பெற்ற ஆன்மிக பெரியவர்களுள் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் ஒருவர். நூலில் 3 பாகங்களில் 26 தலைப்புகளில் ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஆன்மிகத்தில் அடியெடுத்து வைப்பவர் முதலில் விடவேண்டியது பேராசை, ஆணவம் என்பதை எடுத்துக்கூறும் சுவாமிகள், ஆன்மிக சாதகர்கள் பெற வேண்டிய மந்திர தீட்சை என்றால் என்ன? தீட்சை அளிக்கும் குருவின் தகுதி, குருவின் பெருமை, தீட்சை பெறும் […]

Read more

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள், ம.அரங்கராசன், மணிவாசகர் பதிப்பகம், விலை 175ரூ. அநபாய சோழன் என்ற மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார், சைவ சமயம் செழித்தோங்குவதற்காக இயற்றிய பெரிய புராணப் பாடல்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரை நடையில் இந்த நூலை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் குறித்தும் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் அதே சமயம் […]

Read more

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம், வேணு சீனிவாசம், அழகு பதிப்பகம், விலை 380ரூ. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படும் திருமறைக்காட்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மனே தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை இனிய தமிழில் பாடுக என அருளிட, அவ்வாறே செய்து திருவாலவாய் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவனின் முக்கண்களாகப் போற்றப்படுவன பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகியனவாம். மதுரை காண்டம், […]

Read more

ரமணரின் பார்வையில் நான் யார்?

ரமணரின் பார்வையில் “நான் யார்?, வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]

Read more

நமது கடவுள் மனிதனே

நமது கடவுள் மனிதனே,சுவாமி விவேகானந்தரின் உரத்த ஆன்மிகச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: ஜாநிசிவம், ஜனனி நூல் பதிப்பு, பக்.332, விலை ரூ.250. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மத, பண்பாடு, கலாசாரப் பழக்கங்களை ஒதுக்கித் தள்ளாமல், தெய்வ பக்தியோடு கலந்த தேசபக்தியை வலியுறுத்தி விவேகானந்தர் ஆற்றிய உரைகளே அவரை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தின. என்னிடம் 100 வீர இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகையே மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் போதித்த செய்திகள் அனைத்தும் அவரது குருவான சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தை எதிரொலிப்பதாகத்தான் இருந்தன. […]

Read more
1 19 20 21 22 23 128