குயில்பாட்டுத் திறன்

குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260. ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது. “மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் […]

Read more

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், மொத்த விலை: ரூ.1,300 திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி […]

Read more

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது. சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, […]

Read more

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும், தொகுப்பு: நொபோரு கராஷிமா, தமிழில்: ப.சண்முகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம். விலை: ரூ.700 தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட் படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது […]

Read more

கீழடி

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை வெளியீடு, விலை: ரூ.50 எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

வேணாடும் தமிழ்மரபும்

வேணாடும் தமிழ்மரபும்,  வ.ஆன்றனி ஜோசப், பக்.369, விலை ரூ.390. உருவங்கள் ஊடக ஆய்வு மையம், புலவன்விளை, கல்லாங்குழி அஞ்சல், குமரி நமாவட்டம். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு நாடுகளில் ஒரு நாடாக வேணாடு உள்ளது. எனினும் சங்க காலத்தில் வேணாடு என்ற ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வேணாடு எங்கு அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல்துறை கல்வெட்டுத் தொகுப்புகளின்படி, தற்போதைய கேரள மாநிலத்தின் கோட்டயம், திருவல்லா, சங்கனாசேரி, ஏற்றமானூர் முதலிய பகுதிகள் வேணாட்டின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி, மங்கலம் […]

Read more

இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 165ரூ. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாடச் சொன்ன போது ஆதிசேடன் தலையில் இருந்து வந்த 5 பேரில் முதலில் வந்தவர்கள் ‘தாசிகள்’ என்ற தகவலைத் தரும் இந்த நூல், தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நிதிநூல் காலத்து விரைவின் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றனர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்த இருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும், திரைத் தமிழிலும் […]

Read more

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்,  அப்துல்காதர், நேஷனல் பப்ளிஷர்ஸ்,நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை ரூ. 180. அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, கலைகள் போன்றவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரத்தில், இல்லறம், துறவறம், சமுதாய அறம், அரசியல் அறம் ஆகியவை எவ்வாறெல்லாம் இயல்பாகவே விரவிக் கிடக்கின்றன என்பதை புதிய நோக்குடன், பலவித கோணங்களில், விரிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல். அடையாளமற்ற அடையாளம், அறக்கோட்பாட்டு அமுதசுரபி, அகப்புற அற ஆவணம் உள்பட எட்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திருக்குறள், புறநானூறு உள்ளிட்டதமிழ் இலக்கியங்கள், பிற நாட்டு […]

Read more

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை, சு.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், பக்.496, விலை ரூ.400. வான்மீகத்தில், இராம – இராவண யுத்தத்தின்போது, போரின் நிலையைக் காண வருகின்றார் மாமுனிவர் அகத்தியர். போரினால் சோர்வும் துயரமும் கொண்டிருக்கும் இராமனுக்கு அவர் உபதேசித்த வெற்றி மந்திரம்தான் “ஆதித்ய ஹ்ருதயம்”. சூரியதேவனின் பலத்தையும் ஆற்றலையும் பெற்றுத் தரும் இந்த மந்திரத்தை நாளும் மும்முறை ஓதினால், வெற்றி உறுதி என்று அருளிச் செய்கிறார் அகத்திய முனிவர். சிதம்பரத்தில் தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் சு. அரங்கநாதன். விபத்தில் […]

Read more

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மு.வரதராசன்,பாரி நிலையம், பக்426, விலை ரூ200. காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன. காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ திருவள்ளுவர் கூறவில்லை என்றும், அன்பின் ஐந்திணை என்று சான்றோர் புகழ்ந்த ஒத்த அன்புடைய காதலரின் வாழ்க்கையையே கூறுகின்றார் என்றும் கூறும் மு.வ., காதலையும் தொண்டையும் ஒப்புமைப்படுத்திக் கூறுமிடம் அருமை. […]

Read more
1 7 8 9 10 11 84