உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்

உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.330 இன்றைய உலகமயச் சூழலில் கற்றலும், கற்பித்தலும் எவ்வாறு மாறிவருகிறது; வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப கலைச்சொற்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது; அக்கலைச் சொல்லாக்கத்தில் எழும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட, 52 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கற்றல் கற்பித்தலில் இன்று நாம் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன? சிக்கல்கள் என்னென்ன? இன்று கற்றல், கற்பித்தல் எவ்வாறு மாறிவருகிறது? எனப் பல புதிய பரிணாமங்களைக் […]

Read more

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, முத்தாலங்குறிச்சி காமராசு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.260 அகழாய்வு என்றதும் கடந்த தலைமுறை வரை அறிந்தது சிந்துச் சமவெளி நாகரிகத்தை வெளிக்காட்டிய மொஹஞ்சதாரோ, ஹரப்பாதான். வேறெதுவும் அறியாத இந்தத் தலைமுறையினருக்குக் ‘கீழடி’யும் அங்கே நடைபெற்றுவரும் அகழாய்வுகளும் அறிமுகம். ‘தொன்மையான நதிகளின் கரைகளில் மனிதர் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் சுவடுகள் இருந்தே தீரும்’ என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அகழாய்வுகள்கூட ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை வெளிப்படையான பதிலில்லை. […]

Read more

இந்திய பாரம்பரியத்தில் சுவை

இந்திய பாரம்பரியத்தில் சுவை,  லட்சுமி ராமசுவாமி; ஸ்ரீமுத்ராலயா,  பக்.266;  விலைரூ.500; சாத்தனார் எழுதிய சங்க கால நூலான கூத்த நூல், நாட்டியத்தின் உட்கூறாக அமைந்த ‘சுவை ‘ பற்றி விரிவாக விளக்குகிறது. இந்நூலுக்கு கவிஞர் ச.து.சு.யோகியார் சிறப்பான விளக்கவுரை எழுதியுள்ளார். அவரின் விளக்கவுரையோடு வடமொழியில் ’ரஸம்’ குறித்து எழுதப்பட்ட பல நூல்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். தொல்காப்பியத்தில், சுவை எனப்படும் மெய்ப்பாடு எட்டு வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் பின்னர் வந்த இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் துணைப்பட்டியலில் ஒன்பதாவது சுவையையும் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாக ஆராய்ந்துள்ளார் […]

Read more

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள், ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.170 தமிழ்நாட்டில் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டு நுழைபவர்கள் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாமல் கேட்கும் பெயராக க்வென்டின் டாரன்டினோ பெயர் மாறியிருக்கிறது. டாரன்டினோவின் படங்களையெல்லாம் நுட்பமாக அலசி, அவருக்கென 160 பக்கங்களில் ஒரு புத்தகம் கொண்டுவந்திருக்கிறார் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன். இந்தப் புத்தகம் ஆய்வு நோக்கிலான பார்வையைக் கொண்டிருக்கவில்லை; மாறாக, டாரன்டினோவின் ஆத்மார்த்தமான ரசிகரின் பார்வையாக வெளிப்படுகிறது. நன்றி: தமிழ் இந்து, 7/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030231_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல்

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல், எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், பக்.320; விலை ரூ.300. சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அழகியல் கூறுகள் பல்வேறு வடிவங்களில் விரவிக் காணப்படுகின்றன. அழகு என்ற சொல்லுக்கு இணையாக எழுபது சொற்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.  அழகியல் வெளிப்படுவதற்குக் கலைகள் முதன்மையான சாதனமாகும். அவற்றுள் இலக்கியக்கலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. இலக்கியக் கலையில் கவிதைக் கலை, கவிதையின் அழகு, கவிதையின் வடிவமைப்பு, பொருள், உத்திகள், கவிதை சுவைக்கான சொல்லும் பொருளும் ஆகியவை அமைகின்றன. செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள், உவமைகள், ஒலிக்கூறுகள், […]

Read more

கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more

தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

ஆதி இந்தியர்கள்

ஆதி இந்தியர்கள், டோனி ஜோசஃப், தமிழில்:பி.எஸ்.வி.குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை: ரூ.350 சாதி என்றொரு கற்பிதம் மரபணு அறிவியலின் வளர்ச்சியானது தொல்பழங்காலம் குறித்த ஆய்வுகளில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை அனுமானங்களாகவும் கற்பனைகளாகவும் இருந்துவந்த தொல்பழங்காலத்திய வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமாக எழுதுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆனால், அது சிலரின் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாகவும் இருக்கக்கூடும். இந்தியாவின் பழங்கால வரலாறு என்பது கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்சதாரோவின் பெருமைகளைப் பேசி, வேத காலத்துக்கு நகர்வதே வழக்கம். அதன் அடிப்படையில், […]

Read more

சிறப்புப் பெயரகராதி

சிறப்புப் பெயரகராதி, சு.அ.இராமசாமிப் புலவர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, விலை: ரூ.745 தவளகிரி முதலியாரின் இல்லத்துக்குச் சென்ற கம்பர், விருந்தின்போது முதலியாரின் மகன் பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ‘ஆழியான் பள்ளியணையே’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். முதலியாரின் மகன் உயிர் பெற்றானாம். இறந்தவர்களைப் பாடல்கள் மூலம் உயிர்ப்பித்த சமயக் குரவர்கள்போல கம்பரும் செய்திருக்கிறார் என்று கூறுவதை அறிவீர்களா? கம்பராமாயணத்தில் வருவதைப் போல இன்னொரு தாடகையும் உண்டாம். இவள் திருப்பனந்தாளில் வசித்தவள். சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யும்போது தாடகையின் உடை சரிகிறது. இவளின் வருத்தத்தைக் […]

Read more

துர்க்கையின் புதுமுகம்

துர்க்கையின் புதுமுகம், என்.சண்முகலிங்கன், தமிழில் பக்தவத்சல பாரதி, சந்தியா பதிப்பகம், விலை 190ரூ. மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது. தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் […]

Read more
1 5 6 7 8 9 84