மனிதனைப் படைப்பது யார்?

மனிதனைப் படைப்பது யார்?, ஏ.கே. ராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. மனித படைப்பை, அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது இந்நுால். மனித படைப்புக்கு காரணம், விரும்பியபடி வாழ முடியுமா போன்ற சாதாரண கேள்விகளுக்கான மர்ம முடிச்சுகளை ஆராய்கிறது.மனிதன் உருவான விதம், ஆற்றல், சக்தி, நிலம், நெருப்பு, நீர், சூரியன், கோள்கள் குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மனித மூளையின் செயல்பாடுகள், மனிதனின் தன்மைகள், பண்புகள் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், கணித மேதைகளின் ஆற்றல், படைப்புகள், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், ஆட்சியாளர்களின் நுட்பமான […]

Read more

சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ்.சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175. அரிதான ஆளுமைகளைக்கூட உரிய வகையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் வரலாற்றில் அவர்களை ஆவணப்படுத்தவும் தவறும் சமூகம் என்ற பெயர் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு. இந்த அவப்பெயரைத் துடைத்தெறிய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக ‘ஆலிம் முகம்மது சாலிஹ் கல்விக் குழும’த்தின் செயலர் எஸ்.சேகு ஜமாலுதீன் படைத்திருக்கும் நூலைக் குறிப்பிடலாம். அவரைக் கவர்ந்த பதினாறு இஸ்லாமியப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக் கொண்டாடும் இந்நூல் நல்ல ஆவணமாகவும் வந்திருக்கிறது. சீறாப்புராணக் காப்பியச் சுவைச் கொண்டு, […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.200. வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது. கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது. வாழ்வில் சிலருக்கே, மதியும், […]

Read more

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம்

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம், முனைவர் அ. அன்பாநந்தன், அறம் பதிப்பகம், விலை 50ரூ. ஈ.வெ.ரா. பெரியாருக்கு முன்னதாக அயோத்திதாசப் பண்டிதர், தமிழ் எழுத்துக்களில் கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஆய்வு நோக்கில் இந்த நூல் தந்து இருக்கிறது. தற்போதைய தமிழ் எழுத்து, ‘தமிழி’ மற்றும் ‘வட்டெழுத்து’ மூலம் எவ்வாறு உருவானது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300.  சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள்

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், ரம்யா, அகலன் வெளியீடு, விலைரூ.100. தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார்.தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 16/5/21 இந்தப் […]

Read more

அறவாணர் திறனுரைகள்

அறவாணர் திறனுரைகள், க.அ.அறிவாளன், தமிழ்க் கோட்டம், விலைரூ.180. திறனாய்வு உலகத்தில் புதிதாக வந்துள்ளது இந்த நுால். ஐம்பத்தொன்பது நுால்கள் பற்றிய திறனாய்வுக் கருத்துரைகளின் தொகுப்பு. க.ப.அறவாணனின் காலத்திற்குப் பின் வெளிவந்துள்ளது. படைத்துள்ள திறனாய்வுரைகள் அனைத்தையும் தொகுத்து நன்கு வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.தொடக்க நிலை எழுத்தாளர் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர் வரை பேதம் இல்லாமல் திறனாய்வு வழங்கியுள்ளார் அறிஞர் அறவாணன். தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் மகன்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரே புத்தகத்தில் ஐம்பத்தொன்பது புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதற்கு இந்தத் திறனுரைகள் சான்று […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more
1 3 4 5 6 7 84