தமிழிசை : ஓர் எளிய அறிமுகம்

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம், புதுகை கு.வெற்றிச்சீலன், களம் வெளியீடு, விலை: ரூ.20. தமிழ்த் தேசிய அரசியல் மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்போடு முழங்கும் கு.வெற்றிச்சீலன், இசை குறித்த ஆய்வுகளில் தோய்ந்து, அறிமுக நூலொன்றை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இசைத்தமிழ் அறிஞரான தஞ்சை ஆப்ரகாம் பண்டிதரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரைக் குறித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பானது தொடர் கட்டுரைகளாக விரிந்து, தற்போது நூல் வடிவம் கண்டிருக்கிறது. 31 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த அறிமுக நூல், சங்க காலம் தொடங்கி […]

Read more

ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்

ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்,  முதல் தொகுதி, பதிப்பாசிரியர்: வி.மகேஷ், இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், பக்: 678, விலை ரூ.750.  வரலாற்று ஆய்வாளர் வே.மகாதேவன் எழுதிய “ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு (ஆழ்வியலாய்வு)’, “தஞ்சையில் ஸ்ரீ காமாக்ஷி’, “ஸ்ரீ சங்கர மடத்தின் தமிழ்ப் பணிகள்’, “சமய, சமுதாயப் பணிகளில் ஸ்ரீ சங்கர மடம்’ ஆகிய நூல்களின் தொகுப்பு இந்நூல். “ஸ்ரீ சங்கர மடம் வரலாறு’ என்னும் நூலில் காஞ்சி மடத்தின் […]

Read more

ரசிக்க… சமஸ்கிருதம்

ரசிக்க… சமஸ்கிருதம், அபிநவம் ராஜகோபால், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலைரூ.160. சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில் வாழ்வியல் நுட்பங்களை பதிவு செய்துள்ளார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், தெருவில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டினால் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை பதிவு செய்துள்ளது. வேத காலத்தில் ஆண்களுடன், பெண்களும் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சாணக்கியரின் காலத்தில், ஓலைச் சுவடிகளில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. நான்கு வேதங்கள் குறிப்பிடும் அறக் கருத்துகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. குற்றத்திற்கு ஏற்ற […]

Read more

நேமிநாதம் காலத்தின் பிரதி

நேமிநாதம் காலத்தின் பிரதி, நா.அருள்முருகன், சந்தியா பதிப்பகம், பக்.232, விலை ரூ.230. தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம். “நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது. நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் […]

Read more

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும், முனைவர் பெ.ராஜேந்திரன், காவ்யா, விலைரூ.300. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால். அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு, கற்பகம் பதிப்பகம், விலை: ரூ.175. சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் […]

Read more

இந்து மத அகராதி

இந்து மத அகராதி, மாா்க்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி, தமிழில்: உதயகுமாா் பாலன்,  பக்.704, விலை ரூ.600. மற்றவா்கள் சொல்லித்தான் இந்தியா்களான நமக்கு நமது அருமை பெருமைகள் எப்போதுமே தெரிந்திருக்கின்றன. ‘சநாதனம்’ (என்று தொடங்கியது என்பது தெரியாத, என்றென்றுமுள்ள) என்பதன் அா்த்தம் கூடத் தெரியாமல் சநாதன தா்மத்தை நாம் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் ஆக்கபூா்வ சிந்தனைகள் குறித்து அயல்நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடக்கின்றன. ‘ஹிந்து மதம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சநாதன தா்மத்தின் கூறுகளாக உள்ளவை நமது புராண, இதிகாசங்கள். அதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள், […]

Read more

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.344, விலை ரூ.375. பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு. குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது. அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் […]

Read more

கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more

விடுபட்டவர்கள்

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான், இனியன், நாடற்றோர் பதிப்பகம், விலை: ரூ.100. குழந்தைகள் நலனில் அக்கறையோடு இருக்கிறோமா?, பாரம்பரிய விளையாட்டுகளை அதன் வரலாற்றுடன் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்துவருபவர், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன். அது தொடர்பான கள அனுபவங்களை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார். குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் நலனில், உரிமையில், பாதுகாப்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்ற உண்மையானது அப்பட்டமாகவும் ஆதங்கத்துடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறன், ஆட்டிசம் மற்றும் ஹைப்பர்டென்ஷன், பார்வைக் குறைபாடு, காது […]

Read more
1 2 3 4 5 6 84