சொல்லடி சிவசக்தி

சொல்லடி சிவசக்தி, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 272, விலை 200ரூ. இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால். தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து தலைப்புகளைக் கொண்டிருக்கும் இந்நுால். அம்பிகையை வினாவுவதாகவும், அவளே நேரடியாகப் பச்சைப் புடவைக் காரியாகக் காட்சி தந்து, நுாலாசிரியரின் ஐயங்களைத் தடை விடைகளால் விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. அம்பிகையின் […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், ஈரோடு தங்க விசுவநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 284, விலை 200ரூ. கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில் இந்நுாலாசிரியர் தொகுத்துள்ளார். உணவகத்தில் சென்று அமர்ந்ததும் உள்ளே இருக்கும் உணவு வகைகளைக் காட்டும் விலைப் பட்டியல் (மெனு) கையில் தந்து விடுவர். ஆனால், அண்மையில், வரும் பல நுால்களின் முதல் இடத்தில், ‘பொருளடக்கம்’ இருப்பதில்லை. இந்த நுாலிலும் ‘கந்த புராணம்’ தலைப்பைப் பார்த்து, வெகு ஆர்வமுடன் தேடினேன். கடைசி, 84வது […]

Read more

சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. வலியின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகெங்கும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களால் அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மார்சிம்கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலாகும். ஒரு புரட்சித்தாயின் வேட்டைத் தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வீரத்தை ஊட்டி வரும் ஓர் உலக இலக்கியம் என்றே இந்த நாவலைக்கூறலாம். இந்த நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாவலை தமிழில் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், அழகிய […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தமிழில் தொ.மு.சி. ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. 1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய தாய்க்கு தொடக்கத்தில் இது உடன்பாடில்லை என்றாலும், சிறிதுநாளில் மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். […]

Read more

சாத்தனார் அருளிய மணிமேகலை

சாத்தனார் அருளிய மணிமேகலை, வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களம் மூன்று காப்பியங்கள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன. வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. முழுமையாகக் கிடைத்த காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலையைக் கதை வடிவில் எழுதியுள்ளார். நூலாசிரியர் 30 காதைகளைக் கொண்ட இக்காப்பியத்தை ஒவ்வொரு காதைக்கும் பல கிளை தலைப்புகளுடன் எளிய மொழிநடையில் கதையாக எழுதியிருப்பது இன்றைய தலைமுறை வாசகர்களையும் வாசிக்கத் தூண்டும் நல் முயற்சி. நன்றி: தி […]

Read more

அறுபத்து மூவர்

அறுபத்து மூவர், நாயன்மார்கள் வரலாறு, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 450ரூ. சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட வரலாற்று காப்பியம் பெரிய புராணம். இது, சிவபெருமானின் அடியார்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த நாயன்மார்கள் ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். பெரியபுராணம் 4,286 பாடல்களைக் கொண்டதாகும். பொருள் பொதிந்த சொற்களைக் கொண்டு இந்தப் பாடல்களை இயற்றியுள்ளார் சேக்கிழார். 63 நாயன்மார்களின் வரலாற்றை அனைவரும் உணர்ந்து ரசிக்கும் எளிய இனிய நடையில் எழுதியுள்ளார், ஈரோடு தங்க விசுவநாதன். புத்தகம் சிறந்த கட்டமைப்புடனும், படங்களுடனும் வெளிவந்துள்ளது. […]

Read more

நின்று ஒளிரும் சுடர்கள்

நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 130ரூ. “தமிழ்த் திரையுலகில் நின்று ஒளிவீசிய தனிச்சுடர் எஸ்.வி.ரங்காராவ்; “ஏழை படும் பாடு‘’ படத்தில் கதாநாயகனாக, “கப்பலோட்டிய தமிழன்’‘ படத்தில் சிவாஜியின் தந்தையாக, மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த சித்தூர் வி.நாகையா; நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என எல்லா வேடத்திலும் புத்தொளி பாய்ச்சிய டி.எஸ்.பாலையா; 18வயதிலேயே 60வயது முதியவராக நடித்துப் புகழ்பெற்ற வி.கே.ராமசாமி; பாரதியார் வேடத்தில் நடித்த எஸ்.வி.சுப்பையா; வாய்ஸ் மாடுலேஷனில் வாத்தியாராகத் திகழ்ந்த எம்.ஆர்.ராதா; இயல்பான நடிப்பில் […]

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள கர்மவீரர், அவரது வாழ்க்கையில் நடந்த 100 நிகழ்வுகளை நம் கண் முன் காட்டுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 06/11/2016.   —- நீயே உனக்கு நிகரானவன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட எம்.ஆர்.ராதா, தனிமனித வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதராகத் திகழ்ந்தார் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. திரை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிக மன்னன் பி.யு.சின்னப்பா, குணசித்ர நடிகர் டி.எஸ். பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். ஆர்.சி. சம்பத், முப்பெரும் நடிகர்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். சில பிழைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும். “சந்திரகாந்தா படத்தில், சுண்டூர் இளவரசன் வேடத்தில் கதாநாயகனாக பி.யு. சின்னப்பா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. சின்னப்பா ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்று […]

Read more
1 2 3 4 8