கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நல்லாசிரியர் சு.குப்புசாமி, குமரன் பதிப்பகம், விலை 70ரூ. ஆங்கிலேயர்க்கு அஞ்சி இந்திய மக்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நாளில், எவர்க்கும் அஞ்சாமல் கடலிலே சொந்தக் கலத்தினை ஓட்டிய வீரத் தமிழர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு. அவர் கப்பல் ஓட்டியதையும் செக்கிழுத்ததையும் மட்டுமே பாடமாகப் படித்தவர்களுக்கு ஆங்கிலேய அடக்குமுறையால் அவரும் அவரது குடும்பமும்பட்ட அத்தனை கஷ்டங்களையும் படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்த நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி, மெர்வின், குமரன் பதிப்பகம், விலை 70ரூ. நோய் வந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யும் நாம், நோயைவிடக் கொடியதான எதிர்மறை எண்ணங்களை அகற்ற எந்த முயற்சியும் செய்வதில்லை. அதைச் செய்தாலே வாழ்வில் வெற்றிகளும் வளர்ச்சியும் நிச்சயமாகும். அதற்கான வழியினை உலக அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலம் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்தவர். அவரால் அருளப்பெற்றது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலகண்டர், கண்ணப்பர், குலச்சிறையார், திருமூலர், காரைக்கால் அம்மையார் உள்பட 72 சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார், ஆதிரையார். அழகிய அட்டைப்படம், அருமையான வடிவமைப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பெரியபுராணக் கதைகள்

பெரியபுராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.150. சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று. சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் […]

Read more

வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

உங்கள் சத்யராஜ்

உங்கள் சத்யராஜ், சபீதா ஜோசப், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. சத்யராஜ் வாழ்க்கைப்பாதை நடிகர் சத்யராஜின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் “உங்கள் சத்யராஜ்”. சத்யராஜே தன்னைப் பற்றிய சுவையான சம்பவங்களைக் கூறுவதுபோல் இதை எழுதியுள்ளனர், பிரபல எழுத்தாளர் சபிதா ஜோசப். சத்யராஜ், ஜமீன்தார் வீட்டுப்பையன். ஆயினும் சினிமா நடிகராக ஆசைப்பட்டார். சோதனைகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்தார். தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவாஜிகணேசனின் ஆசை. ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. பெரியாராக நடித்தவர் சத்யராஜ்தான். இப்படி ஏராளமான சுவையான, […]

Read more

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1920 இல் பிறந்த நூலாசிரியர், தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை இந்நூலில் சொல்லியிருக்கிறார். நூலின் தலைப்புக்கேற்ப இந்நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. மிகச் சிறுவயதில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூலாசிரியர், ராஜாஜி, கல்கி ஆகியோரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர். பத்துவயதிருக்கும்போது காந்தியை நேரில் பார்த்து, காந்தி தந்த ஆப்பிளைச் சுவைத்தது, சத்தியமூர்த்தியின் அறிவுரையைக் கேட்டு கதர் அணிய ஆரம்பித்தது, 10 பேர் கலந்து கொண்ட […]

Read more

மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள், தமிழில் ஜா. தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 170ரூ. உலகின் சிறந்த திரைப்பட இயக்குனர்கள் 20 பேரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட நூல். அன்பையும், அறத்திணையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவர்கள் கட்டுப்பாடில்லாத கனவு காண்பவர்களாகவும் இருப்பதுடன், சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும், தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துவது இந்த நூலின் வெளிப்பாடாகும். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நலம் தரும் நாட்டு மருந்துகள், டாக்டர் கலைமதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. ஒவ்வொரு நோய்க்கும் என்ன மருந்து […]

Read more

லெனின்

லெனின், ஜீவபாரதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட லெனின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வரலாறு ஒரு தனி மனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது. லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜீவபாரதி. இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று […]

Read more

உழைப்போம் உயர்வோம்

உழைப்போம் உயர்வோம், மெர்வின், குமரன் பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. உழைப்பின் மேன்மையைச் சொல்லி, அதற்கு பல உதாரணங்கள் தந்ததுடன் அதன் வரலாற்று உண்மைகளை நெஞ்சில் பதியச் செய்துள்ளார் மெர்வின். நாமும் நாடும் முன்னேற்றம் காண உதவும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —– குட்டீஸ் கிச்சன், ஜெயஸ்ரீ சுரேஷ், விகடன் பிரசுரம், விலை 140ரூ. சின்னக் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரிப்பது பற்றி இந்த நூல் விவரிக்கிறது. பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகள். எனவே அனைவருக்கும் பயன்படக்கூடிய […]

Read more
1 2 3 4 5 9