கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான், வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், படிப்பதிலும், கேட்பதிலும் அலுக்காத விஷயமாக இன்றும் இருப்பது, காஞ்சிப் பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்த செய்திகள் என்று துணிந்து சொல்லலாம். அண்மைக் காலத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரைப் பற்றி, குறித்த அருமையான நுாலிது. காஞ்சிப் பெரியவாளுக்கு, 14 மொழிகள் தெரியும் என்றும் (பக். 8), காஞ்சி மடத்தின் தலைவராக, 87 ஆண்டுகள் இருந்துள்ளார். தன் எதிரில் திரைப்படப் பாடல் பாடிய சிறுமியைப் பாராட்டியதும் (பக். 25), உணவைத் தரையில் அமர்ந்து உண்ணுவது தான் […]

Read more

விடை தெரிந்த மர்மங்கள்,

விடை தெரிந்த மர்மங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. தோன்றி நாள் முதல் எத்தனை எத்தனையோ மர்மங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு சுன்று கொண்டிருக்கிறது இந்த உலகம். மறைந்து கிடக்கும் இந்த மர்மங்கள் பலவற்றுக்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அவற்றுள் விடை தெரிந்தவற்றின் தொகுப்பு. படிக்கப் படிக்க, மர்மக் கதையைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம் எட்டிப்பார்க்கிறது. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

நாட்டை உலுக்கிய ஊழல்கள்

நாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]

Read more

நல்ல நட்பு

நல்ல நட்பு, இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக்.160, விலை 145ரூ. ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம்

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம், இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக். 168, விலை145ரூ. பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது. இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி, பரத்வாஜ் ஸ்வாமிகள், சங்கர் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து நல்வழி காட்டுபவள். வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்பதை கூறுகிறது, இந்நூல். வேத தத்துவத்தை மிகவும் எளிமையாக்கி உலக மாந்தர்களுக்கு அளித்திருக்கிறது எனலாம். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ. தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்,   குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை. இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் […]

Read more
1 2 3 4 5 6 9